முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள் அவமதிப்பு செய்த கானா பாடகி இசைவாணி மற்றும் ப.ரஞ்சித் மீது பல காவல் நிலையத்தில் புகார்

"ஐ யம் சாரி ஐயப்பா.நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என கடந்த 2019 ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல் ஒன்று கிருஸ்தவ மதம் சார்ந்த பெண் பாடகி பாடிய நிலையில் தற்போது வரை அது


பல கோடிக்கணக்கான ஹிந்து மக்கள் வணங்கும் சபரிமலை ஐயப்பன் குறித்து கானா பாட்டை பாடியதை இதுவரை தடுக்கத் தவறிய நிலையில் பாடகி இசைவாணி என்று பெண் இவர் சென்னை இராயபுரம் பகுதியில் வசிக்கும் நபர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து மக்கள் அதிகம் விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்லும் காலமிது, அவ்வாறு இருக்க திட்டமிட்டு


ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக நீலம் பன்னாட்டு மையம் என்ற ஒரு அமைப்பு அந்த பாடகி பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமாக்களில் ஜாதிய அடிப்படையிலும் பொய்யான வரலாற்றுத் திரிபுகள் உருவாக்க ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு விரோதமுமாக பேசி வருபவர் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித். இவரது நீலம் பண்பாட்டு மையத்தில் ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசைக்குழு ஒன்றுள்ளது.



இதில் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட மாற்று மதம் சார்ந்த கானா பாடகர்களும் பாடல்களை பாடி வருகின்றனர்.இந்த நிலையில் முன்பு பிக்பாஸ் என்ற கலாச்சார சீரழிவுப் போட்டியில் பங்கேற்ற கானா பாடகி இசைவாணி என்பவர் 2019 ஆம் ஆண்டில் நடந்த இசை நிகழ்ச்சியில், 'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என ஒரு பாடலைப் பாடியிருந்தார். இந்தப் பாடலை இப்போது சிலர் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றியதால், சர்ச்சையாகிகிறது.

அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் 11 வயது முதல் 55 வயது வரை செல்வதில்லை. இதை விமர்சித்து அவர் பாடலை பாடியுள்ளார் கிறுஸ்துவ மதம் பின்பற்றும் பெண்ணான இசைவாணி, சிலுவை அணிந்த படி   இந்தியாவில் அதிகப் பெரும்பான்மையானோர் கொண்ட ஹிந்து மக்கள் வழிபடும் கடவுள் பற்றி பாடியது சரியா என்பதையும்,தனது மதத்தை விமர்சித்து அவர் அப்படி பாடுவாரா என்றும் ஹிந்து மதம் பற்றி மட்டும் எது வேண்டுமானாலும் பேசலாம், பாடலாம் என்று நினைத்து, மாற்று மதத்தினரை புண்படுத்துகிறார் என்பது அவர் பாடிய போது தெளிவாகவே தெரிந்தது இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இசைவாணி கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். அவர் வழிபடும் இயேசுவைப் புகழ்ந்து அவர் பாடல் பாடியுள்ளதோடு, மேடையில் நாங்கள் வழிபடும் கடவுள் சபரிமலை ஐயப்பனை இழிவுப்படுத்திப் பாடியுள்ளார்.


அவர் மீது உரிய சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பா ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்க அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.நடிகை கஸ்துாரி பேசிய விவகாரத்தில் விரட்டி தெலுங்கானா சென்று கைது செய்த தமிழ்நாடு காவல் துறை, இசைவாணி விவகாரத்தில் மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்? ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பா என ஹிந்து மதத்தின் முக்கிய தலைவர்கள் கண்டணம் தெரிவித்துள்ளார்கள்.

இது பற்றி சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன 

. நீலம் பண்பாட்டு மையம் சார்பில், ‛மார்க்கழியில் மக்களிசை’ (இதுவும் ஹிந்து வழிபாட்டு முறை குறித்து விமர்சனம் செய்த நிகழ்வு தான் )என்ற பெயரில் சமீபத்தில் நடந்து முடிந்த இசை நிகழ்ச்சியில் அவர் இந்தப் பாடலை மீண்டும் பாடினார். தற்போது சபரிமலைக்கு பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து வரும் காலம் என்பதால் இந்தப் பாடல் சர்ச்சையாகியுள்ளது.

அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆகம விதிப்படி பெண்கள் செல்லக் கூடாது. இது ஹிந்து மக்கள் பாரம்பரிய ஐதீகம் இதில் வேண்டுமென்றே ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட நபர்களால் சர்ச்சையாகும் நிலையில் அவர் அதனை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் இந்தப் பாடல் உள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஐயப்பன் ஆலயம் மற்றும் விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடனும் வரிகள் இருப்பதாக கூறப்படுகிறது 

இதுதொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பா பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் மீது சரியான நடவடிக்கை இல்லை எனில் சென்னை உயர்நீதிமன்றம் மூலம் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க அந்த அமைப்பு தயாராக உள்ளது. கானாபாடகி இசைவாணி மற்றும் ப.ரஞ்சித் மீதான இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


இதற்கிடையே தான் இசைவாணி சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் கணத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா பாடகி இசைவாணியின் செல்போனைத் தொடர்பு கொண்டு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து தான் இந்தப் பாதுகாப்பு மனுவும் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாநில ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆட்சியைப் பொறுத்தவரை எல்லாருக்கும் எல்லாம் என்று முதல்வர் ஆட்சி செய்கிறார். ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரை இழிவுப்படுத்துவதை நிச்சயம் முதல்வர் அனுமதிக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் சட்டம் ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை இந்த ஆட்சி எடுக்கும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவுப்படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலைத்தூக்க முடியாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.
கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்குமென பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி தெரிவித்தார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையில், மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மதுரை அண்ணாநகர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.


வழக்கறிஞர் வணங்காமுடி கூறுகையில், ''இசைவாணி மீது கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் புகார் அளித்து வருகிறோம். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதித்துறையை நாடுவோம். ஹிந்து மதக் கடவுள்களைத் திட்டமிட்டு கடவுள் மறுப்பாளர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர். இதை ஒரு சதியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தை , கட்சி சும்மா விடாது,'' என்றார். அதேபோல  கானாபாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மையம் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தனர்.   இந்தப் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், எங்கள் கட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...