முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெட்ராஸ் மாகாண கால ஒப்படைவு நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த சி.எஸ்.ஐ., திருச்சபை நிர்வாகிகள் மீது சி.பி.ஐ.வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் சுதந்திர காலத்திற்கு முன் இருந்த பிரித்தானிய அரசின் ஒப்படைவு நிலத்தை மோசடி செய்த சி.எஸ்.ஐ., மதுரை- ராமநாதபுரம் திருமண்டல சபை நிர்வாகிகள் சிலர் மீது சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் தேவசகாயம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மாநில அரசின் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குனர், மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், மதுரை மாநகர் காவல்துறை ஆணையர்,                          தல்லாகுளம் காவல் ஆய்வாளர்,

சர்ச் ஆஃப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் (சிஎஸ்ஐடிஏ),

சிஎஸ்ஐ மதுரை-ராம்நாடு மறைமாவட்டம், ஷ்ரேயன்ஸ் அறக்கட்டளை,

IIFL Realty Limited, சி.பெர்னாண்டாஸ் ரெத்தினராஜா., எல்.ஜான்சன்.,

மாநில நில நிர்வாக ஆணையர், ஆகியோரை எதிர் தரப்பினராகச் சேர்க்கப்பட்டு தாக்கல் செய்த பொதுநல வழக்கு. WP(MD)10037/2024 ன் படி 



மதுரை தல்லாகுளம் பகுதியில் 31.10 ஏக்கர் நிலத்தை 1912 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கிருஸ்தவ மிஷனரியின் 'அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர்ஸ் பார் பாரின் மிஷன்ஸ் (ABCFM) வசம் அப்போது நம் நாட்டை ஆட்சி செய்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி சார்ந்த மெட்ராஸ் மாகாண நிர்வாகத்தால் அனுபந்தம் விரைவு நிபந்தனைகளுடன் ஒப்படைவு செய்யப்பட்ட அந்த நிலத்தை தொண்டு நிறுவன நோக்கம் மற்றும் விதிமுறைகள் படி ஆதரவற்ற பெண்களுக்கான தொழில் மையம் அமைக்கப் பயன்படுத்த வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறி 



                        சி.எஸ்.ஐ., மதுரை- இராமநாதபுரம் திருமண்டலத்தின் ஆயர் நிர்வாகம் மூலம் மோசடியாக நிலம் வெளியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனையில் பெரிய தொகை முறைகேடுகள் நடந்துள்ளது. இந்தச்சட்டவிரோதமான  நடவடிக்கைக்கு பல அரசு உயர் அலுவலர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணை கோரி CBI,க்கு 2020 ஆம் ஆண்டில் நான் புகார் அனுப்பினேன். அதன் அடிப்படையில் அவர்கள் எனது மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த வழக்கில் பெரிய அளவில் மோசடிகள், சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளது. சர்ச்சிற்குச் சொந்தமான சொத்தினை அபகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்விக்கு உட்படுத்திய நபர்களின் குரலை அதன் நிர்வாகிகள் முடக்கியதால், சர்ச் குரலற்றதாகி விட்டது. சர்ச் உறுப்பினர் என்ற முறையில் மனுதாரர் மாநில காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சில காரணங்களால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. CBI க்கும் புகார் அனுப்பினார். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. அந்தச் சொத்தானது தற்போது வரை அரசின் சொத்தாகவே உள்ளது. அதை விற்க சர்ச் நிர்வாகத்திற்கு அதிகாரமில்லை.

முன்பு வீடுகளிலிருந்து தேவாலயங்களுக்கு நிதி சென்றது. தற்போது மனசாட்சியுள்ளவர்கள் சர்ச் நிர்வாகத்தின் நாற்காலியை அலங்கரிக்கவில்லை. பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராக சர்ச் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் நிர்வாகிகளால் மோசடி செய்யப்படுகின்றன. சொத்துக்களை பராமரிக்க பிஷப் மற்றும் பிற நிர்வாகிகள் கடமைப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, தற்போது இந்தியா முழுவதும், சர்ச் சொத்துக்கள் அதன் நிர்வாகிகளால் சரியாக நிர்வகிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சில மோசடிகள், தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலுள்ள சர்ச்சிற்கு சொந்தமான சொத்துக்கள் விற்கப்பட்டது பற்றி சாமுவேல்ராஜ் எழுதிய 'சிலுவையில் அறையப்பட்ட தலித் கிறிஸ்தவர்கள்' எனும் புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட ஜோசப் ஞானசீலன் முத்துராஜ் எழுதிய,'சர்ச்சுகளுக்கான கார்ப்பரேட் கவர்னன்ஸ்' தலைப்பில் சர்ச் நிர்வாகிகள் செய்த பல தவறான செயல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. உயர்ந்த நோக்கத்திற்காக​நிலம் ஒப்படைவு செய்யப்பட்டது. அந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தவில்லை. எதற்காக இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டது, சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன என்பது பற்றி திருச்சபையின் நிர்வாகிகள் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் அந்த நிலத்தை ஏதோ சுயநலத்திற்காக பயன் படுத்தினர். ஒவ்வொரு மதமும் தொண்டு செய்வதை நோக்கமாகக் கொண்டது. எங்கெல்லாம் அவல நிலை இருக்கிறதோ அங்கெல்லாம் கடவுளால் அனுப்பிய நபர்கள் வந்து தொண்டு செய்வார்கள் என்பது அனைத்து மதத்தினரின் நம்பிக்கை. அந்த நபர்கள் தற்போது தங்கள் சொந்த மதம், நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சி.எஸ்.ஐ.டி.ஏ., மற்றும் சி.எஸ்.ஐ., மதுரை-ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகிகள் நேர்மையற்ற நோக்கில் பல அரசு அலுவலர்களின் உடந்தையுடன் சுதந்திர காலத்திற்கு முன் இருந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாக அரசின் காலத்தில் கொடுத்த ஒப்படைவு நிலத்தை சட்டவிரோதமாக மூன்றாவது நபர்களுக்கு விற்றுள்ளனர். ரூபாய்.22 கோடி மதிப்பிலான சொத்திற்கு விதிகளை மீறி ரூபாய்.91 லட்சத்து 43 ஆயிரத்து 472 க்கு மட்டுமே ரொக்கமாக ரசீதை பெற்றுள்ளனர். மீதம் கணக்கில் வராத கருப்புப் பணம் கணக்கில் வரவில்லை எந்த வித உரிமையும் இல்லாமல் ரூபாய்.1 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 472க்கு அரசின் சொத்து சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது. உள்ளூர் காவல் துறையினர் விசாரணையில் ஆர்வம் செலுத்தவில்லை.குற்றச்சாட்டிற்கு தகுந்த முகாந்திரம் உள்ளது. மோசடி பரிவர்த்தனையில் தொடர்புடைய ஊழல் செய்த நபர்கள் மீது டில்லி சி.பி.ஐ., மற்றும் சென்னை சி.பி.ஐ., இணை இயக்குனர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். என  உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...