முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாறை வெடிப்புப் படக்காட்சிகள் படமாக்க வந்த படப்பிடிப்பு குழுவினரை சிறை பிடித்த மக்கள்

பாறை வெடிப்புப் படக்காட்சிகள் படமாக்க வந்த படப்பிடிப்பு குழுவினரை சிறை பிடித்த மக்கள்.


பொக்லைன், கிரேன், கம்ப்ரசர், கேரவன், சொகுசு பேருந்துகள், சிற்றூந்துகள் மற்றும் வெளிப்புறப் படப்பிடிப்பு வாகனங்கள், என 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமத்திற்கு வந்தன. அங்கு பாறைகளை வெடிவைத்து தகர்த்து வெடித்து சிதறும் வகையிலான சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்கு படப்பிடிப்புக் குழுவினர் தயாராகினர். அதற்காக வெடி பொருட்கள், மண்எண்ணெய் கேன்கள் கொண்டு வந்து, படக்குழுவினர் சில ஏற்பாடுகளை ஸ்பெஷல் எஃபெக்ட் செய்திருந்தனர் இதை அந்த வழியாக விவசாயப் பணிகளுக்காக சென்ற உள்ளூர் மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர் அதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நடந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் படப்பிடிப்புக் குழுவினரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும் அவர்களை பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. அப்போது படக்குழுவினர், மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்துவதாக தெரிவித்தனர்.

அதனை ஏற்க மறுத்த அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராம மக்கள், பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்பு ஸ்தலத்தில் பாறைகளுக்கு வெடிவைத்து தகர்ப்பது போல் படம் எடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியபடி இருந்தனர். இது குறித்து  ஒத்தக்கடை காவல் நிலையத்துக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த ஒரு கான்ஸ்டபிள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திரைப்படப் படப்பிடிப்புக் குழுவினரை மீட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். டங்ஸ்டன் சுரங்க பயம் உள்ள பிரச்சினையால் அரிட்டாபட்டி பகுதியில் பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி வரும் நிலையில், பதற்றமான நிலை இருந்து வருகிறது. தற்போது திரைப்படப் படப்பிடிப்பு எனக் கூறி வெடி பொருட்களுடன் பல்வேறு வாகனங்களில் குவிந்தது மேலும் அவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது



இது சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால், இயக்குனர்  முத்தையா படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்தார். கொம்பன் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, மதுரையில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு நடத்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், படப்பிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கொம்பன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், அடுத்து நடிகர் விஷால் நடிப்பில் மருது, நடிகர் சசிகுமார் நடிப்பில் கொடிவீரன், நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் தேவராட்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார்.


மேலும், விக்ரம் பிரபு நடிப்பில் அவர் இயக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சி. மூலம் ஒளிபரப்பானது. இதனையடுத்து தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ள முத்தையா, அடுத்ததாக நடிகர் அருள்நிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், மதுரை அரிட்டாபட்டியில் படப்பிடிப்பு நடத்த வந்த நிலையில் மக்களால் சிறைபிடிக்கப்பட்டனர். 

ஏற்கனவே அந்தப் பகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும், பாதுகாக்கப்பட்ட பல்லூயிர் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனிடையே, முத்தையா தனது படப்பிடிப்புக்காக அந்த பகுதியில், வெடி பொருட்கள், மற்றும் ராட்சத கிரேன்கள் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார்.

வெடிகுண்டு வெடிக்கும் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்க இருந்ததாக தகவல் வெளியாகியது. இதைப் பார்த்த பொதுமக்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக தான் இவர்கள் வந்திருக்கிறார்கள் என எண்ணி, எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்புக்குழுவினரை சிறைபிடித்த பொதுமக்கள், இந்த இடத்தில் திரைப்படப் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும், உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்ததை தொடர்ந்து, படக்குழுவினர் விடுவிக்கப்பட்ட நிலையில், மக்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்த இயக்குனர் முத்தையா, அங்கு நடக்க இருந்த படபடிபபிடிப்பை ரத்து செய்து, திரும்பினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...