சென்னை முகப்பேரில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக சமீபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 10 நபர்களை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கைது செய்தனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா எடுத்து வந்து இங்குள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செயலி மூலம் விற்பனை செய்தது தெரிய வரவே அவர்களுடைய செல்போனில் பதிவான எண்களை வைத்து கஞ்சா விற்பனையில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்திய போது நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் (வயது 26) என்பவனது செல்போன் நம்பர் அதில் இருந்ததை யடுத்து அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து நேற்று ஒருநாள் விசாரணை செய்ததில்
அந்த செல்போனிலிருந்து அவனின் பேசிய எண்ணின் அடிப்படையில் இன்னும் 3 பேரை கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டது தெரிந்தது. அதனால் அலிகான் துக்ளக் உள்ளிட்ட நான்கு நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதையடுத்து அலிகான் துக்ளக் உட்படக் கைதான 7 பேரும் அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிபதி ஆணையிட்டார்.
துக்ளக் அலிகான் நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை காவல்துறையினர் கண்டறிந்து கஞ்சா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா, ஓஜி ஆகிய போதைப்பொருட்களை எடை போட்டு 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தொடர்பாக ஆதாரங்கள் சிக்கியுள்ளது. ஜிடேன் என்ற நபர் மூலம் துக்ளக் அலிகானுக்கு கஞ்சா வியாபாரிகளின் தொடர்பு வந்ததாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
கருத்துகள்