முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவண்ணாமலையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு

பகழ்பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸதலமான ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் ஆலய ஸ்தலத்தில்


தேரடி வீதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் 1872 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மெ.க அன்னதான சத்திரத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா முடிந்த நிலையில் ஓயா மடம் உள்ளிட்ட பல அன்னதானம் செய்து வரும் சத்திரங்கள் இது சாவடிகள் இணைந்தது,  இப்படியான  மடங்களில் சோழநாட்டில் மகுட வைசியர்கள் பின்னர் பாண்டிய நாட்டில் 1317 ஆம் ஆண்டில் மாலிக்காபூர் படை எடுப்புக்கு பின்னர் குடிபுகுந்த பின்னர் ஆலயங்கள் ஒன்பதைக் கொண்ட காவிரிப்பூம்பட்டினம் பிரிவு நகரத்தார்கள் ஆன்மீக திருப்பணிகள் பல செய்த செம்மல் திருப்பணியாளர் கள் சுதந்திர காலத்திற்கு பிறகு வந்த அறநிலையத் துறையின் முழு நிர்வாகத்திற்கு முன்னாள் இவர்கள் வழிநடத்திய ஆலயங்கள் ஏராளம்        நினைத்தாலே மோட்சம் தரும் ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்தலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

அவர்கள் கோரிக்கை வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது அரசாங்கத்தின் ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஊழல் நிறைந்த செயல்பாடு தான் காரணம், அன்னதானமும், திருப்பணிகளும்  கால காலமாக செய்துவரும் இவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையை எந்த அருகதையும் இல்லாமல் சம்பந்தமில்லாத பலரும் பெறுவது வேடிக்கை அது இந்த ஆண்டு போல வாடிக்கை ஆகாது தடுக்க வேண்டிய பொறுப்பு ஹிந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்கள் செய்ய வேண்டும் என்பதே.  பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் தொண்டை மண்டல முதலியார் சமூகம் சார்ந்த குன்றத்தூரில் பிறந்தவர் அவர் நகரத்தார் பெருமக்கள் குறித்து அப்பாடலிது 


"சோறு மணக்கு மடங்களெலாந்

 தூய்மை மணக்குஞ் சிந்தையெல்லாம்

 சுவண மணக்கு மாடையெலாந்

  தொங்கல் மணக்குந் தோள்களெல்லாஞ்

சேறு மணக்குங் கழனியெலாஞ்

செல்வ மணக்கு மாடமெலாந்

 தென்றல் மணக்கு மேடையெலாந்

 தெய்வ மணக்குஞ் செய்யுளெலாம்

நீறு மணக்கு நெற்றியெலாம்

  நெய்யே மணக்கும் காய்கறிகளெலாம்

  நெருப்பு மணக்கும் யாககுண்டமெலாம்

  நேய மணக்கும் வீதியெலாம்

சாறு மணக்கும் செயல்பாடு நிறைந்த 

 சைவ நெறி வளர்ந்த நகரத்தார்" 

உள்ள மடங்களிலெல்லாம் எப்போதும் சோற்று மணமே வீசும்; அவ்வூரில் உள்ள மாந்தர்தன் சிந்தையில் எல்லாம் தூய்மையே நிரம்பியிருக்கும்; அவர்கள் அணிந்துள்ள ஆடைகளில் பொன்னே மிகுந்திருக்கும்; அவர்கள் தோள்களிலெல்லாம் மலர் மாலைகளின் நறுமணமே மிகுந்திருக்கும்; 


அவ்வூரில் உள்ள வயல்களிலெல்லாம் சேற்று மணமே வீசும்; அவ்வூர் மாளிகைகளிலெல்லாம் செல்வமே நிரம்பியிருக்கும்; அவ்வூர் நந்தவனங்களில் உள்ள மேடைகளிலெல்லாம் தென்றல் வீசிக்கொண்டே இருக்கும்; அவ்வூர் புலவர்கள் பாடும் செய்யுட்களிலெல்லாம் தெய்வமணமே வீசும்;   அவ்வூர் மனிதர்களின் நெற்றியெல்லாம் திருநீற்றின் மணமே வீசும்; அவர்கள் உண்ணும் காய்கறிகளிலெல்லாம் நெய்யின் மணமே வீசும்; அங்கு நிகழ்த்தப்படும் வேள்விக் குண்டங்களிலெல்லாம் எஞ்ஞான்றும் நெருப்பு கனன்றுகொண்டே இருக்கும்; அவ்வூர் வீதிகளிலெல்லாம் அன்பே மணக்கும் அதன் சாட்சியாக              உலகின் மிகப்பெரிய ரிஷப வாகனம் ஸ்ரீ அண்ணாமலையாரின் வெள்ளி ரிஷப வாகனம் 


இது சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் கோட்டையூர் மெ.க செட்டியார் குடும்பத்தினரால் செய்து வைக்கப்பட்டது.(இந்த கோட்டையூர் மெ.க குடும்பத்தில் பிறந்தவர் தான் வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார்) 

100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரத்தார் பராமரிப்பில் இருந்து வந்த ஆலயத்தில் கார்த்திகைத் திருநாள் உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. வெளியூர் மக்கள் முப்பதாயிரமென்று இரயில்வே கணக்கால் தெரிகிறது. இவ்வாண்டிலும் அவ்வளவுக்குக் குறையாதென்றே கூறலாம். கால்நடையாக வந்திருக்கிற மக்கள் முப்பதாயிரத்துக்கு மேலிருக்கும். நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆண் பெண் மக்கள்  ஆயிரம் பேருக்கு மேலிருக்கலாம். இந்த நிலையில் சத்திரங்களில் சோறு மணக்கும் மடங்களெலாம்" என்ற மேலேயுள்ள பாடல் பொருத்தமானது ராவ்பகதூர் ஸ்ரீமான் பெ.க.அ. சித. ஜாகையில் நடைபெறும் விருந்தே முக்கியமானதாகும். நகரத்தாரின் மடமாகிய ஓயா மடத்தில் ஏழாம் திருவிழா முதல் மகேசுவர பூஜை நடைபெறுகின்றது. ஜாதி சமய பேதமின்றி வந்தவர்கட்கெல்லாம் உணவளிக்கப்படுகிறது. நகரத்தாரின் பேருதவி பெற்று நடைபெறும் அறுபத்து மூவர் மடம், பவளக் குன்று மடம் முதலிய இடங்களிலும் உணவளிக்கப்படுகின்றது. கடியாபட்டி தீ.சொ நகரத்தார் குடும்பம் பெருமக்கள் கட்டிய மண்டபம் ஆலயத்தில் உண்டு இப்படி பல  திருப்பணிகள் ஆனால் ஆலயத்தில் அனுமதி அட்டை ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் தவிர்த்து அரசுப் பணியாளர்கள் குடுமபத்தினர்களின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். அதுவும் ஊழல் தான். ஆலயத்தில் திருப்பணியாளர்களுக்கு மரியாதை செய்வதை ஊழல் காரணமாக ஸ்கீம் போடப்பட்ட கோவில்களில் கூட அறநிலையத் துறை செய்வதில்லை காரணம் வருவாய் தனிநபர்கள் லாபம் ஒன்று தான் வேறில்லை இதை அக்னி வடிவாக வந்த சிவன் அண்ணாமலையார் தண்டித்துத் தடுத்தால் மட்டுமே ஊழல் வாதிகள் திருந்துவார்கள்.ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் விழாவில் மட்டுமே பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் ஆனால் தர்மபுரம் ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், பாதரக்குடி ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், செங்கோல் ஆதீனம், நாச்சியார் கோவில் ஆதீனம், துழாவூர் ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகப் பெருமக்கள் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு திருவண்ணாமலை வருகை தந்த நிலையில்  தமிழ்நாட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் பல்வேறு புராதனக் கோவில்களில் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நித்தியபடி அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு நகரத்தாரின் திருப்பணிகளின் பங்கு அதிகமாகவே உள்ளது. உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான வெள்ளி ரிஷபம் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்களால் ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலுக்கு உபயமளிக்கப்பட்டது. தேரடி வீதியிலுள்ள மெ.க அன்ன சத்திரத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் 150 ஆண்டுகளாக தொடர்ந்து இன்று வரை தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இந்தியாவில் இராமேஸ்வரம் முதல் காசி வரை பெரும்பாலான புனித ஸ்தலங்களில் நகரத்தார் பெருமக்களால் அன்னதானம் சிறப்பாக நடந்து வரும் நிலையில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் திருவண்ணாமலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியதில்,

அவர்கள் தெரிவித்துள்ள தகவல்:-

"ஸ்ரீ அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தினர் நகரத்தார்களுக்குமுறையாக கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு உள்ளே செல்லும் அனுமதி அட்டை இந்த ஆண்டு கொடுக்கவில்லை. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலுக்கு வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம், காமதேனு கற்பகவிருட்சம், பிச்சாண்டவர் வாகனம் மற்றும் பிரகார உற்சவ மண்டபங்கள் உள்ளிட்டவை மற்றும் ஏராளமான வாகனங்களும், நகைகளும் கோவிலுக்கு பக்தியுடன் கொடுத்துள்ளோம். கோடிக்கணக்கில் நாங்கள் ஸ்ரீ அண்ணாமலையாருக்கு செய்திருந்தாலும் நாட்டுக்கொட்டை நகரத்தாருக்கு உரிய அங்கீகாரத்தை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோவில் நிர்வாகம் தருவதில்லை. தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும் நாங்கள் வைக்கும் கோரிக்கை, தீபத் திருவிழா அன்று 100 நகரத்தார் குடும்பங்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு தீப திருவிழாவின் போது 1000 அனுமதி அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...