முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் துரைமுருகன் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்,


மகன் வேலூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த்  வீட்டில் நடத்த அமலாக்கத்துறை சோதனை


இன்று காலையில் அமலாக்கத்துறை அலுவலர்கள் வந்திருந்தனர். ஆனால் துரைமுருகன், கதிர் ஆனந்த் யாரும் வீட்டில் இல்லாததால் 7 மணி நேரமாக சோதனை செய்யமுடியாமல் காத்திருந்த நிலையில் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை செய்ய அனுமதி அளித்த நிலையில், சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத்துறை அலுவலர்களை திமுகவினர் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.  அதேபோல்  துரைமுருகனின் வேண்டிய நபராகக் கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டில்

அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் நடத்திய சோதனையில்  திமுகவினர் வட்டாரத்தில் சிறிது நேரத்தில் வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு காரில் வந்த அமலாக்கத்துறை அலுவலர்கள் அங்கும் சோதனை நடத்தச் சென்றனர். துரைமுருகன் சென்னையிலுள்ள நிலையில், அவரது மகன் கதிர் ஆனந்த் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டதனால், சோதனை நடத்த வந்த அலுவலர்கள் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை இருந்தது.

துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்துவதாக செய்தி வெளியான நிலையில், திமுகவினர் அங்கு குவிந்தனர். துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இருவருமே வீட்டில் இல்லாததால், அமலாக்கத்துறையின் அலுவலர்கள் சோதனை நடத்துவது தாமதமானது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தைத் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறையின் அலுவலர்கள் பேசினர்.    சோதனை செய்ய 5 மணி நேரமாக காத்திருந்த நிலையில் இமெயில் மூலம் சோதனை நடத்த ஒப்புதல் தெரிவித்து கதிர் ஆனந்த் மின்னஞ்சல் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த மின்னஞ்சலில் நாடாளுமன்ற உறுப்பினர் தரப்பில் யார் யார் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதில் காட்பாடி வடக்குப்பகுதி செயலாளர் சுனில் குமார் உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நடைமுறைகள் காரணமாக சோதனை தொடங்குவதற்கு கால தாமதம் ஆனது.பின்னர் சுமார் 7 மணி நேர தாமதத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை தொடங்கியுள்ளனர். சோதனை தொடங்கச் சென்ற அலுவலர்களிடம் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என திமுகவினர் சோதனை செய்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் பர்ஸ் உள்ளிட்டவற்றை திமுகவினர் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர். பெண் அலுவலர்கள் வைத்திருந்த ஹேண்ட்பேக்குகள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் திமுகவினர் சோதனை செய்து பார்த்தனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது
மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்த கருத்து "CBI ஒரு வழக்கை விசாரித்தால் குற்றச்சாட்டுக்குரியவரைக் கைது செய்வதற்கு நீதிபதியின் ஒப்புதல் தேவை.  வருமான வரித்துறையாக இருந்தால் மட்டும் வாரண்ட் போடுவதற்கு முன் அந்தத் துறையின் உயர் அலுவலரிடம் ஒப்புதலைப் பெற வேண்டும். அமலாக்கத்துறைக்கு அந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.

முன்பே ஒரு வழக்குப் பதியப்பட்டிருந்தால்தான் ED தான் அந்த வழக்கைக் எடுக்கும். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை என்றால் கூட அதற்கென ஒரு உச்சவரம்பு உள்ளது. அதற்கு மேல் போனால் தான் ED விசாரணையைக் எடுக்கும்". என்றார் 
2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் 11 கோடி ரூபாய் பணம் பிடிபட்டதற்காக இந்தச் சோதனையா? இல்லை எனில் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்கெனவே ED ஒரு விசாரணையை நடத்ததகிறது. அதற்காகப் பல சோதனைகள் நடந்தன. அதற்கு நீதிமன்றத்தில் தடையையும் முன்பே பெற்றனர். அதை ED உடைத்தது. அதன் தொடர்ச்சி தான் இப்போது அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED சோதனை நடத்தியது.
ஏனென்றால் தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்தது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் தான் அதில் வழக்குத் தொடர முடியும். அதற்குள் ED வருவதற்கு வாய்ப்பில்லை. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை என்றால் தான் ED  நுழையும். ஏனென்றால் இதே போல் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தரப்பில் தேர்தல் நேரத்தில் சில கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்குள் ED வரவில்லையே? ஆகவே, இது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் ஆவணங்களைத் தேடித்தான் சோதனை நடந்திருக்கும்" என்கிறார். சட்டம் படித்த அந்தப் பத்திரிகையாளர் 
இந்த சோதனை தொடர்பாக தனக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. எந்தத் துறை சார்ந்த அலுவலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். ஆனால், சட்டப்படி சோதனைக்கு வரும் அலுவலர்கள் தாங்கள் எந்த இலாக்காவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கொடுத்த பிறகு தான் நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்கிறார்கள் இந்த மாதிரியான வழக்குகளில் அனுபவம் பெற்ற முன்னாள் அலுவலர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...