முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் துரைமுருகன் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்,


மகன் வேலூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த்  வீட்டில் நடத்த அமலாக்கத்துறை சோதனை


இன்று காலையில் அமலாக்கத்துறை அலுவலர்கள் வந்திருந்தனர். ஆனால் துரைமுருகன், கதிர் ஆனந்த் யாரும் வீட்டில் இல்லாததால் 7 மணி நேரமாக சோதனை செய்யமுடியாமல் காத்திருந்த நிலையில் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை செய்ய அனுமதி அளித்த நிலையில், சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத்துறை அலுவலர்களை திமுகவினர் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.  அதேபோல்  துரைமுருகனின் வேண்டிய நபராகக் கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டில்

அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் நடத்திய சோதனையில்  திமுகவினர் வட்டாரத்தில் சிறிது நேரத்தில் வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு காரில் வந்த அமலாக்கத்துறை அலுவலர்கள் அங்கும் சோதனை நடத்தச் சென்றனர். துரைமுருகன் சென்னையிலுள்ள நிலையில், அவரது மகன் கதிர் ஆனந்த் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டதனால், சோதனை நடத்த வந்த அலுவலர்கள் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை இருந்தது.

துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்துவதாக செய்தி வெளியான நிலையில், திமுகவினர் அங்கு குவிந்தனர். துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இருவருமே வீட்டில் இல்லாததால், அமலாக்கத்துறையின் அலுவலர்கள் சோதனை நடத்துவது தாமதமானது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தைத் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறையின் அலுவலர்கள் பேசினர்.    சோதனை செய்ய 5 மணி நேரமாக காத்திருந்த நிலையில் இமெயில் மூலம் சோதனை நடத்த ஒப்புதல் தெரிவித்து கதிர் ஆனந்த் மின்னஞ்சல் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த மின்னஞ்சலில் நாடாளுமன்ற உறுப்பினர் தரப்பில் யார் யார் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதில் காட்பாடி வடக்குப்பகுதி செயலாளர் சுனில் குமார் உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நடைமுறைகள் காரணமாக சோதனை தொடங்குவதற்கு கால தாமதம் ஆனது.பின்னர் சுமார் 7 மணி நேர தாமதத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை தொடங்கியுள்ளனர். சோதனை தொடங்கச் சென்ற அலுவலர்களிடம் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என திமுகவினர் சோதனை செய்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் பர்ஸ் உள்ளிட்டவற்றை திமுகவினர் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர். பெண் அலுவலர்கள் வைத்திருந்த ஹேண்ட்பேக்குகள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் திமுகவினர் சோதனை செய்து பார்த்தனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது
மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்த கருத்து "CBI ஒரு வழக்கை விசாரித்தால் குற்றச்சாட்டுக்குரியவரைக் கைது செய்வதற்கு நீதிபதியின் ஒப்புதல் தேவை.  வருமான வரித்துறையாக இருந்தால் மட்டும் வாரண்ட் போடுவதற்கு முன் அந்தத் துறையின் உயர் அலுவலரிடம் ஒப்புதலைப் பெற வேண்டும். அமலாக்கத்துறைக்கு அந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.

முன்பே ஒரு வழக்குப் பதியப்பட்டிருந்தால்தான் ED தான் அந்த வழக்கைக் எடுக்கும். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை என்றால் கூட அதற்கென ஒரு உச்சவரம்பு உள்ளது. அதற்கு மேல் போனால் தான் ED விசாரணையைக் எடுக்கும்". என்றார் 
2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் 11 கோடி ரூபாய் பணம் பிடிபட்டதற்காக இந்தச் சோதனையா? இல்லை எனில் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்கெனவே ED ஒரு விசாரணையை நடத்ததகிறது. அதற்காகப் பல சோதனைகள் நடந்தன. அதற்கு நீதிமன்றத்தில் தடையையும் முன்பே பெற்றனர். அதை ED உடைத்தது. அதன் தொடர்ச்சி தான் இப்போது அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED சோதனை நடத்தியது.
ஏனென்றால் தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்தது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் தான் அதில் வழக்குத் தொடர முடியும். அதற்குள் ED வருவதற்கு வாய்ப்பில்லை. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை என்றால் தான் ED  நுழையும். ஏனென்றால் இதே போல் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தரப்பில் தேர்தல் நேரத்தில் சில கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்குள் ED வரவில்லையே? ஆகவே, இது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் ஆவணங்களைத் தேடித்தான் சோதனை நடந்திருக்கும்" என்கிறார். சட்டம் படித்த அந்தப் பத்திரிகையாளர் 
இந்த சோதனை தொடர்பாக தனக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. எந்தத் துறை சார்ந்த அலுவலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். ஆனால், சட்டப்படி சோதனைக்கு வரும் அலுவலர்கள் தாங்கள் எந்த இலாக்காவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கொடுத்த பிறகு தான் நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்கிறார்கள் இந்த மாதிரியான வழக்குகளில் அனுபவம் பெற்ற முன்னாள் அலுவலர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...