முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமயம் தாலுகா கல்குவாரிகளில் கனிமவள அலுவலர்கள் கணக்கெடுப்பும் ஆய்வும்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் மலைக்குடிப்பட்டி கல் குவாரியில்  ஆறாயிரம் கியூபிக் மீட்டர் கற்களைக் கூடுதலாக ஊழல் செய்து வெட்டி எடுத்ததாக நடத்திய ஆய்வில் தகவல்.

மேற்கண்ட கல் குவாரிகளில் கனிமவள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கடந்த மூன்று நாட்களாக ஆய்வு மேற்கொண்ட

கணக்கீட்டுப் பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் ரகசியமாகச் சேமிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வெங்களூர் கிராம  ஜகுபர் அலி அ.தி.மு.க. பிரமுகர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், குறிப்பாக திருமயம் கல்குவாரியில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகப் புகாரளித்த

நிலையில் ஜகுபர் அலி ஜனவரி மாதம் 17- ஆம் தேதி தேதி காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக் கொலை தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர்களான இராசு, இராமையா உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததில் இராமையாவைத் தவிர மற்ற நால்வரும் கைது செய்யப்பட்டவர்களை திருமயம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அவர்களை பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் 

இராமையாவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் நிலையத்தில் அவர் சரணடைந்தார். இதனிடையில்  திருமயம் துளையானூர், மலைக்குடிபட்டி பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் கனிமவள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் மூன்று நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்

அனைத்து கல் குவாரிகளும் உரிய அனுமதியோடு இயங்குகின்றதா?, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், நேரடியாகவும், ட்ரோன் மூலமாகவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு மற்றும் அளவிடும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டை கனிம வளத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.

அதில் பல இது வரை நடந்த திருட்டு மற்றும் ஊழல் குறித்து தகவல்கள் வெளியாகியது. ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் குவாரி குத்தகைதாரர் இராசு மற்றும் இராமையாவுக்குச் சொந்த மான குவாரிகளின் ஒப்பந்தக் காலம் 2023-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் அந்தக் குவாரிகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்களை சில அலுவலர்கள் உதவியுடன் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு பக்கமும் ஒரு மீட்டர் நீளமுள்ள கன சதுரத்தின் அளவு ஒரு கியூபிக் மீட்டர் ஆகும். அந்த வகையில்  ஆறாயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் கூடுதலாக வெட்டி எடுக்கப்பட்டது அலுவலர்கள் சோதனையில் தெரிந்தது.

மேலும் கணக்கீட்டுப் பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் மேல் கனிமவளத்துறை இயக்குனர் ஆய்வு செய்து, அதன் பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை அலுவலர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இராமையாவுக்கு ரூபாய்.6 கோடியே 70 லட்சம் ரூபாய் அபராதமும், இராசுக்கு ரூபாய்.12 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர் என்பதால் அவர் அலுவலர்கள் உதவியுடன் திருடிய கனிமங்கள் அளவு என்பது அதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...