புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் மலைக்குடிப்பட்டி கல் குவாரியில் ஆறாயிரம் கியூபிக் மீட்டர் கற்களைக் கூடுதலாக ஊழல் செய்து வெட்டி எடுத்ததாக நடத்திய ஆய்வில் தகவல்.
மேற்கண்ட கல் குவாரிகளில் கனிமவள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கடந்த மூன்று நாட்களாக ஆய்வு மேற்கொண்ட
கணக்கீட்டுப் பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் ரகசியமாகச் சேமிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வெங்களூர் கிராம ஜகுபர் அலி அ.தி.மு.க. பிரமுகர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், குறிப்பாக திருமயம் கல்குவாரியில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகப் புகாரளித்த
நிலையில் ஜகுபர் அலி ஜனவரி மாதம் 17- ஆம் தேதி தேதி காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக் கொலை தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர்களான இராசு, இராமையா உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததில் இராமையாவைத் தவிர மற்ற நால்வரும் கைது செய்யப்பட்டவர்களை திருமயம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அவர்களை பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில்
இராமையாவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் நிலையத்தில் அவர் சரணடைந்தார். இதனிடையில் திருமயம் துளையானூர், மலைக்குடிபட்டி பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் கனிமவள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் மூன்று நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்
அனைத்து கல் குவாரிகளும் உரிய அனுமதியோடு இயங்குகின்றதா?, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், நேரடியாகவும், ட்ரோன் மூலமாகவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு மற்றும் அளவிடும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டை கனிம வளத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.
அதில் பல இது வரை நடந்த திருட்டு மற்றும் ஊழல் குறித்து தகவல்கள் வெளியாகியது. ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் குவாரி குத்தகைதாரர் இராசு மற்றும் இராமையாவுக்குச் சொந்த மான குவாரிகளின் ஒப்பந்தக் காலம் 2023-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் அந்தக் குவாரிகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்களை சில அலுவலர்கள் உதவியுடன் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு பக்கமும் ஒரு மீட்டர் நீளமுள்ள கன சதுரத்தின் அளவு ஒரு கியூபிக் மீட்டர் ஆகும். அந்த வகையில் ஆறாயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் கூடுதலாக வெட்டி எடுக்கப்பட்டது அலுவலர்கள் சோதனையில் தெரிந்தது.
மேலும் கணக்கீட்டுப் பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் மேல் கனிமவளத்துறை இயக்குனர் ஆய்வு செய்து, அதன் பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை அலுவலர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இராமையாவுக்கு ரூபாய்.6 கோடியே 70 லட்சம் ரூபாய் அபராதமும், இராசுக்கு ரூபாய்.12 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர் என்பதால் அவர் அலுவலர்கள் உதவியுடன் திருடிய கனிமங்கள் அளவு என்பது அதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்