ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் குறித்தும்
சட்ட மன்றப் பேரவையின் மசோதாக்கள், துணை வேந்தர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் ஆகிய விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.
நடந்த விசாரணையில், அரசியலமைப்புச் சட்டத்தின் படி சட்ட மன்றப் பேரவையில் இரண்டாம் முறை இயற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூலம் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், முதல் முறையாக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கவும் ஆளுநர் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் முடியும். ஆனால், மீண்டும் நிறைவேற்றப்பட்டு கிடைக்கப் பெறும் மசோதாககளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியாதென்றும் தமிழ்நாடு அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டததையடுத்து நீதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல வினாக்களை முன்வைத்தனா். அதில் தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால் அதற்கான காரணம் என்ன?. ஆளுநர் அப்படி ஏன் செய்ய வேண்டும். அது என்னவென்று ஆளுநர் தரப்பில் கூறப்படவில்லை என்றால் தமிழ்நாடு அரசுக்கு எப்படி அதுபற்றி தெரியவரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.உச்சநீதிமன்றம், நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்திய அட்டர்னி ஜெனரலிடம் சில வினாக்கள் எழுப்பிய பின்னர் விடை கேட்டனர்.
அதில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? ஆளுநருக்கா அல்லது மாநில அரசுக்கா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கருத்துகள்