திருப்பூர் மின் வழித்தடம் மாற்றியமைக்க, 2,700 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரியத்தின் இளநிலை மின் பொறியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், வடுகபாளையம் வசிக்கும் பச்சையப்பன், (வயது 50).
தனக்குச் சொந்தமான கட்டடத்தை விரிவாக்கம் செய்வதற்கு வீட்டின் மேல் சென்ற மின்கம்பிகளை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நினைத்து அவரது நண்பர் குமார், (வயது 52) என்பவரிடம் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், குடிமங்கலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய இளநிலை பொறியாளராகப் பணியாற்றிய பன்னீர்செல்வம், (வயது 66) என்பவரிடம், அதுதொடர்பாக குமார் தெரிவித்தார். அதற்கு, 2,700 ரூபாயை லஞ்சமாகப் பன்னீர்செல்வம் கேட்டார். அதை புகார் செய்த நிலையில்
லஞ்சப் பணத்தை குமாரிடம் பெற்ற போது பன்னீர்செல்வத்தை திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி செல்லதுரை, லஞ்சம் வாங்கிய பன்னீர்செல்வத்துக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜாரானார்.
கருத்துகள்