செங்கல்பட்டு மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலர் கைது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த அமித் குமார் என்பவருடைய பூர்விகச் சொத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பித்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் கிராம நிர்வாக அலுவலர் சுதா என்பவர்
அமித்குமாரிடம் 8,000 ரூபாய் தனக்கு லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார்.லஞ்சம் தர விருப்பமில்லாத அமித்குமார் செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில், அவர்கள் ஆலோசனை படி பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய 8,000 ரூபாய் நோட்டுகளை அமித்குமார் அரசு சாட்சி முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் சுதாவை பணம் பெற்ற கையுடன் பிடித்தனர்.
தொடர்ந்து அவரைக் கைது செய்து விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
கருத்துகள்