சொத்துக்கள், பணம் கொடுக்கல் வாங்கல்
தொடர்பான சிவில் வழக்குகளில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை
அமல்படுத்தக் கோரும் (EP) விசாரணை கோரி தாக்கல் செய்யப்படும். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், சொத்துக்கள், வாகனங்கள் ஜப்தி செய்யப்படும். வழக்குகளில் தொடர்புடைய சொத்துக்களை மீட்டு சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும். இந்த EP. மனுவின் கீழ் நீண்ட காலமாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றவர்கள், அதன் பயனை அடைய முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவையிலுள்ள அனைத்து EP மனுக்களை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று அனைத்து கீழ் நீதிமன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதில், ''பல்வேறு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து EP மனுக்களையும் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தவறினால், உயர் நீதிமன்றத்தின் நிர்வாகத் தரப்புக்கு, சம்பந்தப்பட்ட நீதிபதி பதிலளிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து நீதிபதிகளும் கவனத்துடன் தீவிரமாக பின்பற்றவேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்