"மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர், ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி என்று எல்லாத்
தடைகளையும் தாண்டி சாதனை படைத்து வருகிறது? திமுக அரசு!" - என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தெரிவித்த கருத்துக்கு பாஜகவின் மாநிலத் துணைத் தலைவரும் செய்தித்தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி
"நின்றால் ஊழல், அமர்ந்தால் லஞ்சம், நடந்தால் முறைகேடு, குதித்தால் குற்றம், திரும்பினால் தில்லு முல்லு என எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றிருந்தால், மத்திய அரசு, மேலே பாம்பாய் படமெடுக்கும், கீழே நரிகளாய் வேட்டையாடும், ஊழல் முதலைகளை அகழிகளை அமைத்து வீழ்த்தும், தடுப்புச்சுவர் அமைத்து தவறு செய்து ஓட எத்தனிக்கும் ஊழல் பெருச்சாளிகளை தடுக்கத் தான் செய்யும்".எனத் தெரிவித்துள்ளார்
இதில் கவணிக்க வேண்டிய தகவல் ஒன்று உள்ளது. கரடி கால்களைப் பிடித்து இறுக்கிட, மலைப் பாம்பு மரத்திலே சுற்றிக் கிடந்த நிலையில் வாய் திறந்து கழுத்தருகே அடைந்திட, கரும்புலி மேலே பாய, தொலைவிலிருந்து செந்நாய்கள் சீறிட, புதரருகே நின்றபடி நரிக் கூட்டம் இரத்தம் குடித்திடச் சமயம் பார்த்திருக்க, கழுகுகள் மேலே வட்டமிட்டபடி இருக்க, வளைந்த வாளைக் கரத்திலே ஏந்திய ஒரு வீரன், இந்நிலையினின்றும் தன்னை விடுவித்துக் கொள்ளப்போகும் காட்சியை மனக் கண்ணாலே பார்".
இது திமுக ஆட்சிக்கு வரும் முன் 1969 ஆம் ஆண்டுக்கு முன் காலஞ்சென்ற திமுக தலைவர் டாக்டர் சி.என்.அண்ணாதுரை சொன்னது
ஆட்சிக்கு வந்த பின்னும் , இன்றும் அதே மேலே பாம்பு கீழே கீரி முதல்வர்-ஸ்டாலின் என பேசுவது வேடிக்கை என அரசியல் விமர்சகர் கே.எஸ்.ஆர் தெரிவித்த கருத்து பேசுபொருள்,
"24 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இவர்கள் ஆட்சி,மத்தியில் 18 ஆண்டுகள் இவர்கள் கூட்டணியில் கட்சி மந்திரிகள்
இப்போதும் இப்படியே வரும் பேச்சுக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்