சூப்பர் பார்லிமெண்ட் போல நீதிபதிகள் செயல்படுவதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கருத்துக் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை தொடர்பான நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:-
ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட முடியுமா? ஜனாதிபதியை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல சுப்ரீம் கோர்ட்டு மாற்றி உள்ளது. சட்டம் இயற்றுவது, நிர்வாக பணிகளை செய்வது போன்ற நாடாளுமன்ற பணிகளை நீதிபதிகள் செய்கின்றனர். சூப்பர் பார்லிமெண்ட் போல நீதிபதிகள் செயல்படுகின்றனர்.ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை.என்றார்.
மசோதா தொடர்பான வழக்கில் ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் ஜெகதீப் தன்கர் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார். மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்திற்கு குடியரசு துணைத் தலைவர் வினா?
மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சட்டமாகிவிடும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்றம் செய்ய வேண்டிய வேலையை நம் நாட்டில் நீதிபதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் அமலில் உள்ள சட்டம் நீதிபதிகளுக்குப் பொருந்தாது என்று நினைக்கிறார்களோ?
இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 142 ஜனநாயகத்திற்கு எதிரான அணுஆயுத ஏவுகணையாக மாறிவிட்டது.
அண்மையில் டெல்லியில் கோடி கோடியாக பணம் சிக்கியது தொடர்பாக நீதிபதி மீது ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?
எந்த சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி மீதான புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் குழு அமைத்தது?
இந்திய அரசமைப்பைப் பொறுத்தவரை விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் குடியரசுத் தலைவரும், மாநில ஆளுநர்களும் தான். என குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்