முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போபாலில் லோக்மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாளில் பிரதமர் உரை

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோக்மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாளை முன்னிட்டு மகிளா சசக்திகரன் மகா சம்மேளனத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் போபாலில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் பெயர் நம்மைப் போற்றுதலால் நிரப்புகிறது. அவரது சிறந்த ஆளுமை பற்றிப் பேச வார்த்தைகள் போதாது: பிரதமர் தேவி அஹில்யாபாய் இந்தியாவின் பாரம்பரியத்தின் சிறந்த பாதுகாவலராக இருந்தார்: பிரதமர் மாதா அஹில்யாபாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பெண்கள் சக்தியின் விலைமதிப்பற்ற பங்களிப்பின் சின்னமாக இருக்கிறார்: பிரதமர் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை நமது அரசு வளர்ச்சியின் அச்சாக மாற்றுகிறது: பிரதமர் நமோ ட்ரோன் தீதி பிரச்சாரம் கிராமப்புற பெண்களை ஊக்குவித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது: பிரதமர் இன்று, நமது அனைத்து முக்கிய விண்வெளிப் பயணங்களிலும் ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்: பிரதமர் ஆபரேஷன் சிந்தூர் நமது பெண்கள் சக்தியின் வலிமையின் அடையாளமாகவும் மாறியுள்ளது: பிரத...

இந்திய இராணுவம் நடத்தும் அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் சோதனை

உருவகப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நிலைமைகளின் கீழ் அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் சோதனைகளை இந்திய இராணுவம் நடத்துகிறது. இந்திய இராணுவம் தற்போது நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் விரிவான திறன் மேம்பாட்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறது, இதில் போக்ரான் கள துப்பாக்கிச் சூடு தளங்கள், பாபினா கள துப்பாக்கிச் சூடு தளங்கள் மற்றும் ஜோஷிமத் ஆகியவை அடங்கும், மேலும் ஆக்ரா மற்றும் கோபால்பூரில் அர்ப்பணிப்புள்ள வான் பாதுகாப்பு உபகரண சோதனைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கள சோதனைகள் போர் நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகின்றன, அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கடுமையாக மதிப்பிடுவதற்கு மின்னணு போர் உருவகப்படுத்துதல்களை ஒருங்கிணைக்கின்றன. மே 27, 2025 அன்று, இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாபினா கள துப்பாக்கிச் சூடு தளங்களுக்குச் சென்று நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களை மதிப்பாய்வு செய்து அனைத்து பங்குதாரர்களுடனும் உரையாடினார். உள்நாட்டு திறன் மேம்பாட்டை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களின் ப...

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கலா அம்பில் புதிதாக கட்டப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட ESIC மருத்துவமனையைத் திறப்பு

டாக்டர் மன்சுக் மாண்டவியா, ஹிமாச்சலப் பிரதேசத்தின் கலா அம்பில் புதிதாக கட்டப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட ESIC மருத்துவமனையைத் திறந்து வைத்தார் “நாட்டின் உழைப்பாளிகளை உண்மையாக வணங்கி மதித்த முதல் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி” - டாக்டர் மண்டவியா “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பின்னால் உள்ள உண்மையான பலம் ஷ்ரம் சக்தி” என்கிறார் மத்திய அமைச்சர் அனைத்து ESIC மருத்துவமனைகளிலும் 200+ படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார், அங்கு 40% இடங்கள் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் வார்டுகளுக்கு ஒதுக்கப்படும். தொழிலாளர்களுக்கான சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா இன்று இமாச்சலப் பிரதேசத்தின் கலா அம்பில் புதிதாக கட்டப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட ஊழியர் மாநில காப்பீட்டுக் கழக (ESIC) மருத்துவமனையைத் திறந்து வைத்தார். 100 படுக்கைகள் வரை மேம்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை, இப்பகுதியில் ESI திட்டத்தின்...

பிரபலத் திரையுலக நடிகரும், பல்கலை வித்தகரும் நமது நட்பின் சகோதரர் நடிகர் ராஜேஷ் காலமானார்

பிரபலத் தென்னிந்தியத் திரையுலக நடிகரும்,  தமிழ்நாடு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவரும்     பல்கலை வித்தகரும்,  நமது நட்பின் சகோதரருமான  நடிகர் ராஜேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கிடைத்த நொடி முதல் மிகுந்த மனவேதனையளிக்கிறது. சின்னத்திரை, டப்பிங் கலைஞர் என பன்முகத்தன்மையுடன் கடந்த 47 ஆண்டுகள் கலைப்பயணத்தில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ராஜேஷ் அவர்களுடன் பலமுறை சந்திப்பு இருந்தாலும், இறுதியில் சந்திப்பு சென்னையில் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் சந்தித்த சந்திப்பு நெஞ்சில் நிழலாட அண்ணன் நடிகர் ராஜேஷ் இன்று நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி கேட்டு மனம் கனத்தது.   அவரது நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன. எழுபதைத் தாண்டினாலும் உள்ளத்தில் ஓர் இளமை, இனிமை அதுவே அண்ணன் ராஜேஸ்.   அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மூலம் கதையின் நாயகனாக  அறிமுகமான 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் கிராமத்து முகமும் உடல்வாகும் கொண்ட நடிகராக  மன்னார்குடியில் பிறந்த, காரைக்குடியில் படித்து...

மூன்று நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை

நீதிபதிகள் என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் மே மாதம் 26 ஆம் தேதி பரிந்துரை செய்தது.  முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றதால் உச்ச நீதிமன்றத்தில் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் உள்ள நிலையில். இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமனம் செய்யப் பரிந்துரை செய்தது. குஜராத் மாநிலத்தின்  நீதிபதி என்.வி.அஞ்சாரியா  தற்போது கர்நாடக மாநிலத்தின் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி  இராஜஸ்தானைச் சேர்ந்த நீதிபதி விஜய் பிஷ்னோய் தற்போது கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி  மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி அதுல் எஸ்.சந்துர்கர் தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி. அஞ்சாரியா ஆகஸ்ட் மாதம் 1988 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.ஷெலட்டின் கீழ் வழக்கறிஞர் பயிற்சி செய்யத் த...

மாநிலங்களவை திமுக கூட்டணி வேட்பாளர்களாக கமலஹாசன் உள்ளிட்ட நால்வர் அறிவிப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவைத்த் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படி மக்கள் நீதி மைய்யத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு  ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாட்டாளி மக்கள் கட்சியின்   அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் சந்திரசேகரன், மதிமுக சார்பில் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த சூழலில் தமிழ்நாட்டிலிருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆளும் திமுக நான்கு இடங்களுக்கும், அதிமுக இரண்டு இடங்களுக்கும் போட்டியிட உரிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் திமுக சார்பில் ஓரிடம் கூட்டணிக் கட்சியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று இடங்களுக்கும் திமுகவின் மூத்த வழக்கறிஞர் ...

டாஸ்மாக் வழக்கில் வழக்கறிஞர் இன்பதுரை கருத்து

டாஸ்மாக் ஊழல் வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை யினர் சோதனை நிகழ்வு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த  நிலையில் வழக்கைத் தொடுத்த டாஸ்மாக் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது புதிய சோதனையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் தடையாணையில் கூறியுள்ளதாக வழக்கறிஞர் இன்பத்துரை தகவல் தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது சில்லறை மதுபானங்கள் விற்பனையில் ஈடுபடுகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் பல விதமான மது வகைகள் விற்கப்படும் நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுப் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதோடு பில் மூலம் கணக்கில் காட்டாமல் தனியார் மதுபான உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடத்தியதாக புகார் கூறப்பட்டதையடுத்து  சென்னை, கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இட...

நகைக் கடன் குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் குறித்து நிதியமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்

நகைக் கடன் குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முறையீடு  அதில் கூறியிருப்பதாவது  "எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடன் அளவு குறைப்பு, நகை அடகு வைத்தாலும் வருமானத் தகுதி நிபந்தனை, பயன்பாட்டுச் சான்று என்ற பெயரால் கடன்தாரர் உரிமை பறிப்பு, ஒவ்வொரு முறை கடனுக்கும் புதிய கடன் தகுதி பரிசீலனை எனக் கட்டணச் சுமை, நகை உடைமைச் சான்று எனப் போகாத ஊருக்கு வழி, தங்க நாணயங்களுக்கு நிபந்தனை, கடன் தொகை நிர்ணய முறைமையில் கடன் விகிதத்தில் குறைப்பு, கடனை திருப்பி கட்டினாலும் ஏழு நாள் கழித்து நகை என இழுத்தடிப்பு. எளிய மக்களை, சிறு வணிகர்களை கழுத்தைப் பிடித்து கந்துவட்டிக்காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு கோரி மத்திய நிதி அமைச்சருக்கு  கடிதம் எழுதி தெரிவித்துள்ளதாகக் கூறினார்.  இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன் வழங்க புதிய நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை வித...