டாஸ்மாக் ஊழல் வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை யினர் சோதனை நிகழ்வு
விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் வழக்கைத் தொடுத்த டாஸ்மாக் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது புதிய சோதனையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் தடையாணையில் கூறியுள்ளதாக வழக்கறிஞர் இன்பத்துரை தகவல் தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது சில்லறை மதுபானங்கள் விற்பனையில் ஈடுபடுகிறது.
இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் பல விதமான மது வகைகள் விற்கப்படும் நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுப் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதோடு பில் மூலம் கணக்கில் காட்டாமல் தனியார் மதுபான உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடத்தியதாக புகார் கூறப்பட்டதையடுத்து சென்னை, கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் பகுதிகளில் சோதனை 8 ஆம் தேதி வரை நீடித்த நிலையில் சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி, டாஸ்மாக் சார்பில் அதில் பணி செய்த அலுவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் இ ஆ ப -வை அழைத்துச் சென்று 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ரத்தீஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் ரத்தீஷுக்கும் விசாகன் இ ஆ ப -வுக்குமிடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆவணங்களும்
அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.மேலும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் வந்த முறைகேடான பணத்தை ஆகாஷ் பாஸ்கரன் திரைப்படம் எடுக்க முதலீடு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால் மொத்த விசாரணையும் தடைபட்டது போல ஒரு பிம்பம் உருவாக்கப்படுவதாகவும், ஆனால் உண்மை அப்படியல்ல என விவரித்திருக்கிறார் அதிமுகவின் வழக்கறிஞர் இன்பதுரை. இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பதிவிட்டிருக்கும் அவர்," அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை தொடர்பான ஆணை அப்லோடு செய்யப்பட்டுள்ளது. வழக்கை தாக்கல் செய்த டாஸ்மாக் நிறுவனம் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது அமலாக்கத்துறை புதிய சோதனையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று மட்டும் தான் உச்ச நீதிமன்ற தடை ஆணை உள்ளது. தம்பிகள் டாஸ்மாக் ஊழியர்கள் அல்லவே? எனக் குறிப்பிட்டு இருக்கிறார்
pic.twitter.com/vypHg2Zg4J
I.S.INBADURAI (@IInbadurai) May 26, 2025 அதாவது அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியதாகவும் அந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தான் டாஸ்மாக் அலுவலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் அமலாக்கத்துறை அடுத்த கட்டமாக டாஸ்மாக் அலுவலர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறது.
இதன் காரணமாக ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் மீதான விசாரணைக்குத் தடை இல்லை எனக் கூறி இருக்கிறார். ஏற்கனவே ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் அமலாக்கத்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தத் தடையும் இல்லை என்கிறார். மேலும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த சினிமா படங்களின் நடித்தவர்களையும் விசாரிக்கலாம் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிய வந்திருக்கிறது. எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்