பிரபலத் தென்னிந்தியத் திரையுலக நடிகரும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவரும் பல்கலை வித்தகரும், நமது நட்பின் சகோதரருமான நடிகர் ராஜேஷ்
அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கிடைத்த நொடி முதல் மிகுந்த மனவேதனையளிக்கிறது.
சின்னத்திரை, டப்பிங் கலைஞர் என பன்முகத்தன்மையுடன் கடந்த 47 ஆண்டுகள் கலைப்பயணத்தில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ராஜேஷ் அவர்களுடன் பலமுறை சந்திப்பு இருந்தாலும்,
இறுதியில் சந்திப்பு சென்னையில் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் சந்தித்த சந்திப்பு நெஞ்சில் நிழலாட அண்ணன் நடிகர் ராஜேஷ் இன்று நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி கேட்டு மனம் கனத்தது.
அவரது நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன. எழுபதைத் தாண்டினாலும் உள்ளத்தில் ஓர் இளமை, இனிமை அதுவே அண்ணன் ராஜேஸ். அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மூலம் கதையின் நாயகனாக அறிமுகமான 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் கிராமத்து முகமும் உடல்வாகும் கொண்ட நடிகராக மன்னார்குடியில் பிறந்த, காரைக்குடியில் படித்து, சென்னை வாழ்க்கையைத் துவங்கிய அண்ணன் ராஜேஷ்.
அடுத்து, இயக்குனர் இமயம் கே.பாலசந்தரின் 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்தில் எதிர்மறைக் கதாநாயகனாக புதிய திசை நோக்கி பயணித்த ராஜேஷின் திரையுலக வாழ்க்கையில் மற்றுமொரு எதிர்மறை திரைப்படம் மைல் கல்லாக அமைந்த , 'மக்கள் என் பக்கம்'. திரைப்படத்தில் வில்லன் ராஜேஷ். கதாநாயகன் சத்யராஜ்.
மார்க்ஸியக் கொள்கை நேசித்த கம்யூனிஸ சிந்தனையாளர் என திரையுலகில் அடையாளப் படுத்தப்பட்டவர். ஆசிரியர் பணியிலிருந்து பின்னர் திரையுலகில் நுழைந்தவர், அண்ணன் ராஜேஷ்.
உலகளாவிய சிறந்த நூல்கள் சேமிப்பு காரணமாக அவருடைய நூலகத்தில் அழகழகாய் வரிசைப்படுத்த ப்பட்டிருக்கும்,
அத்தனை சிறந்த படிப்பாளி. மிகச்சிறந்த கட்டுரையாளரும் கூட. திரைப்படக் கல்லூரியில் சிலகாலம் தலைவர், அவருள் ஆகச் சிறந்த ஒரு எழுத்தாளரும் அவரிடம் ஒளிந்திருந்தார்.
ஒரு கால கட்டத்தில் அஸ்ட்ராலஜி மற்றும் ஜோதிடம் குறித்த தீவிர நேசிப்பிலும், தனி வாசிப்பில் இறங்கியவர், அஸ்ட்ராலஜி- அறிவியல் இரண்டும் வேறுவேறல்ல என நிறுவும் முயற்சியில், 'அதற்கான ஆதாரங்கள் இவை' எனப் பேசத் தொடங்கினார்.
திரைப்படத்துறையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டே யூ டியூப் சேனல் உலகில் சாதனையாளர்களாக திரு. சித்ரா லட்சுமணனும், மற்றும் திரு.ராஜேஷூம் ஒரே காலகட்டத்தில் இயங்கியவர்கள் எனலாம்
ஒருபக்கம் சித்ரா லட்சுமணன், சொந்தமாக டியூப் சேனல் தொடங்கி, சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளை நேர்காணல் செய்தார். ஆன்மிகம், தியானம், யோகம், ஜோதிடம், மருத்துவம், முத்திரை தொடர்பான நேர்காணல்கள், அது தொடர்பான விழாக்களில் பங்கேற்பு என இன்னொரு பக்கம் திரு. ராஜேஷ் இயங்கி வந்தார்.
அவரது ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம்' சேனலில் பிரபல பத்திரிக்கையில் அண்ணன் ராஜேஷின் நேர்காணல்கள் அதிகளவில் வெளியானது.
சினிமாக்காரராக இருக்கும் போது பத்தோடு ஒன்றாக பார்வைக்கு இருந்தவர், தோழர் ராஜேஷாக தெரிந்த போது, பல விவாதம் மூலம் நெருக்கமானார். ஒருநாள் பேசும்போது ' சென்னையில் காவல்துறை உதவி ஆணையராகப் பணியாற்றும் திரு. அசோக், என்னுடைய சகோதரர் தான்' என்று கூறினார் .
திரு. அசோக் (பணி ஓய்வு) திரு.ராஜேஷ் போலவே தோற்றமும் நிறமும் உள்ளவர் திரு. ராஜேஷ் போலவே அசோக்கின் குணமும், பேச்சும் மென்மையானது என்பதே வியப்பின் காரணமானாலும். அவர் மீசைதான் பெரிதாக இருக்கும்.
அதிர்ந்தே பேசாத திரு. அசோக், சென்னையின் முக்கியமான அபாயகரமான பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பிரிவில் ACP யாக பணியாற்றி பல வழக்குகள் கையாண்டவர்
90 ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடர்பான. செய்தியைத் தாண்டி ஒருநாளும் அவர் பேசியதே இல்லை, அதனால், 'தான் ராஜேஷின் சகோதரர்' என்று ஒருநாளும் அவர் கூறியதில்லை. என்னளவில் எப்போதும்அண்ணன் தான் நீங்கள்.1985-ஆம ஆண்டில் சென்னை கே. கே. நகர் அருகில் திரைப்படப் படப்பிடிப்பிற்காக ஒரு பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர் ராஜேஷ் ஆவார். இது அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீட்டில் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றன. பின்னர் 1993-ஆம் ஆண்டில் வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கிய போது தான் அதை விற்றார். 90 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், இவருடைய நண்பர் ஜேப்பியார் அறிவுறுத்தியபடி, வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கினார். பின்னர் ஒரு உணவகத்தையும், கட்டுமான வணிகத்தையும் தொடங்கினார். 1987 முதல் 1991 வரை வி.என். ஜானகியை ஆதரித்து அரசியலில் தீவிரமாகவே செயல்பட்டார் காரல் மார்க்ஸின் ஆதரவாளராக இங்கிலாந்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.இராஜேஷ் வில்லியம்ஸ் எனும் அண்ணன் ராஜேஷ் மனைவி ஜோன் சிலிவியா
2012 ஆம் ஆண்டு காலமான நிலையில் 13 ஆண்டு கடந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
அவரது ஆன்மாவுக்கு நல்ல அமைதி கிடைக்கட்டும்.
"காத்து பட்டாலே கறையாதோ கற்பூரம் கரையுது என் மனசு உன்னாலே...". பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
கருத்துகள்