நகைக் கடன் குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் குறித்து நிதியமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்
நகைக் கடன் குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முறையீடு
அதில் கூறியிருப்பதாவது
"எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடன் அளவு குறைப்பு, நகை அடகு வைத்தாலும் வருமானத் தகுதி நிபந்தனை, பயன்பாட்டுச் சான்று என்ற பெயரால் கடன்தாரர் உரிமை பறிப்பு, ஒவ்வொரு முறை கடனுக்கும் புதிய கடன் தகுதி பரிசீலனை எனக் கட்டணச் சுமை,
நகை உடைமைச் சான்று எனப் போகாத ஊருக்கு வழி, தங்க நாணயங்களுக்கு நிபந்தனை, கடன் தொகை நிர்ணய முறைமையில் கடன் விகிதத்தில் குறைப்பு, கடனை திருப்பி கட்டினாலும் ஏழு நாள் கழித்து நகை என இழுத்தடிப்பு.
எளிய மக்களை, சிறு வணிகர்களை கழுத்தைப் பிடித்து கந்துவட்டிக்காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு கோரி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன் வழங்க புதிய நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கருத்துகள்