மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோக்மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாளை முன்னிட்டு மகிளா சசக்திகரன் மகா சம்மேளனத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமர் போபாலில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் பெயர் நம்மைப் போற்றுதலால் நிரப்புகிறது. அவரது சிறந்த ஆளுமை பற்றிப் பேச வார்த்தைகள் போதாது: பிரதமர்
தேவி அஹில்யாபாய் இந்தியாவின் பாரம்பரியத்தின் சிறந்த பாதுகாவலராக இருந்தார்: பிரதமர்
மாதா அஹில்யாபாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பெண்கள் சக்தியின் விலைமதிப்பற்ற பங்களிப்பின் சின்னமாக இருக்கிறார்: பிரதமர்
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை நமது அரசு வளர்ச்சியின் அச்சாக மாற்றுகிறது: பிரதமர்
நமோ ட்ரோன் தீதி பிரச்சாரம் கிராமப்புற பெண்களை ஊக்குவித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது: பிரதமர்
இன்று, நமது அனைத்து முக்கிய விண்வெளிப் பயணங்களிலும் ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்: பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் நமது பெண்கள் சக்தியின் வலிமையின் அடையாளமாகவும் மாறியுள்ளது: பிரதமர்
லோக்மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் மகிளா சசக்திகரன் மகாசம்பளத்தில் உரையாற்றினார். போபாலில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், 'மா பாரதி'க்கு அஞ்சலி செலுத்தி, இந்தியப் பெண்களின் வலிமையை அங்கீகரித்து உரையாற்றினார். நிகழ்வை ஆசீர்வதிக்க வந்திருந்த சகோதரிகள் மற்றும் மகள்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு நன்றி தெரிவித்தார், அவர்களின் வருகையால் தான் பெருமைப்படுவதாகக் கூறினார். லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது, இது 140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் மகத்தான முயற்சிகளுக்கு பங்களிக்கும் தருணமாகவும் உள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேவி அஹில்யாபாயை மேற்கோள் காட்டி, உண்மையான நிர்வாகம் என்பது மக்களுக்கு சேவை செய்வதும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். இன்றைய திட்டம் அவரது தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது என்றும் அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தூர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதையும், டாடியா மற்றும் சத்னாவிற்கான விமான இணைப்பு வசதி சேர்க்கப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும், வளர்ச்சியை துரிதப்படுத்தும் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் வலியுறுத்தினார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நகரங்களில் பயண உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தூர் மெட்ரோவின் மஞ்சள் பாதையின் சூப்பர் முன்னுரிமை வழித்தடத்தில் பயணிகள் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார். இது போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைத்து பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர், ரூ.480 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 1,271 அடல் கிராம் சுஷாசன் பவன்களை கட்டுவதற்கான முதல் தவணையை வழங்கினார். இந்த கட்டிடங்கள் கிராம பஞ்சாயத்துகளுக்கு நிரந்தர உள்கட்டமைப்பை வழங்கும், அவை நிர்வாக செயல்பாடுகளை நிர்வகிக்கவும், கூட்டங்களை நடத்தவும், பதிவுகளை மிகவும் திறமையாக பராமரிக்கவும் உதவும்.
கருத்துகள்