நீதிபதிகள் என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் மே மாதம் 26 ஆம் தேதி பரிந்துரை செய்தது.
முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றதால் உச்ச நீதிமன்றத்தில் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் உள்ள நிலையில். இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமனம் செய்யப் பரிந்துரை செய்தது. குஜராத் மாநிலத்தின் நீதிபதி என்.வி.அஞ்சாரியா தற்போது கர்நாடக மாநிலத்தின் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இராஜஸ்தானைச் சேர்ந்த நீதிபதி விஜய் பிஷ்னோய் தற்போது கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி அதுல் எஸ்.சந்துர்கர் தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி. அஞ்சாரியா ஆகஸ்ட் மாதம் 1988 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.ஷெலட்டின் கீழ் வழக்கறிஞர் பயிற்சி செய்யத் தொடங்கினார். அவர் அரசியலமைப்பு, சிவில், தொழிலாளர் மற்றும் சேவை விவகாரங்களைக் கையாண்டார். உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் குஜராத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அமைப்புகளுக்கான நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார்.
நவம்பர் மாதம் 21 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் நீதிபதி அஞ்சாரியா குஜராத் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் செப்டம்பர் மாதம் 6, ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, 2024 ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார் நீதிபதி பிஷ்னோய் ஜூலை மாதம் 8, ஆம் தேதி 1989 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மற்றும் ஜோத்பூரில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் சிவில், மற்றும் குற்றவியல், அரசியலமைப்புச் சட்டத்தின், சேவை மற்றும் தேர்தல் வழக்குகள் உட்பட பல்வேறு விஷயங்களைக் கையாண்டார்.
அவர் கூடுதல் மத்திய அரசு நிலை ஆலோசகராக (2000–2004) பணியாற்றினார் மற்றும் கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், முத்திரைகள் மற்றும் பதிவு, கூட்டுறவு, தொழிலாளர், போக்குவரத்து மற்றும் கலால் வரி போன்ற ராஜஸ்தான் அரசின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.ஜனவரி 8, 2013 அன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி பிஷ்னோய், அடுத்த இரண்டாடுகளில் நிரந்தர நீதிபதியானார். தொடர்ந்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பதவியேற்றார்.நீதிபதி சந்தூர்கர் ஜூலை 21, 1988 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்து, மும்பையில் உள்ள மூத்த வழக்கறிஞர் பி.என். நாயக்கின் அலுவலகத்தில் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். பின்னர் அவர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
நீதிபதி சந்தூர்கர் இதுவரை இரண்டு சட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஒன்று மகாராஷ்டிரா நகராட்சி மன்றம், நகர் பஞ்சாயத்துகள் மற்றும் தொழில்துறை டவுன்ஷிப்கள் சட்டம், 1965 மற்றும் மற்றொன்று மகாராஷ்டிரா வாடகை கட்டுப்பாட்டு சட்டம், 1999.
அவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கொலிஜீயத்தின் இந்த பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால், நீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும்.
கருத்துகள்