வன்னியர் ஜாதிச் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள்
வன்னியர் ஜாதிச் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவு விபரம்.
வன்னியர் ஜாதிச் சங்கம் சார்பில் மே மாதம் 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு எனும் பெயரில் நடைபெறுகிறது.
பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், தலைவர் மருத்துவர் அன்புமணி ஆகியோர் மாநாட்டுக்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாநாடு நடைபெறுமிடத்தில் ஒரு லட்சம் நாற்காலிகள் போட ஏற்பாடு செய்யப்படுகிறது.
“சித்ரா பௌர்ணமி நாளில் பாமக வன்னியர் ஜாதி மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்” என ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்த வழக்கை மே மாதம் 8 ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநாடும் சித்ரா பௌர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்குக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், வன்னியர் சங்கம் மாநாட்டில் கலவரம் எதுவும் நடக்காமல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அஸ்ரா கார்க் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன்படி,
“மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்ட உட்கோட்டங்களில் உள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாகன அனுமதி வாங்க வேண்டும். இதற்காக, ஓட்டுனரின் புகைப்படம், உரிமம் , பதிவு சான்றிதழ் புத்தகம், காப்பீடு (இன்சுரன்ஸ்) உள்ளிட்ட விவரங்களை அலுவலகத்தில் கொடுத்து முன் அனுமதி பெற வேண்டும் முறையாக ஆய்வு செய்து துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாகன பாஸ் வழங்கப்படும். பஸ், வேன், கார்களின் மேற்கூரையில் ஏறக்கூடாது, மதுபானம் அருந்திவிட்டு வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது. பாண்டிச்சேரி வழியாக கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லக்கூடாது” என நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கின் இந்த நிபந்தனைகளுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பாமக நிர்வாகிகள், ஒருகட்டத்தில் சம்மதம் வழக்கறிஞர் கே.பாலு மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்
அனைத்து மாவட்டத்திலும், நேற்றிலிருந்து வாகன அனுமதி பாஸ் வழங்கப்படுகிறது. வடக்கு மண்டலத்தில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் மொத்தமாக 5,000 அனுமதி பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்ற கடும் நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியும், கலவரம் நடக்காமல் தடுக்க முடியும். மேலும், மாநாட்டுக்கு எத்தனை வாகனங்கள், எத்தனை பேர் வருகிறார்கள் என கணக்கெடுக்க முடியும்” என்கிறார்கள். காவல் துறை தரப்பில் ஆனால் பாமகவின் தரப்பில் இது வருகைதரும் கூட்டத்தை கட்டுப்படுத்த நடக்கும் முயற்சி எனப் பார்க்கப் படுகிறது
கருத்துகள்