அரசு மருத்துவ மனைக்கு வந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்த டாக்டருக்கு மனித உரிமைகள் ஆணையம் அபராதமும் பணி நீக்கமும்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி: அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணை, தன் மருத்துவமனையில் வைத்து
சிகிச்சையளித்த அரசு மருத்துவர் பிரபாகரனுக்கு ரூபாய்.40 லட்சம் அபராதம் விதித்தது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்ப்பில். அவரது கணவர் இராணுவ வீரர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மே மாதம் 19 ஆம் தேதி மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்: இராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூபாய்.50 லட்சம் இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். இந்தத் தொகையை டாக்டர் பிரபாகர் ரூபாய்.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூபாய்.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி, குரு லட்சுமி ஆகியோர் தலா ரூபாய்.1 லட்சமும், தமிழ்நாடு அரசு ரூபாய்.6 லட்சமும் வழங்க வேண்டும். டாக்டர் பிரபாகரை மருத்துவத் துறை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும்; மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதைக் கண்காணிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும்.
இவ்வாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இவர் போல பல டாக்டர்கள் பல இடங்களில் உள்ள நிலையில் அவர்கள் மீதான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.
கருத்துகள்