இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெருவாக்கோட்டை குரூப் கிராமத்தில் உள்ள நிலத்தை
அளவை அத்துமால் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி எனும் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டனர்இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்டது பனிச்சகுடி குரூப் பெறுவாக்கோட்டை கிராமத்தைச்
சேர்ந்தவர், தன்னுடைய நிலத்தை அளந்து அத்துமால் தர வேண்டும் என ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விண்ணப்பித்த நிலையில் காலதாமதம் ஆனதால் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த நைனா முகம்மது என்பவரைச் சந்தித்தார் அப்போது நிலத்தை அளப்பதற்கு லஞ்சமாக ரூபாய்.3500 தரவேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது கூறினார். அதன்படி, ஆயிரம் ரூபாய் முன்பணம் தரப்பட்டது.
மீதமுள்ள 2500 ரூபாயை கொடுப்பதற்கு முன்னதாக, லஞ்சம் கேட்பது பற்றி மனுதாரர் இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பத் துறையினரிடம் புகார் அளித்தார்.
அவர்களது ஆலோசனைப்படி, பினாப்தலலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரியிடம் மனுதாரர் அரசு சாட்சி முன்னிலையில் வழங்கினார்.
அதை அவர்கள் வாங்கிய போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பணம் பெற்ற கையுடன் கைது செய்து பிடித்தனர். பின்னர் லஞ்சம் பெற்ற பணம் கைப்பற்றிய நிலையில் சோடியம் கார்பனேட்டு கரைசல் சோதனை மற்றும்
விசாரணைக்குப் பிறகு, லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது (வயது 31), தலையாரி (கிராம உதவியாளர்) சித்ரா (வயது 48), ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.இதில் பொது நீதி யாதெனில்:- கிராம கர்ணம் மற்றும் தலையாரி என தாண்டிச் செல்லப் போவதில்லை. ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை
எல்லாம் கீழ் நிலை ஊழியர்களாகப் பாருங்க ஆனால் கொஞ்சம் மேலை பணி செய்பவர்கள் மத்தியில் ஊழல் நடக்கிறது பாருங்க. தாசில்தார் RDO DSP, RTO. அப்படினு கொஞ்சம் மேலையும் பாருங்க. அவர்கள் வருவாய் மற்றும் கொஞ்சம் சொத்து குவிப்பு வழக்கையும் கையில் எடுத்துப் பாருங்க சார் சட்டம் நீதியும் எல்லா நிலைகளிலும் வேலை செய்தால் தான் நல்லது. தாங்கள் செய்யத் தவறினால் வருங்கால லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் தாங்களும் அரசு ஊழியர்கள் என்ற நிலையில் பதில் சொல்லும் நிலை வரலாம். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் குடியரசுத்தலைவர் விருது பெற்ற பல நல்லவர்கள் நாம் சந்தித்த நிலையில் துணைக் கண்காணிப்பாளர் ஓய்வு பெற்ற நல்லம நாயுடு, துணைக் கண்காணிப்பாளர் பாண்டிய ராஜன் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் போன்ற நேர்த்தியான நேர்மையானவர்கள் மக்கள் காவலர்கள் என்றும் நினைவு கொள்ளும் சிறந்த அலுவலர்கள் ஆவார்கள்.
கருத்துகள்