முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொந்த விவகாரத்தில் படுகொலையான பாஜக பெண் பட்டுக்கோட்டை திகில் சரணடைந்த மூவர்

மதுரை பாஜக சார்ந்த பெண் பட்டுக்கோட்டையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தில் கடந்த நாளில் செருப்பு எறிந்த வழக்கில் தொடர்புடையவராவார்                அமைச்சர் பி.டி ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சில் தொடர்புடைய 6 பேர் அப்போது போது கைது செய்யப்பட்டனர்.



அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் செருப்பு வீசிய நபர்களை பிடித்து இழுத்து அவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின் அவர்களை கைதும் செய்தனர். சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல்), 341 (முறையற்று தடுத்தல்), 355 (தாக்குதல் அல்லது குற்றம் இழைக்க பலத்தை பயன்படுத்துதல்) மற்றும் 34 (ஒரே நோக்குடன் பலர் கூட்டு சேருதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இங்கு நினைவுகூறத்தக்கது‌. இந்த நிலையில். பட்டுக்கோட்டையில் சரண்யா கொலை வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்


சரண்யாவின் கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் கபிலன் மற்றும் குகன் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்த நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதால் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாலனின் சொத்துகளை கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்புத் தெரிவித்ததால் கொலை செய்துள்ளதாக அவர்கள் மீதான முதற்கட்ட விசாரணையில் தகவல் வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக  பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்       மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பிலிருந்த சரண்யாவை, மர்ம நபர்கள் சராமாரி வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பினர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். 



இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், "மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா( வயது 35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணமாகி சாமுவேல், சரவணன் என்ற இரு மகன்களுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் சண்முகசுந்தரம் இறந்ததால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன், என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து  குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் எனும் கடை நடத்தி வந்துள்ளனர்.

நேற்று (திங்கள் கிழமை) இரவு பாலன், கடையைப் பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிள் மூலம்   மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாகச் சென்றுள்ளார். அதன் பின்னர் சரண்யா  கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்குச் செல்லும் சந்துப் பகுதியில் மர்ம நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டினர். இதில், சரண்யா தலை துண்டிக்கப்பட்டதில் சம்பவ இடத்திலே  பலியானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிந்து விழுந்த சரண்யாவை அந்த கும்பல் தொடர்ந்து வெட்டியதுடன் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜகவில் சேர்ந்த பலர் பல ஊர்களில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் அடிதடியில்  ஈடுபட்டடுள்ள நபர்கள் பத்து சதவீதம் சற்று வித்தியாசமான நபர்கள் என பார்க்கப்படும் நிலையில் இவர்கள் தங்களை பாதுகாக்கவும் ஒரு பிண்ணனி தேடியும் கட்சியில் சேர்ந்த நபர்கள் ஆவர் அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சேர்ந்த நபர்கள் இல்லை மாற்றுக் கட்சிகளில் இருந்து கைவிவிடப்பட்ட நபர்கள் ஆவர்.கடந்த கால பாஜகவின் நிலை தற்போதைய நிலையில் மாறுபட்டது. இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்தில் வருகிறது. இது முழுக்க முழுக்க அவர்கள் சொந்த விவகாரத்தில் நடந்த கொலை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் சுருக்கம்:- இரண்டாவது கணவரின் முதல் மனைவியின் மூத்த மகனுக்கு இரண்டாவது கணவர் பாலனின் சொத்துக்களை வழங்குவதற்கு அவரது  இரண்டாம் மனைவி சரண்யா எதிர்ப்புத் தெரிவித்ததால், தனது தந்தையின் இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக முதல் மனைவியின் மூத்த மகன் உட்பட மூன்று பேர் இந்தக் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண்! இது தான் இந்தக் கொலைக்கான பின்னணி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...