தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நீதிபதி D.ராஜாவுக்கு எதிராக ஊழல் புகார்கள் உள்ளதா என தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு
பதிலளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டது. பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான சவுரவ் தாஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் முன்னாள் நீதிபதி டி ராஜா குறித்து மூன்று கேள்விகளை எழுப்பிய நிலையில் அதற்கு
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குறித்த தகவல் என்பதால் உச்ச நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவு! சவுரவ் தாஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்,
1.D.ராஜா நீதிபதியாகப் பணியாற்றியவருக்கு எதிராக ஊழல் அல்லது தவறான நடத்தை குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு ஏதேனும் புகார்கள் வந்ததா?
2.ஆம் எனில், எத்தனை புகார்கள் பெறப்பட்டன?
3.அந்தப் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இதற்கு உச்ச நீதிமன்றத்தின் மத்திய பொது தகவல் அலுவலரான (CPIO) கூடுதல் பதிவாளர் பதில் வழங்கவில்லை. இதுபோன்ற தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என கூடுதல் பதிவாளர் தெரிவித்திருந்ததையடுத்து சவுரவ் தாஸ் இதை மத்திய தகவல் ஆணையத்திற்கு (CIC) க்கு எடுத்துச் சென்றார்.
அதை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், முன்னாள் நீதிபதி D.ராஜாவுக்கு எதிரான ஊழல் புகார் உள்ளதா உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தது.
இது தனிப்பட்ட தகவல் என்றும் இந்தத் தகவல் கோர சவுரவ் தாஸுக்கு உரிமை இல்லை என்றும் மத்திய தகவல் ஆணையம் கூறியது.
இந்த நிலையில் சவுரவ் தாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நீதித்துறையின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமானவை. இதுபோன்ற தகவலை பொதுமக்களுக்கு தர மறுக்க முடியாது” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சச்சின் தத்தா முன் நேற்று (மே 26) விசாரணைக்கு வந்த போது, இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றத்தின் பொது தகவல் அலுவலருக்கு நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டார். இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றவர் ஓய்வு பெற்ற நீதிபதி D.ராஜா. சுமார் 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.
இவர் மதுரை மாவட்டம் சமய நல்லூர் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1988-ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த போது ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஓய்வு பெற 6 மாதமே இருந்த சமயத்தில் பணியிட மாறுதல் உத்தரவு வந்ததால் அவருக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியது. அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதையடுத்து D.ராஜா சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாகவே பணியைத் தொடர்ந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெற்றார். கடந்த 25 ஆண்டுகளில் 100 நாட்களுக்கு மேல் பதவி வகித்த முதல் பொறுப்பு தலைமை நீதிபதி ஆவார் ஓய்வு பெற்ற நீதிபதி D.ராஜா என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்..
கருத்துகள்