முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்விப் பொற்கால நினைவுகளை புதுப்பிக்கும் டாக்டர் அழகப்பர் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பவளவிழா

காரைக்குடி வள்ளல் டாக்டர் அழகப்பர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில்



பவளவிழாக்  கொண்டாட்டம்




கோட்டையூர் வாழ் லண்டன் பாரட்லா  வள்ளல் டாக்டர் ஆர்.எம். அழகப்பச் செட்டியாரால் ஜூலை மாதம் 4 ஆம், தேதி 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடந்த பள்ளி,  முந்தைய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கான ஆய்வகமாகச் செயல்பட்டது. துவக்கத்திலிருந்தே, 
பத்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி வழங்கப்பட்டது.

மேல்நிலைக் (+2) கல்வி 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்துடன் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கல்வி (NU2) துறை எண். 110481/NU2/85-15, தேதியிட்ட 25.மார்ச்.1988  அரசு உத்தரவின் படி ,  வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியை அரசாங்கம் கையகப்படுத்தி.






அழகப்பா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பின்னர், அரசு பள்ளியை அழகப்பா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்தது. இந்தியாவிலேயே பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரே அரசு பள்ளி அழகப்பா மாதிரிப் பள்ளி மட்டுமேயாகும் 

அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியின் செயல்பாட்டைக் கவனிக்க எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளதன்படி, அழகப்பா பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.






அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியில் பி.எட் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆய்வகமாகச் செயல்பட்டு வருகிறது.

அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாடு அரசின் ஆசிரியர்களுக்கு சம்பள மானியம் வழங்கும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.

தற்போது, பள்ளியில் 38 ஆசிரியர்களும் ஒரு ஊழியரும் பணிபுரிகின்றனர்.

பள்ளியின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் செய்கிறது.

இந்தப் பள்ளியானது, அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரிக்கு (முன்னர் பயிற்சிக் கல்லூரி) எதிரே உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இந்த நிலையில் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 75வது ஆண்டு பவள விழாக் கொண்டாடப்பட்டது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி தலைமை ஏற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.


துணை வேந்தர் டாக்டர் இரவி, முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா, முன்னாள் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்  டாக்டர் குணசேகரன்  உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டார். தொடர்ந்து டாக்டர் வள்ளல் அழகப்பர் சிலை, நவீன கணினி ஆய்வுக்கூடம் திறப்பு விழா நடந்தது. இரணடாவது நாளான நேற்று,  மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பள்ளி நினைவு நுழைவு வாயிலில் உள்ள வளைவைத் திறந்து வைத்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.
ஆர்.பெரிய கருப்பன்,

திருவண்ணாமலை குன்றக்குடி ஆதின பிரான் மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாதிபதி பொன்னம்பல அடிகளார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி காரைக்குடி மாநகராட்சி மன்றத்தினர்  உள்ளிட்ட பலருடன்







கடந்த காலத்தில் இதே பள்ளியில் படித்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல பணிகளில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ மாணவிகள் முன்னாள் பணி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்  மற்றும்  தற்யோது பணி செய்துவரும் ஆசியர்கள் கலந்து கொண்டனர்

மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
35 ஆண்டுகள் நிறைவு செய்யும்  பவள விழா  (Coral Jubilee) கண்ட பள்ளி 40 ஆண்டுகளில் ஒரு ரூபி விழா  (Ruby Jubilee) 45 ஆண்டுகள் ஒரு சபையர் விழா (Sapphire Jubilee) 50 ஆண்டுகள் ஒரு பொன் விழா  (Golden Jubilee) 55 ஆண்டுகள் ஒரு மரகத விழா (Emerald Jubilee) 60 ஆண்டுகள் ஒரு வைர விழா (Diamond Jubilee) 65 ஆண்டுகள் ஒரு நீல சபையர் விழா (blue sapphire Jubilee) 70 ஆண்டுகள் ஒரு பிளாட்டினம் விழா (Platinum Jubilee) 75 ஆண்டுகள் ஒரு பவள விழா (Diamond Jubilee) 80 ஆண்டுகள் ஒரு அமுத விழா (Oak Jubilee). 100  - நூற்றாண்டு விழா (Centenary) காணட்டும். என பலரும் வாழ்த்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...