முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலஞ்சம் வாங்கி திருச்சிராப்பள்ளி வட்டாட்சியர் சென்னையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் உள்ளிட்டோர் கைது

ரூபாய்.2 லட்சம் லஞ்சம் வாங்கி திருச்சிராப்பள்ளி  வட்டாட்சியர் கைது: சென்னையில் கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு தவறாக மாற்றம் செய்யப்பட்ட நிலத்தை, மீண்டும் தங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டி விண்ணப்பித்த நபரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய  கோட்டாட்சியரின் தனி உதவியாளர் (தாசில்தார்) கைது. தஞ்சாவூர் கோபிக்கு திருச்சிராப்பள்ளி கே.கே.நகரில், 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மனையிடம் உள்ளது. அதை தவறுதலாக மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அரசு கணிப்பொறி அடங்கலில் பதிவு செய்து விட்டனர். அதை மாற்றித்தர உரிய ஆவணங்களுடன், திருச்சிராப்பள்ளி  கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கோபி விண்ணப்பித்தார். அது தொடர்பாக விசாரணை குறித்து அவர் திருச்சிராப்பள்ளி கோட்டாட்சியரின் தனி உதவியாளரான  வட்டாச்சியர் அண்ணாதுரையை அணுகிய போது அவரோ, ' மனையிடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதால், இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தந்தால், கணிப்பொறி அ. பதிவேட்டிலும் சிட்டாவிலும் பெயரை திருத்தம் செய்து தருகிறேன்' எனக் கூறினார்.  ஆனால் லஞ்சம் கொடுத்து ஆவணம் பெற கோபி விருப்பமில்லாமல் , திருச்சிராப்பள்ளி  ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் அறிவுறுத்தல்படி, மாலை, கோட்டாட்சியர், அலுவலகத்தில் வைத்து, பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் அண்ணாதுரையிடம் கோபி கொடுத்தார். அதை பெற்ற அண்ணாதுரையை மறைந்லிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர் அதான் பின்னர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர் 

அதேபோல்

ரூபாய்.12,000 லஞ்சம் பெற்ற சென்னை திருநீருமலை கிராம நிர்வாக அலுவலர் கைது.

பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய, 12,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். சென்னை, தில்லை கங்கா நகர் வசிக்கும் மேகலா தேவி. என்பவர், பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஆவணம் அடிப்படையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ஆனலைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம், 'ஆன்லைன்' மூலம் திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, (வயது 47), ஆய்வு செய்தார். அவரும், தலையாரியான (கிராம உதவியாளர்) அமுதாவும், லஞ்சம் வாங்கத் திட்டமிட்டு மேகலாதேவியைத் தொடர்பு கொண்டு, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, லஞ்சமாக 15,000 ரூபாய் நீங்கள் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர். பின்னர், பேரம் பேசி அதை 3,000 ரூபாயைக் குறைத்து இறுதியாக 12,000 ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர்.  ஆனால் லஞ்சம் கொடுத்து வாங்க விரும்பாதவர் அது குறித்து, சென்னை ஆலந்துாரில் உள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில், மேகலாதேவி புகார் அளித்தார். அதை விசாரித்து அவர்கள் ஆலோசனைப் படி திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், மேகலாதேவியிடமிருந்து சங்கீதா, 12,000 ரூபாய் லஞ்சப்பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் வாங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன், அவரைக் கைது செய்தனர். மேலும்

மானியத் தொகை விடுவிக்க லஞ்சம் பெற்ற அலுவலர் கைது 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியைச் சேர்ந்த கவுரிசங்கர்,(வயது 47); விவசாயி. அவரது மாமியார் மங்கம்மாள் பெயரில், மானாவாரி தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் கறவை மாடு வாங்கி, வேளாண்மைத் துறை வழங்கும் மானியத்துக்கு விண்ணப்பத்தார். மானியம், 32,000 ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, முதல் தவணையாக அவருக்கு, 20,000 ரூபாய் கிடைத்தது. மீதி, 12,000 ரூபாய் கிடைக்க, வேளாண்மை அலுவலரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்காக கௌரிசங்கர் அக்டோபர் மாதம்.15 ஆம் தேதியில், வேப்பனஹள்ளி வேளாண்மை அலுவலகம் சென்று, உதவி வேளாண்மை அலுவலர் முருகேசனைச் சந்தித்தார். அவர் வேலை அதிகம் உள்ளதால் தீபாவளிக்கு பின்னர் வருமாறு கூறிய நிலையில். தீபாவளி முடிந்து சென்று பார்த்த போது, '5,000 ரூபாய் கொடுத்தால் வங்கிக் கணக்கில் அடுத்த நாளே மானியம் கிடைக்கும்' எனக் கூறி அவரைத் திரும்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத கௌரிசங்கர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம்  நேரில் சென்று நேற்று புகாரளித்தார். வேப்பனஹள்ளியில் ஒரு ஹோட்டலில் மாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளாண்மை அலுவலர் முருகேசனிடம் அரசு சாட்சி முன்னிலையில் லஞ்சப் பணத்தை கௌரிசங்கர் கொடுக்க, அதை முருகேசன் பெற்ற போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் சேர்த்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...