பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அவர் காலை 11:45 மணி முதல் மதியம் 12:35 மணி வரை கோவிலில் இருந்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீபிரமராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களிலும், 52 சக்தி பீடங்களிலும் ஒன்றாகும் ஒருசேர இக்கோவில் அமையப் பெற்றதால், இந்த ஆலயம் தனித்துவம் வாய்ந்ததாகும்.
இன்று காலை ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உற்சாகமாக வரவேற்பளித்தார். கோவிலில் வழிபட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய்.13,430 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் துவங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா மாநிலத்திற்கு வருகை தந்த நிலையில் அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனையடுத்து, பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவில் சன்னதி மற்றும் கோவில்களில் பூஜை செய்து வழிபட்டார். அவருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் பிரார்த்தனை செய்தேன். என் சக இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார். சாமி தரிசனம் செய்தது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலம், ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் நமது மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ததில் பாக்கியம் பெற்றேன். இந்த புனிதக் கோவில் தனித்துவமானது, ஏனெனில் இது ஒரு ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே வளாகத்தில் ஒன்றாகக் காணப்படும் நாட்டின் ஒரே ஆலயமாகும், இது உண்மையிலேயே இந்தியாவில் தனித்துவமான ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.










கருத்துகள்