முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருப்பூர், இராமநாதபுரம் அரசு பணியில் லஞ்சம் வாங்கிக் கைதான சிலர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில்


மின் வணிக ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (வயது 56). இவரிடம் தாராபுரம் தாலுகா இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சிவசுப்பிரமணியம் என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டிற்கு நிரந்தர மின் இணைப்பு வழங்ககோரி அளித்திருந்த விண்ணப்பத்தின் மீது




விசாரணை நடத்திய தாராபுரம் வடக்கு மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு ரூபாய். 3,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார்.மின் இணைப்புக்கு லஞ்சம் தர விரும்பாத சிவசுப்பிரமணியம் அதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.அவர்கள் ஆலோசனையின் பேரில் இரசாயனப் பொடி தடவி சாட்சி முன்னிலையில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மறைந்திருந்த நிலையில் சிவசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவசுப்பிரமணியம் ஜெயக்குமாரிடம் நேரில் சென்று கொடுத்தபோது மறைந்திருந்த இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜெயக்குமாரை பனம் பெற்ற கையுடன் கைது செய்தனர். தொடர்ந்து அவரது அலுவலகத்தில் நடந்த சோதனை ஆய்வு செய்த போது கணக்கில் வராத ரூபாய்.13,000 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்த்தனர்.   அடுத்த  நிகழ்வு 





கரூர் மாவட்டம் புகளூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் அங்குள்ள டி.என்.பி.எல். எனும் காகித ஆலையில் உதவி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அக்டோபர் மாதம் 3- ஆம் தேதி தனது மனைவி, மகன் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்க நினைத்து. அதற்காக அவர் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நில அளவைப் பிரிவிற்கு சென்றாராம். அங்கு தனது நிலத்தை உட்பிரிவு அளவீடு செய்து தனிப்பட்டா வழங்கக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பத்து அந்த நகலுடன்

சென்ற போது அப்போது, அங்கு பணியில் இருந்த நில அளவையரான 34 வயதாகும் அருண் என்பவர் ரூபாய்.24 ஆயிரம் லட்சமாகக் கேட்டாராம். அதற்கு மறுப்புத் தெரிவித்த ராஜேந்திரன், பின்னர் ரூபாய்.9 ஆயிரம் தருவதாக ஒப்புகொண்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இராஜேந்திரன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு  மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களைக் கூறி புகார் அளித்தார்



இதையடுத்து ராஜேந்திரன் நேற்று திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனையின் பேரில் இரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய்.9 ஆயிரத்தை நில அளவையர் அருணிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் காவலதுறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து அருணை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். 


விசாரணை நடத்தினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக கோயமுத்தூர் தமிழ்நாடு கேரளா மாநில எல்லை வனச் சோதனைச் சாவடிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு லாரிகளை அனுமதித்ததாக 3 வனக்காவலர்களை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரளாவுக்கு கோழி எருவை எடுத்துச் செல்லும்போது மாங்கரை மற்றும் ஆனைகட்டி சோதனைச் சாவடிகளில் வனக்காப்பாளர்கள் லஞ்சம் பெறுவதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகாரளித்தார்.

அதன் பேரில் பினாப்தலீன் ரசாயனம் தடவிய பணத் தாள்களைக் கொடுத்து, செல்வகுமார், சதீஷ்குமார், சுப்பிரமணியம் ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காடணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.   அடுத்ததாக ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம்: பரமக்குடி தாலுகா வேந்தோணி கிராம நிர்வாக அலுவலர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம்   பரமக்குடி தாலுகா வேந்தோனி குரூப்  கிராமத்தில் வசிக்கும்       க. ராஜேந்திரன்  என்பவரின் தந்தை பெயருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு  3 சென்ட் நிலத்திற்கு  D நாமுனா பட்டா( Free land for poorest) வழங்கப்பட்டுள்ளது. இன்னிலையில் 30 வருடம் கடந்த நிலையில் வாரிசு அடிப்படையில்.க. ராஜேந்திரன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய  வேந்தோணி குரூப்  கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரை ( வயது 43)  8 நாள்களுக்கு முன்பு சந்தித்து விவரம் கேட்டபோது  D நமுனா பட்டாவில் உள்ள விவரங்கள் அடங்கிய சான்றிதழ் வழங்க ரூபாய்.5000 தனக்கு லஞ்சமாக வழங்க  வேண்டும்  எனக் கரராகக் கேட்டுள்ளார். இன்னிலையில் புகார்தாரர்  காலை கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமாரை  மீண்டும்  தொடர்பு கொண்டு   D நமுனா பட்டா அடங்கிய சான்றிதழ்  வழங்கக் கேட்டபோது   தான் கேட்ட ரூபாய். 5000/-ஐ கொடுத்துவிட்டு வாங்கிக்கொள்ளும் படி கூறியுள்ளார்.


 எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில்

புகார் செய்தார்.  லஞ்ச ஒழிப்பு துறையில் வழங்கிய அறிவுத்தலின் பேரில் பிரசாயனம் தடவிய பணம் ரூ.5000/-ஐ  கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரிடம்  கொடுக்கும் போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் அவரைக் பணம் பெற்ற கையுடன்  பிடித்தனர்.

மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ரூபாய்.5000 லஞ்சம் வாங்கிய  உரப்புளி தலையாரி கைது

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் லஞ்சம் வாங்கிய தலையாரியை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.முதுகுளத்துார் தாலுகா காக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்....... பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார்.  இரண்டு நாட்களுக்கு முன்பு உரப்புளி கிராம தலையாரி ராசையா (வயது 45), தனக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் ரூபாய்.5000 லஞ்சமாகத் தர வேண்டுமெனக் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத.............. இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனை படி பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்த புகார் தாரரிடம் கொடுத்து தலையாரியிடம் வழங்கும்படி கூறி அனுப்பினர்.பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் தலையாரி இராசையாவிடம் புகார் தாரர் பணத்தைக் கொடுத்தார். அங்கிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தலையாரியைக் கைது செய்தனர்.மேலும்  கிராம நிர்வாக அலுவலருக்கு  இதில் தொடர்புள்ளதா என விசாரிக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...