ரூபாய்.3 கோடி காப்பீட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பை பிடித்து கடிக்க வைத்து கொலை செய்யப்பட்ட தந்தை பள்ளி ஆய்வக உதவியாளர் கணேசன்
இறந்த சந்தேக வழக்கில் திருப்பம் மகன்கள் இருவர் மற்றும் உடந்தையாக இருந்த 4 பேர் உள் 6 பேர் கைது
தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்துக் கொலை செய்த மகன்கள் திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றினார். அவருக்கு மோகன்ராஜ் (வயநு 29), ஹரிஹரன் (வயது 26) எனும் மகன்கள். இருவருக்கும் திருமணம் முடித்த நிலையில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் ஓட்டுனராகவும் வேலை செய்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாகக் கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்க கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து
பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்யப்பட்ட நிலையில் கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூபாய்.3 கோடிக்கு காப்பீடு பாலிசி எடுக்கப்பட்டுள்ளது. அந்த பாலிசியை பணம் பெறக் கொடுத்த நிலையில் சந்தேகமடைந்த காப்பீட்டு நிறுவனம் சார்பில், வடக்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தனர், அதையடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவில் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, நடவடிக்கை எடுக்க காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, ஆய்வாளர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்ககன் புலன் விசாரணையைத் துவங்கினர் கணேசன் இறந்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும் என இரு மகன்களும் முடிவு செய்து, பாம்பைக் கடிக்க வைத்து தந்தையை கொன்றுள்ளனர் என்பது அவர்கள் விசாரணையில் தெரியவந்தது. இதற்காக இவர்களது நண்பர்கள் பாலாஜி,பிரசாந்த் என்ற இருவரும் உதவியுள்ளனர்.
பாம்பு கடித்து தங்களது தந்தை இறந்து விட்டதாகவும் அவருக்கு முறையாக வர வேண்டிய ரூபாய்.3 கோடி காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால், சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருபவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ரூபாய்.3 கோடிக்கு 4 பாலிசிகள் எடுக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படை, கணேசனின் இரு மகன்களின் செல்போன் உரையாடல்கள் அவர்களின் தொடர்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தன.
மோகன்ராஜ் அவர் தம்பி ஹரிஹரன் இருவரும் கடன் தொல்லையால் சிக்கித் தவித்ததால் உல்லாச வாழ்க்கை, அரசு வேலைக்கு ஆசைப்பட்டு யாரும் கண்டுபிடிக்காத வகையில் நூதன முறையில் தந்தையைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக சென்னையில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி வந்த மோகன் ராஜ் அவருடன் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாலாஜி என்பவரின் உதவியை நாடியுள்ளார். பாலாஜி மற்றும் அவரது உறவினர் நவீன் குமார் ஆகியோர் பாம்பு பிடித்த பழங்குடி இருளர் இனப் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை அனுப்பியுள்ளார்.
அவர் அவரது மனைவியின் தந்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் என்பவருக்கு பணத்தாசை காட்டி மணவூர் காட்டுப்பகுதிக்குச் சென்று கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பைப் பிடித்து சாக்கு பையில் அடைத்து 4 பேரும் காரில் பொதட்டூர்பேட்டையில் உள்ள கணேசன் வீட்டுக்கு எடுத்து வந்து பின் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கணேசன் கழுத்தில் 3 முறை பாம்பை கடிக்க வைத்ததில் விஷம் பரவியதால் தலைக்கேறி கணேசன் இறந்ததை உறுதி செய்த பின்னர் பாம்பை அதே இடத்தில் தினகரன் அடித்துப் போட்டுள்ளார். பிறகு நான்கு பேரும் காரில் சென்று விட்டனர்.
சிறிது நேரம் கடந்து தங்கள் தந்தை பாம்பு கடித்து விட்டதாக குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து நடித்த ஹரிஹரன் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கணேசனை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு காலதாமதமாக எடுத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பாம்பை வைத்து தந்தையை கடிக்க வைத்து மகன்களே கொன்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் நிலையை தற்போது ஏற்படுத்தியது. ஏற்கனவே விபத்து காரணமாக ஓய்வில் இருந்த கணேசன்
நல்ல பாம்பு கடித்தும் உயிர் பிழைத்தவர் கண்டங்கருவளை எனம் கடடுவிரியன் பாம்பு மூலம்
தந்தையை கொலை செய்ய சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க வைப்பதற்கு ஒரு வாரம் முன்பாக அதே ஆட்களை வைத்து நல்லபாம்பைக் கொண்டு வர வைத்துக் கடிக்க வைத்துள்ளனர். ஆனாலும் அவர் பிழைத்துக் கொண்டதால் இந்த முறை கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியனைக் கொண்டு வர வைத்து கடிக்க வைத்து இறப்பதை உறுதி செய்ய வேண்டும் என சதித் திட்டம் போட்டனர். அதன்படி இரண்டாவது முறையாக கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை கொண்டு வந்து கழுத்துப் பகுதியில் கடிக்க வைத்து கணேசன் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் துணைக் கண்காணிப்பாளர் ஜெய ஸ்ரீ தலைமையிலான தனிப்படைக் காவல்துறை 10 நாட்களில் குற்றவாளிகளை செல்போன் மூலம் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டதால், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், மற்றும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா ஆகியோரைப் பாராட்டினார். மேலும் கணேசன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய அவரது இரண்டு மகன்கள் உள்பட 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கார், பைக் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் திருவாலங்காடு அருகே மணவூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த குணசீலன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 28) என்பவருடன் நட்பாகி அவரது நண்பர் மணவூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் மகன் பிரசாந்த் (வயது 35) என்பவரின் மனைவியின் தந்தை ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின நபரான தினகரன் (வயது 43) (பாம்பு பிடிப்பவர்) உதவியுடன் மணவூர் காட்டுப்பகுதியில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர்.
பாம்பை கடிக்க வைக்க கூலி அவருக்கு ரூபாய்.1.50 லட்சம்
கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை காட்டில் பிடித்து கொண்டு வந்து கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்து கொலை செய்ய ரூபாய்.1.50 லட்சம் கூலியை மோகன்ராஜ் கொடுத்துள்ளார். இதற்காக மோகன்ராஜ் செல்போனில் இருந்து கூகுள் பே மூலம் நவீன்குமார் என்பவருக்கு ரூபாய்.90 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் கையில் அறுபதாயிரம் கொடுத்துள்ளார். இப்பணத்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் மற்றும் அவருடன் செயல்பட்ட 3 பேரும் பிரித்துக் கொண்டுள்ளனர். பிரித்து க் கொண்ட அணைவரும் சிக்கிய நிலையில் சிறை சென்றனர்.







கருத்துகள்