திருச்சிராப்பள்ளி மாநகர் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் ஊதிய நிலுவைத் தொகை பெற சான்று வழங்குவதற்கு 1500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்படார்.
திருச்சிராப்பள்ளி நகர வட்டாரக் கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக மணப்பாறை தாலுகாவில் உள்ள வையம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலராகவம் கூடுதல் பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சிராப்பள்ளி, மணப்பாறையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை விமலா பணிபுரிந்துள்ளார். தற்போது பணி மாறுதலில் வேறு பள்ளிக்கு ஜூலை மாதம் சென்று விட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியை பணிபுரிந்த நாட்களுக்காக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவைத் தொகை இருந்துள்ளது.விடுமுறை நாட்களுக்கு ஊதியம் பெற சான்றிதழ் அளிப்பதற்கு ரூபாய்.1500 லஞ்சம் கேட்டதால் கொடுக்க விரும்பாத ஆசிரியை திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்
பள்ளி ஆசிரியை விமலா வேறு ஒரு பள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் பணி மாறுதலாகி சென்று விட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியைக்கு தான் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் நான்கு நாட்கள் பணி புரிந்தமைக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது.
மேற்படி பள்ளி ஆசிரியை விமலா அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை தற்போது பெரும் பொருட்டு நாலு நாட்கள் ஊதியம் கொடுபடாததற்கு சான்று கேட்டு வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு க் கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு பணி ஆளிநர்கள் மேற்கொண்ட பொறி வைப்பு நடவடிக்கையின் போது வட்டார கல்வி அலுவலகத்தில், அலுவலர் லதா பேபி, பள்ளி ஆசிரியை விமலா என்பவரிடம் இருந்து லஞ்சமாக ரூபாய்.1500-யை கேட்டு பெற்று கையில் வைத்திருந்த போது கையுடன் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் பிடிப்பட்டார்.
இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கருத்துகள்