இந்தியக் குடிமக்கள் அனைவரின் விரல் ரேகை, கருவிழிப் படலத்தின் பதிவுகளுடன், 12 இலக்க எண் கொண்ட ஆதார் வழங்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டங்கள், வங்கிக் கணக்கு துவங்குதல், மானியங்கள், வருமான வரி உள்ளிட்ட பல சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்.
ஆதார் எண் வழங்குதல், புதுப்பித்தல் போன்றவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகிக்கிறது. ஆதாருக்கு உருவம் ஒன்றை வழங்க ஆணையம் முடிவு செய்தது. நிறுவனம், அமைப்பு, அணி, நிகழ்ச்சி அல்லது திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்படும். இதற்கு 'மாஸ்காட்' என்று பெயர்.
ஆதாருக்கான, 'மாஸ்காட்' உருவாக்கத்தில் பொது மக்கள் பங்குபெறும் வகையில் அரசின், www.mygov.in தளத்தில் இரண்டு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதுமிருந்து மாணவர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட, 875 பேர், 'மாஸ்காட்' சின்னங்களை வடிவமைத்து அனுப்பி இருந்ததில், கேரளா மாநிலத்தில் திருச்சூர் அருண் கோகுல் வடிவமைத்த மாஸ்காட் தேர்வு செய்யப்பட்டது. பெயர் சூட்டும் பிரிவில் மத்தியப் பிரதேச மாநிலம், போபால் ரியா ஜெயின் தேர்ந்தெடுத்த 'உதய்' எனும் பெயர் தேர்வு செய்யப்பட்டது.
வெற்றியாளர்கள் அறிவிப்பு மற்றும் ஆதாரின் மாஸ்காட் அறிமுக நிகழ்ச்சி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்ததில் யு.ஐ.டி.ஏ.ஐ., தலைவர் நீல்கந்த் மிஸ்ரா பங்கேற்று ஆதார் மாஸ்காடை (உதய்) அறிமுகப்படுத்தினார். ரூபாய் அடையாளம் போல மாற்ற நடவடிக்கை
ஆதார் தொடர்பான பத்திரிகை விளம்பரங்கள், காணொளிகள், சுவரொட்டிகள், சமூக வலைதளங்களில் இனி, 'உதய்' சின்னத்தை வைத்து தகவல்கள் வெளியிடப்படும்.




கருத்துகள்