தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இன்று தொடங்கியது. சில நிமிடங்களிலேயே தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பும் செய்தார்.
சட்டமன்றத்தில் அரசு உரையை வாசிக்க ஆளுநர் மறுத்ததற்கான காரணங்கள் என்னவென்று ஆளுநரின் லோக் பவன் எனும் மக்கள் மாளிகை எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தது.பதிவில், 1. ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை;
2 தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் ஆதாரமற்ற பல தகவல்களும், தவறான தகவல்களும் உள்ளன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 3. மாநிலம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற தகவல் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள், முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாடு கவர்ச்சியற்ற மாநிலமாக மாறி வருவதைக் காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாடு அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் இந்தியாவில் நான்காவது பெரிய மாநிலமாக இருந்தது. இன்று அது ஆறாவது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது.
4.போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்துக்கு மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் 33 சதவீதத்துக்கு மேலாகவும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதிலும், பெண்கள் பாதுகாப்புப் பிரச்சினை இந்த உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 5.போதைப்பொருள்களின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்க வழக்குகளின் அதிகரிப்பு ஒரு மிகத் தீவிரமான பிரச்சினையாகவே உள்ளது. போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2000-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது நமது எதிர்காலத்தை மிகத் தீவிரமாகப் பாதிக்கிறது. இந்த உரையில் இப்பிரச்சினை சாதாரணமாகப் புறக்கணிக்கப்படுகிறது.
6.பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான அட்டூழியங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், உரையில் இது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 7. நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட தினமும் 65 தற்கொலைகள். நாட்டின் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு கவலைக்கிடமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனாலும், இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை. இது புறக்கணிக்கப்படுகிறது.
8.கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவு மற்றும் கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடு ஆகியவை நமது இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கின்றன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன, மேலும் வருகைப் பேராசிரியர்கள் அனைவரும் அமைதியின்றி உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளனர். இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை, மேலும் இந்தப் பிரச்சினை உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
9.பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகள் செயல்படாமல் உள்ளன. அவை நேரடியாக அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் உணர்வுக்கு எதிரானது. கிராமப் பஞ்சாயத்துகள் மீண்டும் நிறுவப்படுவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், அது குறித்து அந்த உரையில் ஒரு குறிப்புக் கூட இல்லை.
10.மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோயில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். பழங்காலக் கோயில்களைப் புனரமைத்தல் மற்றும் பாதுகாப்பது குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் 5 ஆண்டுகளை கடந்தும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் ஈவிரக்கமின்றி புறக்கணிக்கப்படுகின்றன.
11.தொழில்களை நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுகமான செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும். நாட்டில் 55 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், மகத்தான வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் சுமார் 4 மில்லியன் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். இந்த விவகாரம் முற்றிலுமாக இந்த உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
12.அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எதுவும் இந்த உரையில் குறிப்பிடப்படவில்லை.
13.சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் சார்பாக முன்வைக்கிற கருத்துக்களின் தொகுப்பு, அதில் கூறப்பட்டிருக்கிற கருத்துக்கு எந்த விதத்திலும் ஆளுநர் பொறுப்பு அல்ல, சம்பரதாயத்திற்காக அவர் அதை சட்டமன்றத்தை துவக்கி வைத்து அந்த உரையை படிக்கவேண்டியது அவரது கடமை, அந்த உரையில் உள்ள தவறான தகவல்கள், விடுபட்ட விசயங்கள் மற்றும் அரசாங்கத்தின் குறைபாடுகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்றாலும் பாஜக உட்பட எதிர்க்கட்சி வரிசையில் போதுமான தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நடைமுறை தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளினுடைய அதிகாரத்தை கவர்னர் தன் கையில் எடுத்துக்கொள்கிறார். தன்னை எதோ கல்லூரி முதல்வரை போல தான் சொல்கிற கருத்துக்கள் அதில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறார். இது மத்திய மாநில உறவுகளுக்கும், மாநில அரசின் கொள்கைகளுக்கும், இந்திய குடியாட்சி முறைக்கும் எதிரானது.
சட்டமன்றத்தின் மரபு என்பது சட்டமன்றம் துவங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிகிற பொழுது தேசிய கீதம் பாடுவது மட்டுமே, இதுவரை இருந்து வந்த நடைமுறை ஆனால் ஆளுநர் முதலில் தேசியக்கீதம் பாட வேண்டும் என்று வறுபுறுத்துவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்பதே ஆளும் கட்சி தரப்பு விளக்கம், அவர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகப் பாவித்துக்கொண்டு செயல்படுவது தமிழ்நாட்டில் உள்ள எதிர்கட்சித்தலைவர்களை அவமானப்படுத்துகிற செயலாகும். எனவும் ஆளும் மாநிலக் கட்சி ஆதரவுக் கட்சிகள் கருத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 24-ஆம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.







கருத்துகள்