முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளியேறினார்

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இன்று தொடங்கியது. சில நிமிடங்களிலேயே தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பும் செய்தார்.


சட்டமன்றத்தில் அரசு உரையை வாசிக்க ஆளுநர் மறுத்ததற்கான காரணங்கள் என்னவென்று ஆளுநரின் லோக் பவன் எனும் மக்கள் மாளிகை எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தது.பதிவில்,                                  1. ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை;

2 தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் ஆதாரமற்ற பல தகவல்களும், தவறான தகவல்களும் உள்ளன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.                                     3. மாநிலம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற தகவல் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள், முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாடு கவர்ச்சியற்ற மாநிலமாக மாறி வருவதைக் காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாடு அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் இந்தியாவில் நான்காவது பெரிய மாநிலமாக இருந்தது. இன்று அது ஆறாவது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது.


4.போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்துக்கு மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் 33 சதவீதத்துக்கு மேலாகவும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதிலும், பெண்கள் பாதுகாப்புப் பிரச்சினை இந்த உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.                                    5.போதைப்பொருள்களின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்க வழக்குகளின் அதிகரிப்பு ஒரு மிகத் தீவிரமான பிரச்சினையாகவே உள்ளது. போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2000-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது நமது எதிர்காலத்தை மிகத் தீவிரமாகப் பாதிக்கிறது. இந்த உரையில் இப்பிரச்சினை சாதாரணமாகப் புறக்கணிக்கப்படுகிறது.




6.பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான அட்டூழியங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், உரையில் இது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.                                    7. நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட தினமும் 65 தற்கொலைகள். நாட்டின் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு கவலைக்கிடமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனாலும், இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை. இது புறக்கணிக்கப்படுகிறது.

8.கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவு மற்றும் கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடு ஆகியவை நமது இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கின்றன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன, மேலும் வருகைப் பேராசிரியர்கள் அனைவரும் அமைதியின்றி உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளனர். இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை, மேலும் இந்தப் பிரச்சினை உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

9.பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகள் செயல்படாமல் உள்ளன. அவை நேரடியாக அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் உணர்வுக்கு எதிரானது. கிராமப் பஞ்சாயத்துகள் மீண்டும் நிறுவப்படுவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், அது குறித்து அந்த உரையில் ஒரு குறிப்புக் கூட இல்லை.

10.மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோயில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். பழங்காலக் கோயில்களைப் புனரமைத்தல் மற்றும் பாதுகாப்பது குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் 5 ஆண்டுகளை கடந்தும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் ஈவிரக்கமின்றி புறக்கணிக்கப்படுகின்றன.

11.தொழில்களை நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுகமான செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும். நாட்டில் 55 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், மகத்தான வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் சுமார் 4 மில்லியன் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். இந்த விவகாரம் முற்றிலுமாக இந்த உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

12.அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எதுவும் இந்த உரையில் குறிப்பிடப்படவில்லை.

13.சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் சார்பாக முன்வைக்கிற கருத்துக்களின் தொகுப்பு, அதில் கூறப்பட்டிருக்கிற கருத்துக்கு எந்த விதத்திலும் ஆளுநர் பொறுப்பு அல்ல, சம்பரதாயத்திற்காக அவர் அதை சட்டமன்றத்தை துவக்கி வைத்து அந்த உரையை படிக்கவேண்டியது அவரது கடமை, அந்த உரையில் உள்ள  தவறான தகவல்கள், விடுபட்ட விசயங்கள் மற்றும் அரசாங்கத்தின் குறைபாடுகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்றாலும் பாஜக உட்பட எதிர்க்கட்சி வரிசையில் போதுமான தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நடைமுறை தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளினுடைய அதிகாரத்தை கவர்னர் தன் கையில் எடுத்துக்கொள்கிறார். தன்னை எதோ கல்லூரி முதல்வரை போல தான் சொல்கிற கருத்துக்கள் அதில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறார். இது மத்திய மாநில உறவுகளுக்கும், மாநில அரசின் கொள்கைகளுக்கும், இந்திய குடியாட்சி முறைக்கும் எதிரானது.

சட்டமன்றத்தின் மரபு என்பது சட்டமன்றம் துவங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிகிற பொழுது தேசிய கீதம் பாடுவது மட்டுமே, இதுவரை இருந்து வந்த நடைமுறை ஆனால் ஆளுநர் முதலில் தேசியக்கீதம் பாட வேண்டும் என்று வறுபுறுத்துவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்பதே ஆளும் கட்சி தரப்பு விளக்கம், அவர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகப் பாவித்துக்கொண்டு செயல்படுவது தமிழ்நாட்டில் உள்ள எதிர்கட்சித்தலைவர்களை அவமானப்படுத்துகிற செயலாகும். எனவும் ஆளும் மாநிலக் கட்சி ஆதரவுக் கட்சிகள் கருத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 24-ஆம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...