முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகம் சுற்றும் வாலிபனைப் போல் ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்

தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில்


மத்திய தணிக்கைத்துறைக்கு என்ன பிரச்சினை என நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார் மத்திய அரசின் வழக்குரைஞர்

படத்தில் இந்தியாவில் பாதுகாப்புத்துறை சம்மந்தமான சீருடை, இலட்சினை உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது தொடர்பான மேலதிக ஆலோசனைகளுக்கு ரிவ்யூ கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்.

இது வழக்கமான நடைமுறைதான். இதை படக்குழு முன்கூட்டியே தவிர்த்திருக்க முடியும்.

உதாரணத்துக்கு -

இராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படத்தில் மிகத்துல்லியமாக இராணுவ அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும்.


படம் தயாரானதுமே பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்தத் தகவல்களை தெரிவித்து, அந்த அடையாளங்களை ஏன் பயன்படுத்தினோம் என்று விளக்கமளித்து சென்சாருக்கு முன்பாகவே தடையில்லாச் சான்று பெற்றிருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக இராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடல்களை நடத்தி, அவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணையான காட்சிகள் உண்டா என அவர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள்.



இப்படி தமிழ் திரையுலகிலேயே முன்னுதாரணம் இருந்தும், ‘ஜனநாயகன்’ படக்குழு இந்த விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது எப்படி என்பதுதான் ஆச்சரியம்.

மேஜர் ரவி என்றொரு இயக்குநர் இருக்கிறார். ராணுவத்தில் பணியாற்றி பின்னர் சினிமாத்துறைக்கு வந்தார். கமல்ஹாசன், மணிரத்னம் போன்றோர் படங்கள் எடுக்கும் போது இவரிடம் ஆலோசனை பெறுவார்கள். எடுத்த படத்தை இவரிடம் போட்டுக் காட்டி ஏதேனும் வில்லங்கம் வருமா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டே தணிக்கை சான்றிதழுக்கு அனுப்புவார்கள். தமிழ், மலையாளப் படங்கள் மட்டுமல்ல, இந்திய அளவில் ஏதேனும் படங்களில் ராணுவ சித்தரிப்புகள் இருந்தால், சம்மந்தப்பட்ட படக்குழுவினர் இவரைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுவார்கள். ரவியே கூட பல படங்களை இயக்கியவர் தான்.


இவரைப் போன்ற ஆலோசகர் எவராவது ‘ஜனநாயகன்’ படக்குழுவில் இடம்பெற்றிருந்தால் இப்போது தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

500 கோடி ரூபாய் முதல் போட்டு படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. அதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். இந்த சின்ன விஷயத்தில் கூட கோட்டை விட்ட இயக்குநர், படத்தை எந்தளவுக்கு சிரத்தையாக எடுத்திருப்பார் என்பது தெரியவில்லை. மேலும் இது கதை விவாதம் நடக்கும் காலத்திலேயே முடிவு செய்ய வேண்டிய நிகழ்வாகம்,  எம் ஜி ஆர் அரசியலில் அதிமுக எனும் தனிக்கட்சி துவங்கிய 1972 ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாக சிக்கல் வந்த நிகழ்வு அரசியல் தான் தனிக்கட்சி துவங்கிய விஜய் நடித்த ஜனநாயகனின் அந்தக் காட்சி. மத்திய அரசு எதிர்க்கக் காரணமே அதுதான்! என நீதிமன்றத்தில் நடந்த வாதம்


நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி மாதம் 9, 2026  ஆம்பள கேஸ் சிக்கலாகுது.. ஜனநாயகனின் அந்த காட்சி.. மத்திய அரசு எதிர்க்க காரணமே இதுதான்! என நீதிமன்றத்தில் நடந்த வாதம்

நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகவிருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் நேற்று தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறது.



மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்‌ஷன்ஸ் LLP நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் பேரன் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

KVN புரொடக்‌ஷன்ஸ் LLP சுமார் ரூபாய் 500 கோடி முதலீடு செய்து, 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்த பெரிய முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்கள் தாமதத்தால் பெருமளவில் பாதிக்கப்படும் என வழக்கறிஞர் சதீஷ் பராசரன் நீதிபதியிடம் எடுத்துரைத்தார். மன உளைச்சல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

நீதிபதி பி.டி. ஆஷா, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC)  சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனுக்கு, திரைப்படம் குறித்த புகார் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அன்று படம் வெளியாகவிருந்த அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்களை நேற்று  புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதிபதி கோரினார்.

படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 15, 2025 ஆம் தேதியன்று முழுமையாக முடிவடைந்து, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, CBFC-யின் பரிசீலனைக் குழு, சில குறிப்பிட்ட வெட்டுக்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டு U/A 16+ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் இந்த பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அத்தனை மாற்றங்களையும் செய்து முடித்தனர்.


மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய பதிப்பு தணிக்கை வாரியத்திடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் உடனடியாகவும் முழுமையாகவும் அனைத்துப் பரிந்துரைகளையும் பின்பற்றியபோதிலும், CBFC கிட்டத்தட்ட 10 நாட்களாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என சதீஷ் பராசரன் குறிப்பிட்டார். ஜனவரி மாதம் 9, 2026 ஆம் தேதியன்று படம் வெளியாகவிருந்ததை பலமுறை நினைவுபடுத்தியும் பதில் கிட்டவில்லை என அவர் தெரிவித்தார்.

ஜனவரி 5 ஆம் தேதியன்று, CBFC சென்னை மண்டல அலுவலரிடமிருந்து பெற்ற தகவலால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. திரைப்படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு ( மேல் முறையீட்டு அமைப்பு) அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளைக் சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே இந்த முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், புகாரளித்த தனிநபரின் விவரங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என சதீஷ் பராசரன் சுட்டிக்காட்டினார். மேலும், தயாரிப்புக் குழுவினரும் பரிசீலனைக் குழு உறுப்பினர்களுமே படத்தைப் பார்த்ததால், அதன் உள்ளடக்கம் குறித்து வெளியாட்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக வாதிட்டார்.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சார்பில் ஆஜரான ASG அரு லெ.சுந்தரேசன் , பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், தான் திரைப்படம் பார்த்த பிறகு தனது ஆட்சேபனைகள் கூறி இருந்தாலும்.. அது பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.

U/A 16+ சான்றிதழ் வழங்குவதற்காக வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப CBFC எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ASG, அரு லெ.சுந்தரேசன் CBFC தலைவர், பரிசீலனைக் குழு படம் பார்த்த பிறகும் கூட, ஒரு திரைப்படத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட முழுவதும் அதிகாரம் பெற்றவர் என வாதிட்டார்.

ஜன நாயகன் படத்தின் சிக்கலுக்கு முக்கிய காரணம்

'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.

ஒரு திரைப்படம் பரிசீலனைக் குழுவால் பார்க்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் வழங்கப்பட்ட பிறகும் கூட, அக்குறிப்பிட்ட பரிந்துரைகளில் CBFC தலைவர் திருப்தி அடையாத பட்சத்தில், மறுபரிசீலனை செய்வதற்காக அதை சீராய்வுக் குழு அல்லது மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என ASG விளக்கினார். சினிமாட்டோகிராஃப் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் இந்த நடைமுறைகளை தெளிவாக வரையறுக்கிறது.

பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது இறுதி முடிவு அல்ல. CBFC தலைவருக்கு படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்பும் அதிகாரம் இன்னும் உள்ளது. இந்தப் பரிசீலனைக் குழுவில் தணிக்கைக் குழுவில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள். ஒரு புதிய குழுவால் படம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ASG வலியுறுத்தினார்.

தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது மறுக்கப்படுவதற்கு முன்பாகவோ தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும் ASG வாதிட்டார். புகார் கிடைத்ததை அடுத்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்கல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு சென்னை மண்டல அதிகாரிக்கு CBFC தலைவர் கடிதம் எழுதி இருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.

இந்த சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், CBFC-யின் தலைவர் சட்டத்தின்படி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த முடிவை எடுத்தார் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த சிக்கலான வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பே 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டுக்கான அடுத்த அடியை முடிவு செய்யும்.அன்று வெளியாகவிருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் நேற்று தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்‌ஷன்ஸ் LLP நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

KVN புரொடக்‌ஷன்ஸ் LLP சுமார் ₹500 கோடி முதலீடு செய்து, 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்த பெரிய முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்கள் தாமதத்தால் பெருமளவில் பாதிக்கப்படும் என வழக்கறிஞர் சதீஷ் பராசரன் நீதிபதியிடம் எடுத்துரைத்தார். மன உளைச்சல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

நீதிபதி பி.டி. ஆஷா, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனுக்கு, திரைப்படம் குறித்த புகார் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அன்று படம் வெளியாகவிருந்த அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதிபதி கோரினார்.

படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 15, 2025 அன்று முழுமையாக முடிவடைந்து, டிசம்பர் 18 அன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, CBFC-யின் பரிசீலனைக் குழு, சில குறிப்பிட்ட வெட்டுக்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டு U/A 16+ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் இந்த பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அத்தனை மாற்றங்களையும் செய்து முடித்தனர்.

மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய பதிப்பு வாரியத்திடம் டிசம்பர் 24 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் உடனடியாகவும் முழுமையாகவும் அனைத்துப் பரிந்துரைகளையும் பின்பற்றியபோதிலும், CBFC கிட்டத்தட்ட 10 நாட்களாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என பராசரன் குறிப்பிட்டார். ஜனவரி 9, 2026 அன்று படம் வெளியாகவிருந்ததை பலமுறை நினைவுபடுத்தியும் பதில் கிட்டவில்லை என அவர் தெரிவித்தார்.

ஜனவரி 5 அன்று, CBFC சென்னை மண்டல அதிகாரியிடமிருந்து பெற்ற தகவலால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. திரைப்படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு (ஒரு மேல்முறையீட்டு அமைப்பு) அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளைக் சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே இந்த முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், புகாரளித்த தனிநபரின் விவரங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என பராசரன் சுட்டிக்காட்டினார். மேலும், தயாரிப்புக் குழுவினரும் பரிசீலனைக் குழு உறுப்பினர்களுமே படத்தைப் பார்த்ததால், அதன் உள்ளடக்கம் குறித்து வெளியாட்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக வாதிட்டார்.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சார்பில் ஆஜரான ASG, பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், தான் திரைப்படம் பார்த்த பிறகு தனது ஆட்சேபனைகள் கூறி இருந்தாலும்.. அது பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.

U/A 16+ சான்றிதழ் வழங்குவதற்காக வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப CBFC எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ASG, CBFC தலைவர், பரிசீலனைக் குழு படம் பார்த்த பிறகும் கூட, ஒரு திரைப்படத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட முழுவதும் அதிகாரம் பெற்றவர் என வாதிட்டார்.

ஜன நாயகன் படத்தின் சிக்கலுக்கு முக்கிய காரணம்

'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.

ஒரு திரைப்படம் பரிசீலனைக் குழுவால் பார்க்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் வழங்கப்பட்ட பிறகும் கூட, அக்குறிப்பிட்ட பரிந்துரைகளில் CBFC தலைவர் திருப்தி அடையாத பட்சத்தில், மறுபரிசீலனை செய்வதற்காக அதை சீராய்வுக் குழு அல்லது மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என ASG விளக்கினார். சினிமாட்டோகிராஃப் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் இந்த நடைமுறைகளை தெளிவாக வரையறுக்கிறது.

பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது இறுதி முடிவு அல்ல. CBFC தலைவருக்கு படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்பும் அதிகாரம் இன்னும் உள்ளது. இந்தப் பரிசீலனைக் குழுவில் தணிக்கைக் குழுவில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள். ஒரு புதிய குழுவால் படம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ASG வலியுறுத்தினார்.

தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது மறுக்கப்படுவதற்கு முன்பாகவோ தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும் ASG வாதிட்டார். புகார் கிடைத்ததை அடுத்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்கல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு சென்னை மண்டல அதிகாரிக்கு CBFC தலைவர் கடிதம் எழுதி இருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.

இந்த சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், CBFC-யின் தலைவர் சட்டத்தின்படி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த முடிவை எடுத்தார் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த சிக்கலான வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பே 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டுக்கான அடுத்த அடியை முடிவு செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...