ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கைது.
கர்நாடகா மாநிலம் கதக் மாவட்ட லோக்ஆயுக்தா காவல்துறை சிஞ்சலி கிராபத்தில் ரூபாய் .5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சந்துரு லமானியைக் கைது செய்தனர்.
தமிழ்நாடு போல் அல்லாமல் கர்நாடகாவில் லோக் ஆயுக்தா மிகவும் சிறப்பாகச் செயல்படும் நிலையில் ஊழல் லஞ்சத்தைத் தடுக்கத் தீவிரமாகப் பணி செய்து செயல்படுகின்றனர். இங்கு மட்டுமே லஞ்ச வழக்கு விசாரணைக்கே லஞ்சம் என்ற நிலை உள்ளது, நாம் அதற்கு பல ஆதரங்களைக் கூறமுடியும் அதற்கு காரணம் ஊழல் ஆட்சியாளர்கள் மற்றும் கையறுநிலை மக்கள் இரண்டுமே, ஆனால் கர்நாடகாவில் அப்படி அல்ல கதக் மாவட்டம் ஷிரகட்டி தொகுதி பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சந்துரு லமானி, சிறிய நீர்ப் பாசனத்துறைக் கட்டுமான ஒப்பந்ததாரர் விஜய் பூஜார் என்பவரிடம் ரூபாய் .11 லட் சத்தை லஞ்சமாகத் தரும்படி கேட்டுள்ளார். டாக்டர் சந்துரு லமானி ரூபாய் .11 லட்சம் லஞ்சமாகத் தந்தால் அனுமதி தரப்படும். இல்லாவிட்டால் சங்கடல் பகுதி தடுப்புச்சுவர் அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளார். ஆனால் காண்ட்ராக்டர் விஜய் பூஜார் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.எ லட்சுமேஸ்வர் டவுனில் உள்ள சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனைக்குச் சென்றார். கிராமத்தில் சாலையோரத் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான செலவு சுமார் ரூபாய் 1 கோடி எனவும் ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணி தொடர் பாக 11 சதவீதம் கமிஷன் (லஞ்சம்) கேட்டதால் ஒப்பந்ததாரர் அதிர்ச்சியடைந்தார். (ஆனால் தமிழ்நாட்டில் 30 சதவீதம் வரை அல்லவா கமிஷன் எனும் லஞ்சம் வாங்குகிறார்கள் ஊழல் வாதிகள்!? )
இதுதொடர்பாக அவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கவே, லோக்ஆயுக்தாவின் காவல்துறை அறிவுறுத்தலின் படி, ரூபாய் 5 லட்சத்தை சட்டமன்ற உறுப்பினர் சந்துருலமானியிடம் ஒப்பந்ததாரர் நேரில் வழங்கிய போது, அதை உதவியாளர் பெற்றார் அதன் காரணமாக உதவியாளர் குரு நாயக் தனது கையில் வைத்திருந்த ரூபாய் .50 ஆயிரத்தை மருத்துவமனைக்கு பின்னால் உள்ள பள்ளி காம்பவுண்ட்டுக்குள் தூக்கி வீசினார். அதனால் பணத்தையும் பறிமுதல் செய்தனர். சந்துரு லமானியை லோக் ஆயுக்தா காவல் அலுவலர்கள் கைது செய்தனர். சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர்களான மஞ்சு நாத் வால்மீகி மற்றும் குரு நாயக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர் கள் மீது இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 7(ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு விசாரணை நடத் தப்படுகிறது.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சந்துரு லமானிக்கு சொந்தமான மருத்துவமனையில் சோதனை நடைபெற்றது.
ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் சந்துரு லமானி லோக்ஆயுக்தாவால் கைது செய் யப்பட்ட நிலையில், பாஜகவினர் இது காங்கிரஸ் அரசின் பழிவாஙகும் நடவடிக்கை என்றனர், ஆனால் பாஜக தலைவர்கள் குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில் "பாஜக தலைவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். இந்த நாட்டின் ஊழலற்ற தலைவர்கள் பாஜக தலைவர்கள் தான். லோக்ஆயுக்தா விற்கு தவறான தகவல் கிடைத்திருக்கும். லோக்ஆயுக்தா என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பின்னர் நான் கருத்துக் கூறுகிறேன்" என்றார். இந்த விவகாரத்தில் உண்மை தெரிந்த பிறகு கருத்துக் கூறுவதாக பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.லஞ்ச வழக்கில் கைதான சந்துரு லமானி முண்டகிரி தாலுகா திண்டூர் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த டாக்டர். முதலில் ஷிரகட்டியில் தாலுகா மருத்துவாகப் பணியாற்றினார். கொரானா பரவலான சமயத்தில் அவரது சேவையை மக்கள் பாராட்டினர். மேலும் லட்சுமேஸ்வரா நகரில் சொந்தமாக மருத்துவமனையைக் கட்டினார். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் பாஜகவில் தொகுதி வழங்கப்பட்டதையடுத்து அவர் தனது அரசு பணியை ராஜினாமா செய்யக் கடிதம் வழங்கினார். ஆனால் அந்க்த கடிதம் காங்கிரஸ் அரசால் ஏற்கப்படாமல் இருந்ததும். சர்ச்சையானது. அதன்பிறகு தேர்தலில் களமிறங்கிய சந்துஉ லமானி 28,520 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திடீரென்று மக்கள் செல்வாக்கு பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கோபம் இவர் பக்கம் உள்ளது.








கருத்துகள்