முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி இராதாகிருஷ்ணண் 92 வயதில் காலமானார்

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் காலமானார்! அவருக்கு வயது 92


ராதாகிருஷ்ணண் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். அவர் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராகவும் , உளவுப்பிரிவு டிஐஜியாகவும் பணியாற்றினார். மேலும், சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக சிறப்பாக பணியாற்றி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். 

நாமறிந்த நேர்மையான உயர் அதிகாரி எனப் பெயர் எடுத்த ராதாகிருஷ்ணனுக்கு எழுத்து மற்றும் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் இந்த நிலையில் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற இராதாகிருஷ்ணன், உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.  சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறுமென


தெரிவிக்கப்பட்டுள்ள 
நிலையில், முன்னாள் டிஜிபி ஓய்வு இராதாகிருஷ்ணன் மறைவையொட்டி,  பல அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள்,  இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சிவில் சப்ளை சி.ஐ.டி.காவல்துறை டி.ஜி.பி. என பணியில் கலக்கியவர். ராதாகிருஷ்ணன் IPS- ADGP பணி ஓய்வு...

ஒரு வரலாற்றுப் பார்வை:-        திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் வழியில் கரிசல்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.கல்லூரிப் படிப்புகளை முடித்து விட்டு சங்கரன்கோவில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக பணியில் சேர்ந்ததன் பின் நமக்கு பேராசிரியர் நமது குருநாதர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை தலைமைப் பேராசிரியர் டாக்டர் சர்வேஸ்வரன் அவர்கள் மூலம் நல்ல அறிமுகம் கொண்ட நாயுடு சமூகத்தில் அடையாளமாவார் வரலாற்று சந்தேகங்கள் வந்தால் தொடர்பு கொண்ட ஆசான் இவர், வங்கித் தேர்வுகள் எழுதி கரிவலம் வந்த நல்லூரிலுள்ள கனரா வங்கியில் பணியில் சேர்ந்து பணியிலிருந்த போது தான் யுபிஎஸ்சி தேர்வை எழுதினார்.

எழுதிய முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்வானார்.

நம்மிடம் முதல் சந்திப்பு  1991 ஆம் ஆண்டு கோடை விடுமுறை நாளில் 

" தம்பி என்ன சப்ஜெக்ட் எடுக்கப் போறீங்க?" எனக் கேட்டார்.

"இன்னும் டிசைட் பண்ணல சார், ஹிஸ்ட்ரி எடுக்கலாம்ன்னு.." என்று நான் இழுக்கும் போது இடைமறித்து,

"நோ...நோ... ஹிஸ்ட்ரி ரொம்பப் பெரிய ஏரியா.நிறையப் படிக்கனும்.அதனால ஜியாகிரபியும்,பப்ளிக் அட்மினிஸ்டிரேஷனும் எடுத்துப் படி." என்றார்.

"நீங்க என்ன சார் எடுத்தீங்க?" என்றேன்.

"ஜியாகிரபி தான் தம்பி.." என்றார்.

ஒரே ஒரு முறை தேர்வு எழுதிப் பார்த்தேன்.அதன் பின் அந்த முயற்சிகளைத் தொடரவில்லை. நான்  முயற்சிகளைத் தொடர்ந்து செய்யவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் கோபப்பட்டார். நாயக்கர் வழி வந்த நேர்மை சீற்றம் குறையாத இராதாகிருஷ்ணன். இன்னும் பசுமையான நினைவில்.

கரிசல்பட்டி என்ற வானம் பார்த்த கரிசல் பூமியில் பிறந்து,கல்லூரிப் பேராசிரியராக தன் வாழ்வைத் துவக்கி,யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான ADGP பதவி வரையிலும் வகித்து ஓய்வு பெற்ற இராதாகிருஷ்ணன் சார் இன்று காலை காலமானார். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக  அஞ்சலிகள். நீங்கள் வாழ்ந்த காலம் வரலாறு படித்தவர்களின் வசந்தகாலம், சென்றுவாருங்கள் நீங்கள் படித்த வரலாறு உங்களைப் பேசும் ஓம் சாந்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...