திருப்பரங்குன்றம் காங்கிரஸ் . மாநாடு. அதிக சீட்டு, ஆட்சியில் பங்கு என தீர்மானம். அதோடு.
மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்பது மூடநம்பிக்கை!
நாட்டிலேயே காங்கிரசுக்கு மட்டும்தான் பாஜகவை எதிர்க்கும் தைரியம் இருக்கிறது!
நீங்கள் (திமுக) செய்த தவறுக்கு நாங்கள் பழியைஙச் சுமந்து திரிகிறோம் !
கருத்து சுதந்திரம் என, கூட்டணித் தலைமையை கழுவிலேற்றி இருக்கிறார்கள்.கூட்டணியை தூக்கிப்பிடித்து வெற்றியை நிலை நாட்டப் போவது உறுதி.ஒன்னு ஆட்சியில் பங்குன்னா தொகுதிகளை சரிபாதியா பிரிச்சாகணும்னு தைரியமாகச் சொல்ல வில்லை அது ரகசியப் பேச்சாக உள்ளது
1980 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி திமுக தலைவர் மு.கருணாநிதியிடம் அப்படித்தான் நிபந்தனை விதித்தது
அந்தத் தைரியம் இப்போது பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் மட்டுமே இல்லைன்னா முடிஞ்ச வரை அதிகமான தொகுதிகளைக் கேட்டு வாங்கி நிற்கும் முயற்சி
பெரும்பான்மை கிடைக்காமல் போனால்தான், ஆட்சியில் பங்கு கேட்கனும்..
ஆனா காங்கிரஸ் என்ன நிலை எனில் ,
பருத்திக்கு அப்பன் விதை போட்ட உடனேயே அப்பா எனக்கு நாலு சட்டை வேணும்னு கேட்டானாம் புள்ளைஎன்ற கணக்குல தமாஷ் செய்வதாக அவர்கள் கூட்டணியில் பேசும் நிலை
தேர்தலில் யாருக்கு என்ன நடக்கும்னு தெரியாது. ஆனால் திமுக எதிர்ப்பு அலை உள்ளது இந்த நிலையில் வலுவான கூட்டணி மட்டுமே வெல்லும்.
ஆனா ஒன்று, குட்டியை விட்டு குரங்கு ஆழம் பாக்கற கதை நன்றாக நடக்கிறது.இந்தியா கூட்டணியில் நிலவும் அரசியல் சாணக்கியக் குளறுபடிகளுக்கிடையே தமிழ்நாடு வருகைத் தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் K.C.வேணுகோபால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின் கேரளா திரும்புகிறார். கூட்டணி குறித்துப் பேச அறிவாலயம் செல்ல மாட்டார் எனத் தகவல்!தேர்தல் நேரத்தல் இடைவெளி இல்லாமல் அரசியல் நடவடிக்கை எப்படி எனப் பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாக்கூர் கேசி வேணுகோபால் சென்னை வருகையில் உடனிருந்தார்
அடுத்த 36 மணி நேரத்துக்குள் முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவது உறுதி. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்காதவரை நேரம் தர திமுக தரப்பு மறுப்பு. எனத் தகவல் ஆனால் காங்கிரஸ் தரப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்காத வரை நாங்கள் ஏன் எங்கள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கேள்வி.
பட்சி தகவல்..தவெக நகர்வு சரியாகவே நடக்கிறது இதில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் நடவடிக்கை மிஞ்சும் வகையில் கார்கேவின் ஜாதி அரசியல் மேலோங்கிய நிலையில் கடசி ராகுல் கடடுப்பாடடில் மீட்டு எடுககும் முயற்சி என்பதே இதில் உண்மை அது தமிழ்நாட்டில் இருந்து துவங்குகிறது.டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டி கூட்டத்தில் திமுகவை கடுமையாகத் தாக்கி வரும் காங்கிரஸ் தரவு மேலாண்மைப் பிரிவு நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரோடு நெருக்கமாகவே கூட்டத்தில் கலந்து கொண்ட காட்சிகள் காணும் நிலையில் சொல்லும் செய்தி?எதுவானால் தமிழ்நாட்டில் ஆட்களே இல்லாத இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அதிமுக கூடடணியில் பத்து தொகுதி கட்டு ஆச்சரியம் தரும்போது
இதுகுறித்து பேசிய அந்துலே , "அதிமுக தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம். போட்டியிடாத தொகுதிகளில் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்" என்று கூறுகிறார்.
ஆனால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுகவிடம் 41 தொகுதி கேட்பதில் தவறில்லை தானோ?
ஏற்கனவே திமுக தரப்பிடம் ரகசிய உடன்பாடாக 12 சீட்டை முடிவு செய்த சிதம்பரம் அணியா அல்லது ராகுல் அணியா என அரசியல் களம் காங்கிரஸ் கட்சியைச் சுற்றி வருகிறது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாமென தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்












கருத்துகள்