திரைப்பட இயக்குநர், நடிகர் சேரன் வெளிப்படையான கருத்து
'திருமணம்' படம் தேர்வுக குழுவால் புறக்கணிக்கப்பட்டது குறித்து அவரது கேள்விகள், கவனத்தை ஈர்க்க்கிறது.தமிழ்நாடு அரசின் சார்பில் 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான தொலைக்காட்சித் தொடர் விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் வழங்க உள்ள நிலையில்
இந்த விருது பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் மட்டுமே சிறந்த திரைப்படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ரோபோ சங்கருக்கும், மகளுக்கும் தமிழக அரசு விருது கண்ணீரோடு இந்திரஜா வெளியிட்ட பதிவு
ரோபோ சங்கருக்கும், மகளுக்கும் தமிழக அரசு கொடுத்த விருது சரி. ஆனால்
இந்த விவகாரத்தில் சேரன் பேசும் போது, "பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித் தொகை, திருமணத்திற்கு அரசு உதவி - இப்படி சமூக நலத்திட்டங்களை அரசு முன்னெடுத்து செய்வது பாராட்டுக்குரியது. ஆனால் அதே அரசு விருது கொடுக்கறப்போ, பெரும் பணம் இல்லாத குடும்பங்கள் கடன்படாமல், சிக்கனமாக எப்படித் திருமணம் நடத்தலாம், வாழ்க்கைக்கான சேமிப்பை எப்படி உருவாக்கலாம் என்ற கருத்தோடு, விளிம்பு நிலை மக்களுக்காக உருவாக்கப்பட்ட 'திருமணம்' மாதிரியான படங்களை தேர்வு குழு ஏன் கண்டுகொள்ளவில்லை?.
அதோடு, இது தேர்வு குழுவினரின் நுண்ணிய பார்வை இல்லாததையோ, இல்லாட்டி தங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் விருது கொடுக்குற மனநிலையையோ வெளிப்படுத்துற மாதிரி இருக்கு" என விமர்சித்திருக்கிறார்.
அதேபோல் 'கனா', 'கைதி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மோனிகா, இந்த விருது அறிவிப்பு குறித்து விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில்
"இந்த விஷயத்தை நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்றால், இதைப் பற்றி பேச வேண்டுமென்று நான் எண்ணியிருப்பேனா என்பது எனக்கே தெரியாது.
அந்தக் காலகட்டத்தில் என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர்.
அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
ஆனால், தற்போதைய நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக, இது தனிநபர்கள் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அன்று.
யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை. இது அரசால் வழங்கப்படும் மாநில விருது.
உண்மையான திறமையைப் பாராட்டும், ஒவ்வொரு நடிகருக்கும் மிக முக்கியமான ஒரு பெருமைமிக்க அங்கீகாரம். அந்த அங்கீகாரம் பெற வேண்டியவர்களுக்குக் கிடைக்காமல் போகும்போது, அது மனதிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
உண்மையில், இந்த விஷயத்தைக் கேள்வி எழுப்பிப் பேசுவது என் உரிமை என்றே நான் கருதுகிறேன். இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் போது, விருதுகளின் மீதுள்ள நம்பிக்கையும் மதிப்பும் மெதுவாகக் குறைந்துவிடுகிறது.
இந்த விஷயத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள், துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த சம்பந்தப்பட்டவர்கள், தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆக இது இனி பேசுபொருளாகிறது.










கருத்துகள்