முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசாரணை வளையத்தில் ஊழல்,மோசடி மூலம் சொத்துக் குவித்துக் கைதான அமைச்சரின் முன்னால் உதவியாளர்

ஆட்சி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகமான சொத்துகளைக் குவித்தேன்' - அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம்

ஆட்சி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்தேன்' என மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஊழல் தடுப்புத் தகவல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மதுரையில் மோசடி வழக்கில் அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான பல்வேறு புகார்களை விசாரிக்க இருவரையும் இரண்டு நாள் காவல்துறை காவலில் எடுத்து மதுரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர்.


அப்போது ஜெய்பாலாஜி அவர்களிடம் அளித்த வாக்குமூலத்தில் : ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வம் இருந்ததால் 2013-ஆம் ஆண்டில் மருதம் லேண்ட் புரொமோட்டர் எனும் நிறுவனம் துவங்கி தொழில் புரிகிறேன். அதைத்தொடர்ந்து சரவணக்குமார், கணேசன், நமச்சிவாயம் ஆகியோருடன் சேர்ந்து மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் மதுரம் ப்ராபர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

பல்வேறு ஊர்களில் கிளைகளைத் தொடங்கினோம். 5 மற்றும் 7 ஆண்டுகள் என்ற அடிப்படையில் தவணை முறையில் பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று முதிர்வுக் காலத்தில் இடம் கிரையம் செய்து கொடுப்பதாக விளம்பரம் செய்தோம். ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு இடத்தைப் பதிவு செய்து தர மனமின்றி நாங்களே வைத்துக்கொள்ள முடிவெடுத்தோம்.

மருதம், மதுரம் நிறுவனம் மூலம் பணம் செலுத்தியோருக்குப் பணத்தை திருப்பித் தரவில்லை. பணம் செலுத்தியோர் தகராறு செய்தனர். எனது ஆட்சி அரசியல் செல்வாக்கை வைத்து மற்றவர்களை சிக்கவைத்து நான் மட்டுமே தப்பித்தேன். 2014-ஆம் ஆண்டில் ஜேஎஸ்வி புரமோட்டர்ஸ் என்ற பெயரில் மதுரை அண்ணா நகரில் அலுவலகம் தொடங்கினேன்.

தோப்பூர் பகுதியில் வீட்டுமனைகளை வாங்கி விற்றேன். அழகுபாண்டி என்பவருடன் சேர்ந்து 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். மேலும், ராம் அருண், ராம் ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து தொழில் செய்தேன். ராம் அருணுக்கு வேறு அரசியல்வாதிகளிடம் தொடர்பிருந்ததால் அதைப் பயன்படுத்தினேன்.

முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் நட்பு வைத்து அதையும் பயன்படுத்திக் கொண்டேன். சில நில உரிமையாளர்களை மிரட்டி மோசடி செய் தேன். கணக்கில்லாமல் வரும் கோடிக்கணக்கான பணத்தை எனது பெயரிலும், மனைவி கலாவதி மற்றும் ராம் அருண், அவரது மனைவி சுவாதி லட்சுமி பெயரிலும் கூட்டாக இடத்தை வாங்கித் தொழில் புரிகிறோம்.

சென்னை ECR நீலாங்கரையிலும் பல ஏக்கர் நிலம் வாங்கி தொழில் செய்கிறேன். சென்னை OMR  பெருங்குடியில் நானும், இலக்குவனும் சேர்ந்து அபார்ட்மென்ட் வீடுகள், ஹோட்டல்களை வாங்கியுள்ளோம். மதுரையில் சீதாராமன் என்பவரிடம் அரசியல் பிரமுகர்களின் பெயரைப் பயன்படுத்தி அவரது வீட்டுமனைத் திட்டத்தில் 2 மனைகளை வாங்கி ஏமாற்றினேன்.

பல நபர்களிடம் மோசடி செய்து பணத்தை வைத்து கோயமுத்தூர் நகைக்கடை மற்றும் மதுரை ஆரப்பாளையத்தில் தூரியம் ஸ்டீல்ஸ் நிறுவனத்தை நடத்துகிறேன். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறைய சொத்துகள் குவித்த நிலையில் வெளிமாநிலம் உள்ளிட்ட பல இடங்களிலும் முதலீடுகள் செய்துளேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக ஊழல் தடுப்பு வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது.  ஒரு கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.77 லட்சம் மதிப்பிலான வீட்டுமனையை மிரட்டி வாங்கி, தொகையை தராமல் ஏமாற்றியதாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி மீது வழக்கு பதிந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...