முன்னால் முதல்வர் அஇஅதிமுக பொதுச்செயலாளர் காலஞ்சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வருமான வரித்துறை பாக்கியை வட்டியுடன் சேர்த்து ரூபாய்.9.17 கோடியாக உள்ளதை இதுவரை செலுத்தப்படாமலேயே உள்ளது.
அதேபோல் அவருக்கு ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது அவர் காலமானதால் அவரது 100 கோடி ரூபாய் அபராதத் தொகை மட்டும் இதுதுவரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது, (நகைகள் ஏல விற்பனை செய்து வந்தது போக) ஊழல் வழக்கில் சிறை செல்லாமல் காலமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின்
இரண்டாம் தரப்பு வாரிசாக போராடி நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற அவரது அண்ணன் காலஞ்சென்ற ஜெ.ஜெயக்குமாரின் மகனும், மகளும் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் மற்றும் தீபா ஆகியோர் தற்போது ரூபாய்.1.12 கோடியை வெள்ளையாகவே செலுத்தி உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரியைச் செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் அதை வைத்து வருமான வரித்துறை கணக்குகளின் பாக்கி வரித் தொகை நேர்செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வருமான வரித்துறை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளதில், காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் மற்றும் தீபா தரப்பில் ரூபாய்.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூபாய்.9.17 கோடியாக உள்ளது என்றது.
ரூபாய்.13 கோடி வரிப் பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா, இரண்டாம் தரப்பு வாரிசுகள் தீபக் மற்றும் தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த வரிப்பாக்கியை இருவரும் வாரிசு எனச் செலுத்தும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் ஜெ. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 100 கோடி அபராதம் முழுவதும் செலுத்த வேண்டிய நிலையும் அவர்களுக்கு வரலாம் என்பதால் தான் இந்த வரிப் பாக்கியை இருவரும் செலுத்தத் தயங்குகிற்கள் என பலரும் பேசுவதை அவர்களும் அறிவர்.இதற்கு முன் ஜெ.ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அலுவலரை நியமிக்கக்கோரி அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எதிர்தரப்பினராக தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெ.ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்தது. அதன்பின் மேலும் அந்தத் தீர்ப்பில் திருத்தம் செய்து, அவர்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்த கடந்த ஆட்சியில்
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியதென்றும் தீபா மற்றும் தீபக் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசு தரப்பு அப்போது தெரிவித்தது. இதனை அடுத்து, தீபா மற்றும் தீபக் ஆகியோர் அங்கு செல்வதை விடுத்து, சட்டரீதியாக பிரச்சனையைக் கையாளவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
காலமான பின் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாரிசுதாரர்கள் என கடந்த ஆறாண்டுகளில் ஜந்து பேர் வந்து விட்டனர், அவரது உருவ ஒற்றுமையை வைத்து பலரை ஒரு கும்பல் தயார் செய்து வரிசையாக ஒவ்வொருவராக அனுப்பிவைத்து ஜெ.ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்க செய்து வரும் நிலையில் அந்த வாரிசு என வந்து செய்தியாளர் மத்தியில் பேசும் போலிகளை இந்த வருமானவரிப் பாக்கியையும் நீதிமன்றம் விதித்த அபராதத்தையும் செலுத்துமபடி கூறினால் மன்னர் சாலமன் அவையில் குழந்தைக்கு உரிமை கோரிய போலியான பெண் நிலை போல ஆகலாம்.
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் தாயார் காலமான நடிகை சந்தியா ஜெ.ஜெயலலிதாவுக்கு ஒரு உயில் எழுதி வைத்தார். ஆனால் செல்வி ஜெ.ஜெயலலிதா எந்த ஒரு உயிலும் எழுதவில்லை எனப் பலரும் கூறிவரும் நிலையில் தனக்கு வாரிசு இல்லை என்பதை வழக்கு மன்றங்களில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பிற இடங்களிலும் அதை ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படியானால் இப்போது நான் செல்வி ஜெ.ஜெயலலிதா மகள் என வரும் நபர்களைத் தயாரித்து அனுப்பும் நபர் யார், எதற்கு இந்த முயற்சி என்பதை நாடறியத் தெரிய வைக்க வேண்டும், அப்போது தான் சில தலை காட்டாத மைலாப்பூர் தந்திரக் குள்ளநரிகள் சிக்கும். அதை அவரால் வளர்க்கப்பட்ட அதிமுக தானே செய்ய வேண்டும் இதுவரை செய்தார்களா? ஏன் அதைச் செய்யவில்லை என மற்றவர்கள் கேட்டார்களா இல்லையே!எல்லாம் சுயநலமிகளின் அரசியல்.
சாயம் விரைவில் வெளுக்கும். இரட்டை இலையும், அதிமுகவும் மற்றொரு நபருக்கு மாறும் போது அல்லது அது முடக்கப்படும் போது சில உண்மைகள் வெளியாகும். இனி நடிகர் விஜயின் தவெக கூட்டணியில் வி.கே.சசிகலா நடராஜன் ஆதரவாளர்கள் களம் காண்பார்கள். அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி சசிகலா நடராஜன் தரப்புக்கு துரோகம் செய்து அதிமுகவைக் கைப்பற்றிய நிலை மாறி தற்போது டி.டி.வி.தினகரன் நடத்தும் அமமுகவை சசிகலாவிடமிருந்து பிரிக்க நடக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமானது. அந்த வழிவழி மடாதிபதி சிறையில் இருந்ததை அவரது சிஷ்ய கோடிகள் மறக்கவில்லை அல்லது மன்னிக்கவுமில்லை, ஆனால் சத்திரியப் பெண்மணி வி. கே சசிகலா நடராஜன் நடத்தும் அரசியலை அவர்களால் இதுவரை வெல்லவும் முடியவில்லை, நாற்பது வருடம் பல குடும்ப நட்பும் உறவுமே உடைபடுவதைப் பல இடங்களில் காணும் நிலையில், இரு பெண்கள் ஆட்சி அதிகாரம் செலுத்தி தனி பலம் சேர்த்ததை அந்தக்கும்பலால் மறக்க முடியவில்லை, உறவுக்காக சிறை செல்லவே யோசிக்க வைக்கும் பலர் மத்தியில் நட்புக்கு சிறை சென்ற வி.கே.சசிகலா நடராஜன் செயல் அறியாத பலர் தூற்றலாம், அறிந்த நமக்கு அவரது தியாகம் பெரிது. உண்மை தியாகிகளுக்கு எப்போதும் வாழ்வு உண்டு துரோகிகள் என்றாவது வகையாக சிக்குவார்கள் ஆதரவற்று இதுவே இயற்கை நியதி. அரசியல் பிழைப்புக்கு ஜெயலலிதா ஜெயராமனை வணங்கியவர்களை விட வி. கே.சசிகலா நடராஜனை வணங்கியவர்களே அதிகம், வானில் பறந்த போதிலும் வழியில் விழுந்து வணங்கியவர்கள் அவர்கள் தான் என்பதை நாமும் நாடும் நன்கு அறிவோம்.
இதுவரை புதியபார்வை ஆசிரியர் முனைவர் ம.நடராஜனால் அமைச்சரான நாற்பத்து ஆறு நபர்கள் மற்றும் நடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியலுக்காக வந்தவர்கள் அவர்கள் அவரோடு புகைப்படம் எதுவும் எடுத்தார்களா இல்லையே?






























கருத்துகள்