முன்னால் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வருமான வரித்துறை பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூபாய்.9.17 கோடியாக இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது.
அதேபோல் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது அவர் காலமானதால் அவரது 100 கோடி ரூபாய் அபராதத் தொகை மட்டும் இதுதுவரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது ஊழல் வழக்கு சிறை செல்லாமல் காலமான ஜெ.ஜெயலலிதாவின்
இரண்டாம் தரப்பு வாரிசாக நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற அவரது அண்ணன் காலஞ்சென்ற ஜெ.ஜெயக்குமாரின் மகனும் மகளும் அறிவிக்கப்பட்டுள்ள தீபக் மற்றும் தீபா ஆகியோர் தற்போது ரூபாய்.1.12 கோடியை செலுத்தி உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் அதை வைத்து என வருமான வரித்துறை கணக்கு பாக்கி வரி நேர்செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வருமான வரித்துறை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளதில், செல்வி ஜெ.ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் மற்றும் தீபா தரப்பில் ரூபாய்.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூபாய்.9.17 கோடியாக உள்ளது என்றது.
ரூபாய்.13 கோடி வரிப் பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜெ.ஜெயலலிதா, இரண்டாம் தரப்பு வாரிசுகள் தீபக் மற்றும் தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த வரிப்பாக்கியை இருவரும் வாரிசு எனச் செலுத்தும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் ஜெ. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 100 கோடி அபராதம் முழுவதும் செலுத்த வேண்டியநிலை வரலாம் என்பதால் தான் இந்த வரிப் பாக்கியை இருவரும் செலுத்தத் தயங்குகிற்கள் என பலரும் பேசுவது அவர்களும் அறிவர்.இதற்கு முன் ஜெ.ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அலுவலரை நியமிக்கக்கோரி அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி மற்றும் ஜானிகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எதிர்தரப்பினராக தீபா, தீபக் சேர்க்கப்பட்டனர்.
நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, ஜெ.ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெ.ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்தது. அதன்பின் மேலும் அந்தத் தீர்ப்பில் திருத்தம் செய்து, அவர்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சியில்
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது என்றும் தீபா மற்றும் தீபக் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசு தரப்பு அப்போது தெரிவித்தது. இதனை அடுத்து, தீபா மற்றும் தீபக் ஆகியோர் அங்கு செல்வதை விடுத்து, சட்டரீதியாக பிரச்சனையைக் கையாளவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜெ.ஜெயலலிதாவின் வாரிசுதாரர்கள் என கடந்த ஆறாண்டுகளில் ஜந்து பேர் வந்து விட்டனர், அவரது உருவ ஒற்றுமையை வைத்து பலரை ஒரு கும்பல் தயார் செய்து வரிசையாக ஒவ்வொருவராக அனுப்பி ஜெயலலிதா புகழைக் கெடுக்க செய்து வரும் நிலையில் அந்த வாரிசு என வந்து செய்தியாளர் மத்தியில் பேசும் போலிகளை இந்த வருமானவரி பாக்கியை செலுத்துமபடி கூறினால் சாலமன் அவையில் குழந்தை உரிமை கோரிய பெண் நிலைபோல ஆகலாம். ஜெ.ஜெயலலிதாவின் தாயார் சந்தியா ஜெ.ஜெயலலிதாவுக்கு ஒரு உயில் எழுதி வைத்தார். ஆனால் ஜெ.ஜெயலலிதா எந்த ஒரு உயிலும் எழுதவில்லை எனப் பலரும் கூறிவரும் நிலையில் தனக்கு வாரிசு இல்லை என்பதை வழக்கு மன்றங்களில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பிற இடங்களிலும் அதை ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படியானால் இப்போது நான் ஜெயலலிதா மகள் ன வரும் நபர்களை தயாரித்து அனுப்பும் நபர் யார், எதற்கு இந்த முயற்சி என்பதை நாடறிய தெரிய வைக்க வேண்டும் அப்போது தான் சில தலை காட்டாத மைலாப்பூர் தந்திரக் குள்ளநரிகள் சிக்கும்.
















கருத்துகள்