முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

4 மாவட்டக் காவல் உயர் அலுவலர்கள் உடனடிப் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் , விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்களை  இடமாற்றம் செய்த இந்தியதா தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவின் 


முழு விவரம் ."கரூர் சம்பவத்துக்கு இரவே கிடைத்த உடற்கூறாய்வு   சான்றிதழ்..ஏன் அது ஏன் விளாத்திகுளம் பெண்ணுக்கு கிடைக்கவில்லை" என நடிகை கௌதமி கூட கேட்கும் நிலையில். 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் . நிர்வாகக் காரணங்களுக்காக ஒரே நாளில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் , விருதுநகர் ஆகிய 4 மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.தேர்தல் ஆணையத்தின் கடுமையான உத்தரவுகள். சிறப்பு 

தேர்தல் ஆணையம் இடமாற்றத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், சில முக்கியக் கட்டுப்பாடுகளையும் விதி


த்துள்ளது. நியமிக்கப்பட்ட நான்கு காவல்துறை அலுவலர்களும் உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான அறிக்கையை நாளை மார்ச் மாதம் 17 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.





தற்போது மாற்றப்பட்டுள்ள முந்தைய நான்கு காவல்துறைக் கண்காணிப்பாளர்களையும்  தேர்தல் தொடர்பான எந்தவொரு பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக புகார்களுக்கு உள்ளாகும் உயர் அதிகாரிகள் உயர் அலுவலர்கள் அல்லது நீண்ட காலம் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் தேர்தல் நேரத்தில் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறை ஆகும். இந்த அதிரடி மாற்றம் காவல்துறை தரப்பு மக்கள் மட்டுமே எஜமானர்கள் என்ற  உணர்வு வர வேண்டும் 

கரூர் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றம் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு:2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து நியாயமான உத்தரவு பிறப்பித்துள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள புதிய  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் 

கரூர் மாவட்டத்தின் எஸ்.பி: யாக டி.என்.ஹரிகிரண் பிரசாத், IPS (2016)

ஈரோடு மாவட்ட எஸ்.பி: யாக .டி.வி.கிரண் ஸ்ருதி,IPS (2018)

நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி:யாக சுஜித் குமார்,IPS (2013)

விருதுநகர் மாவட்ட எஸ்.பி: யாக டாக்டர் என். ஸ்ரீநாதா,IPS (2013) தற்போதுள்ள எஸ்பி ஜோஷ் தங்கையா, திமுகவின் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு சாதகமாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரை இடமாற்றம் செய்து புதிய எஸ்பியாக டி.என்.ஹரிகிரண் பிரசாத்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்த நிலையில் இவர்களையும் மாற்ற வேண்டும் என புகார் சென்றது.

சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தீரஜ்குமார் [உள்துறை கூடுதல் தலைமை செயலாளர்), அமுதா [வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர்), ககன்தீப் சிங் பேடி [ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர்), ஜெ.ராதாகிருஷ்ணன் [மின் வாரிய தலைவர்) ஆகியோரை தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடுத்தக்கூடாது; வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி, தேர்தல் ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மனு அளித்துள்ளார்.


இதேபோல் 
மேற்கு வங்காளத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலரை ECI மாற்றியது, துஷ்யந்த் நரியாலா புதிய தலைமைச் செயலாளராகவும், சங்கமித்ரா கோஷ் புதிய உள்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

மாநிலத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறைச் செயலாளர் ஜெகதீஷ் பிரசாத் மீனா ஆகியோர் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...