முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாங்குநேரி கொலை சம்பவத்தில் 7 நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கொலை சம்பவத்தில் 7 நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்றிரவு இருவர் படு கொலை செய்யப்பட்ட  சம்பவம் குறித்து நேற்றிரவே தென்மண்டல ஐஜி மற்றும் திருநெல்வேலி சரக டிஐ ஜி நேரில் சென்று விசாரணை நடத்தினர்

தற்போது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் முன்னிலையில் பல்வேறு ஆலோசனை  நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது 

இந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நாங்குநேரி அருகே ஒரு கும்பல் ஒன்பது நபர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததோடு, ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலை 'நாளொரு கொலையும், பொழுதொரு வன்முறையுமாக' தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் சீரழித்து  விட்டது ஆட்சி முடிவில் திமுக அரசு. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெட்டலாம், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற சூழ்நிலை உருவானதற்கு காரணம் தமிழ்நாடு அரசின் உழல் இல்ல்லாத தலைமை இல்லை என்பதும் நிர்வாகமின்மை மற்றும் அலட்சியம் தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை, குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து போனதற்கு காரணம் லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் ஊறிப்போன  கொள்கைகளினால் தான். குற்றம் நடைபெற்ற பின்னர், குற்றவாளிகளை பிடித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதை குற்றங்கள் நடைபெறாவண்ணம் அரசை நடத்துவது தான் நல்ல அரசுக்கு அழகு என்பதை முதலமைச்சர்  உணரவேயில்லை. 

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் 

 நடைபெற்ற  சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நபர்கள், கூறும் விவரம் 

சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் கஞ்சா போதையிலோ, சாராய போதையிலோ இல்லை. அவர்கள் மிகத்தெளிவாக ஜாதிய உணர்வு மட்டுமே கொண்டிருந்துள்ளார்கள்.

 வெட்டுப்பட்டவர்கள் அனைவரும் 55 வயதுக்கு மேலே உள்ள ஓட முடியாத வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி

சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரு பெரிய எண்ணிக்கையில் பலரை கொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடும், விரைவாக சம்பவத்தை முடித்துவிட்டு வேகமாக பறந்து சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தோடும் வந்துள்ளார்கள்.

முதலில் நாங்குநேரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் பலரை தலையை வெட்டி சிதைத்து விட்டு பிறகு அங்கிருந்து பைக்குகளில் வேகமாக சென்று களக்காடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட கடம்போடுவாழ்வு என்ற கிராமத்திற்கு சென்று அங்கு சாலையில் நின்ற இரண்டு பேரை கொடூரமாக வெட்டி இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது நாடார் மற்றும் இரண்டு யாதவர் சமுதாயத்தினர், ஒரு படடியல் சமூக சாம்புவர், ஒரு ஆச்சாரி, ஒரு ஒடிஸ்லா மாநிலத்தை சேர்ந்த செங்கல்சூளையில் பணி செய்த தொழிலாளி.

தற்போது 2 பேர் சம்பவ இடத்தில் இறப்பு என்றாலும் வெட்டுப்பட்ட பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் உள்ளனர். சிலர் கடைசிக்கட்டத்தில் இருப்பதாகத் தகவல்.

கொலைகார கும்பலுக்கு திட்டமிட்ட ஒரு உள் நோக்கம் இருக்கின்றது. அதன் காரணம் எது என்பதும் , சட்டமன்றத் தேர்தல் வரப்போகும் இந்த காலத்தில் ஏன் இந்த கொடூர கொலைகள் செய்யப்பட்டன என்பதும் காவல்துறையின் புலன் விசாரணையில் தான் தெரியம்

சம்பவத்தில் ஈடுபட்ட 7 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பொதுவாக நாங்குநேரி ஜீயர் மடத்தின் சொத்துக்கள் என்பது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள். அதன் விவசாயம் சார்ந்த வாழ்வியல், அதன் இப்போதைய சந்தை மதிப்பு பல கோடி . அது ஒரு தனி அரசாங்கம். அதை அனுபவிப்பதிலும், அதன் வில்லங்கங்களிலும், அதன் மூலமாக உருவாகும் சமூக அரசியல் பொருளாதார அதிகாரத்திலும் "வரும் மனப்போக்கே இது போன்று நடக்கும் கொடூரங்களின் ஆணி வேர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...