திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கொலை சம்பவத்தில் 7 நபர்கள் கைது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்றிரவு இருவர் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நேற்றிரவே தென்மண்டல ஐஜி மற்றும் திருநெல்வேலி சரக டிஐ ஜி நேரில் சென்று விசாரணை நடத்தினர்
தற்போது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் முன்னிலையில் பல்வேறு ஆலோசனை நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது
இந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நாங்குநேரி அருகே ஒரு கும்பல் ஒன்பது நபர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததோடு, ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலை 'நாளொரு கொலையும், பொழுதொரு வன்முறையுமாக' தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் சீரழித்து விட்டது ஆட்சி முடிவில் திமுக அரசு. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெட்டலாம், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற சூழ்நிலை உருவானதற்கு காரணம் தமிழ்நாடு அரசின் உழல் இல்ல்லாத தலைமை இல்லை என்பதும் நிர்வாகமின்மை மற்றும் அலட்சியம் தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை, குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து போனதற்கு காரணம் லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் ஊறிப்போன கொள்கைகளினால் தான். குற்றம் நடைபெற்ற பின்னர், குற்றவாளிகளை பிடித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதை குற்றங்கள் நடைபெறாவண்ணம் அரசை நடத்துவது தான் நல்ல அரசுக்கு அழகு என்பதை முதலமைச்சர் உணரவேயில்லை.
நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில்
நடைபெற்ற சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நபர்கள், கூறும் விவரம்
சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் கஞ்சா போதையிலோ, சாராய போதையிலோ இல்லை. அவர்கள் மிகத்தெளிவாக ஜாதிய உணர்வு மட்டுமே கொண்டிருந்துள்ளார்கள்.
வெட்டுப்பட்டவர்கள் அனைவரும் 55 வயதுக்கு மேலே உள்ள ஓட முடியாத வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி
சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரு பெரிய எண்ணிக்கையில் பலரை கொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடும், விரைவாக சம்பவத்தை முடித்துவிட்டு வேகமாக பறந்து சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தோடும் வந்துள்ளார்கள்.
முதலில் நாங்குநேரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் பலரை தலையை வெட்டி சிதைத்து விட்டு பிறகு அங்கிருந்து பைக்குகளில் வேகமாக சென்று களக்காடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட கடம்போடுவாழ்வு என்ற கிராமத்திற்கு சென்று அங்கு சாலையில் நின்ற இரண்டு பேரை கொடூரமாக வெட்டி இருக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது நாடார் மற்றும் இரண்டு யாதவர் சமுதாயத்தினர், ஒரு படடியல் சமூக சாம்புவர், ஒரு ஆச்சாரி, ஒரு ஒடிஸ்லா மாநிலத்தை சேர்ந்த செங்கல்சூளையில் பணி செய்த தொழிலாளி.
தற்போது 2 பேர் சம்பவ இடத்தில் இறப்பு என்றாலும் வெட்டுப்பட்ட பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் உள்ளனர். சிலர் கடைசிக்கட்டத்தில் இருப்பதாகத் தகவல்.
கொலைகார கும்பலுக்கு திட்டமிட்ட ஒரு உள் நோக்கம் இருக்கின்றது. அதன் காரணம் எது என்பதும் , சட்டமன்றத் தேர்தல் வரப்போகும் இந்த காலத்தில் ஏன் இந்த கொடூர கொலைகள் செய்யப்பட்டன என்பதும் காவல்துறையின் புலன் விசாரணையில் தான் தெரியம்
சம்பவத்தில் ஈடுபட்ட 7 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பொதுவாக நாங்குநேரி ஜீயர் மடத்தின் சொத்துக்கள் என்பது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள். அதன் விவசாயம் சார்ந்த வாழ்வியல், அதன் இப்போதைய சந்தை மதிப்பு பல கோடி . அது ஒரு தனி அரசாங்கம். அதை அனுபவிப்பதிலும், அதன் வில்லங்கங்களிலும், அதன் மூலமாக உருவாகும் சமூக அரசியல் பொருளாதார அதிகாரத்திலும் "வரும் மனப்போக்கே இது போன்று நடக்கும் கொடூரங்களின் ஆணி வேர்.


கருத்துகள்