ஐந்து மாநிலங்கள்
உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு
மொத்தத் தொகுதிகள் 234 ல் ஒரே கட்டமாக நடக்கும்
தேர்தல் வாக்குப்பதிவு நாள் 23.04.2026
பதிவான வாக்குகள் எண்ணிக்கை 04.05.2026 ஆம் தேதி,
வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 30.03.2026 ஆம் தேதி,
வேட்புமனு தாக்கல் முடிவு – 06.04.2026 ஆம் தேதி,
தமிழ்நாட்டு திமுக அரசு உள்ளிட்ட 5 மாநில அரசுகள் தனது அதிகாரத்தை இன்று மாலை முதல் இழக்கவுள்ளது. இதனையடுத்து தேர்தல் முடியும் வரை காபந்து அரசு தான் செயல்பாட்டில் இருக்கும். தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அமையவுள்ள புதிய ஊழலற்ற அரசு அமைவதற்கு மக்கள் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டிய காலம் இது தான், புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் இனி வெளியிட முடியும். எனவே தற்போதுள்ள முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்கள் என அனைவரும் இன்று மாலை அதிகாரத்தை இழக்கவுள்ளனர். அந்த வகையில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி நாளாகவே இன்றைய தினம் பார்க்கப்படுகிறது.
காபந்து அரசாக மாறும் தமிழ்நாடு அரசு
கடந்த 7.5.2021 ஆம் தேதி அன்று பொறுப்பேற்ற திமுக அரசு பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் கடந்த 5 ஆண்டுகளாக பலவற்றை அறிவித்து சிலவற்றை செயல்படுத்தி வந்தது. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசிடமுள்ள அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். இதனையடுத்து தற்போதுள்ள திமுக அரசு, காபந்து அரசாக மாறிவிடும். காபந்து அரசு அமலுக்கு வந்த பிறகு முதமைச்சர், அமைச்சர்கள் என யாரும் தலைமைச் செயலகத்திற்கு வந்து அரசு உயர் அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ள முடியாது.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு
முக்கிய திட்டங்களை
இனி அறிவிக்கவும் முடியாது. இது மட்டுமில்லாமல் யாரும் அரசு வாகனங்களைப் பயன்படுத்த முடியாது. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை தங்களுக்கான வாகனங்களை தலைமைச் செயலகத்தில் விட்டுவிட வேண்டும். அதே நேரத்தில் ஏதாவது மிக முக்கியமான பிரச்சினை என்றால் மட்டுமே அரசு உயர் அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் ஆலோசனை நடத்தலாம். அப்படித்தான் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக அரசு காபந்து அரசாக மாறிய நிலையில், கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தது.
சாதனைப், புகைப்படங்கள் அகற்றப்படும்
எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு அரசு அதிகாரிகளோடு கூட்டங்கள் நடைபெற்றது. எனவே அந்த முறையே தற்போதும் பின்பற்றப்படும், மேலும் தலைமைசெயலகத்தில் அரசின் சார்பாக வைக்கப்பட்டுள்ள சாதனைகளை கூறும் விளக்கப்படங்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தேர்தல் தொடர்பான தகவல்கள் மட்டும் இடம் பெற்றிருக்கும் 5 மாநிலங்களில் பொதுத்தேர்தல் - வாக்குப்பதிவானது
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் , மற்றும் கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியும், ஒரே கட்டமாக
தமிழ்நாடு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியும்
மேற்குவங்காளத்தில் (2 கட்டமாக) ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மற்றும்
ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி எனவும்
வாக்கு எண்ணிக்கை
மே மாதம் 04 ஆம் தேதி எனவும் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது, தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்தது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துளளது 04.05.2026. ஆம் தேதி முடிவு வரும் இந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், கேரளம் என நான்கு மாநிலங்கள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தேதியை அறிவித்து இந்த 5 மாநிலங்களின் ஆட்சிகாலம் வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. தேர்தல் சட்டங்களின் படி, ஆணையம் அந்தத் தேதிகளுக்கு முன்பாக தேர்தல்களை நடத்தவிருக்கிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதி தொடர்பாக, "மேற்கு வங்காளம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளம் மாநிலங்களில் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். நீங்கள் வாழ்வில் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் வாக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதிர்காலம்.லட்சக்கணக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து, சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், தெளிவான சின்னங்கள், தன்னார்வலர்களின் உதவி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்களிக்கும் அறைக்குள் போதுமான வெளிச்சமும், போதிய நிழலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நமது மதிப்பிற்குரிய மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனிப்பும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் மூலம் அனைத்து வாக்காளர்களும் எளிதாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்ய ஆணையம் முழு அக்கறை செலுத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ஆம் தேதி நடைபெறும். கேரளம் , அஸ்ஸாம் மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4ஆம் தேதி நடைபெறும்." எனக் கூறியிருக்கிறார். அனைவருக்கும் அணுகக்கூடிய மற்றும் அமைதியான தேர்தல்கள் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில் நடத்தை விதிமுறையாக தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.
பிரச்சாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.
அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.
கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்
ரொக்கமாக பணம் கையில் எடுத்து செல்ல கட்டுப்பாடு. கடந்த தேர்தல் வரை 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்ல தடை
இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கபடும்

























கருத்துகள்