முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படக் கவிஞர் வைரமுத்துவுக்கு `ஞானபீடம்' சிலர் வரவேற்பும் பலர் எதிர்ப்பும்

 திரைப்படக் கவிஞர் வைரமுத்துவுக்கு 'ஞானபீடம்'

கவிஞர் வைரமுத்துவுக்கு `ஞானபீடம்' விருது அறிவிப்பு. அகிலன் (1975), ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவதாக ஞானபீடம் விருது பெறும்

தமிழ் இலக்கியவாதி பாடலாசிரியர் வைரமுத்து.

"இதுவரை தமிழ் பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்று குறை இப்போது கழிந்தது. இந்த விருது அவரது வயதைக குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்" எற்கிறார் 





வைரமுத்து நெகிழ்ச்சிக்கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

ஏழு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளைப் வென்றவர் கவிஞர் வைரமுத்து

திரைத் துறையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளவர்

தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதை காணிக்கை ஆக்குகிறேன்: என வைரமுத்து தகவல் 

இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிப்பு

1975 ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002 ல் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது மூன்றாவது

முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவர்

தந்த அருந்தமிழ் மறைக்கு...முத்தமிழ் கவிஞர் வைரமுத்து  எழுதி வெளியிடவுள்ள அரும்பத உரை தரும் பெரும்பொருள் அறிய பேராவல் கூடுகிறது..!

"நானும், எனது பேனாவும் தலைகுனியும் போது தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும்"-கவிஞர் வைரமுத்து.

'நான்', 'எனது' பேனா என்ற அகந்தையில் தமிழை தலை குனிய வைக்க ஒருவன் இனி பிறக்கக் கூட முடியாது, கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.

கவிஞர் வைரமுத்துக்கு இலக்கியத்தில் உயர்ந்த விருதான  ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பது, கவிதைகளின் அழகியல் மிடுக்கும் துடிப்பும் இன்று நகர்மயமாகி போன பல லட்சக்கணக்கான கிராமத்து  இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது.

அவரின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் வரும் நாயகன் “பேயத் தேவன்”இலக்கியத்தின் ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல தெக்கத்தி மனித ஆத்மாக்களின் குவி மையமாகும்

நிலத்தோடு மண்ணோடு மரத்தோடு மக்களோடு இணைந்த உருவம் தான் பேய்த் தேவனின் உருவம்.





கள்ளிக்காட்டு இதிகாசத்தின் இந்த நாயகனின் வழியே தெற்கத்தி மாந்தர்களின் அசல் முகங்களை பிரதிபலித்த கவிஞர் இன்று இலக்கியத்தில் அடைந்திருக்கும் உச்சபட்ச அங்கீகாரம் தான் ஞானபீீடம், ஆனால் அது குறித்து கவிஞர் வண்ணநிலவன் கருத்து இது :

 வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாடமி விருது வாங்குவதற்காக, விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தார். 

நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார். அந்த ஆண்டு விருதுக் குழுவில் வல்லிக்கண்ணன் தான் இருந்தார். வண்ணநிலவனை வல்லிக்கண்ணன் என்று நினைத்துக் கொண்டு பழத்தட்டுடன் என்னைப் பார்க்க வந்தவர் தான் இந்த வைரமுத்து. என்கிறார் 

-வண்ணநிலவன்வைரமுத்துவின் சிறுகதைத் தொகுதி ஒன்று வந்த போது அது பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டும் என்று அசோகமித்திரனைப் பெரும் டார்ச்சர் பண்ணியவர் இந்த வைரமுத்து.  இப்போது அசோகமித்திரன் இல்லை.  அதனால் சாட்சி சொல்ல முடியாது.  உயிரோடு இருந்தாலும் அந்த பயந்த பிராமணன் சாட்சி சொல்வார் என்று சொல்வதற்கில்லை.  ஆனால் வைரமுத்து அசோகமித்திரனிடம் மதிப்புரை கேட்டு மிகுந்த நெருக்கடி கொடுத்தார் என்பதை நான் நேரடியாக அறிவேன்.  அதற்காக வைரமுத்து தனக்குக் கொடுத்த பட்டு வேஷ்டியைக் காண்பித்து மிகுந்த கைப்புணர்வுடன் பேசினார்.  அசோகமித்திரனின் இயல்புக்கும் அவர் இருந்த இடத்துக்கும் வைரமுத்து போன்ற ஒருவரைப் பகைத்துக் கொள்ள முடியுமா?  அதனால்தான் இதோ அதோ என்று தள்ளிப்போட்டு கடைசியில் வைரமுத்துவின் நெருக்கடி தாங்க முடியாமல் எழுதிக்கொடுத்தார்.  இது குறித்து அசோகமித்திரன் எவ்வளவோ வருத்தப்பட்டு என்னிடம் பேசியிருக்கிறார். இப்போது வண்ணநிலவன்.  தேர்வுக் குழுவில் வண்ணநிலவன் இல்லை என்று தெரிந்ததும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போனதுதான் சிறுகதை போல் உள்ளது. 

காரியம் நடக்க வேண்டுமென்றால், “என்ன வேண்டுமானாலும்” செய்வார்கள் போலிருக்கிறது!

இலக்கியம் இம்மாதிரி கழிசடை விஷயங்களுக்கு நேர் எதிரானது "   என சாருநிவேதிதா கருத்து 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...