திமுக மாணவர் அணி
ராஜீவ்காந்தி பதவியைப் பறித்த. காரணம் என்ன ?
திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் காந்தி பதவி நீக்கம் குறித்து திமுக பொதுச்செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து. கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனவும் மற்றொரு அறிக்கையில், “திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ. வீரமணி என்பவர் திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், திமுகவின் முக்கிய பிரிவான மாணவரணியின் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்ட ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கிய தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என வழங்கியுள்ளது. பெண் விவாகரமும், கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு முட்டி மோதியதுமே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்கிறனர்.
விபரம் தெரிந்த பலர்,
நாம் தமிழர் கட்சியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் தி.மு.க விற்கு வந்த ராஜீவ் காந்தி. தொடர்ந்து தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் பேசி வந்தார். துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தினார். அதன்மூலம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குக்கு நெருக்கமானவராக மாறி பின்னர் தி.மு.க-வின் பேச்சாளர்களில் ஒருவராகவும் வந்தார்.
கடந்த ஆண்டு தி.மு.க-வின் மாணவர் அணியின் செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது தி.மு.க தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு மாணவர் அணியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்த நிலையில் இவர் குறித்து தொடர்ந்து தி.மு.க தலைமைக்குப் புகார் சென்றதன் தொடர்ச்சியாக கடந்த பத்து நாள்களுக்கு முன்பாக இவரது பதவிக்கு ஆபத்து என்கிற தகவல், தி.மு.க மேல்மட்டத் தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்த நிலையில், மாணவர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி நீக்கப்பட்டு, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க வில் நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில்
`கட்சிக்கு வந்தபோது கொள்கைக்காகச் செயல்படும் கொள்கைவீரர் போல ராஜீவ் காந்தி இருந்தார். ஆனால் அடுத்த சிலமாதங்களிலேயே அவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜீவ்காந்தி , இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அந்த மாவட்ட அமைச்சரும் இவரும் ஒரே ஜாதி என்பதால் அவரும் ஆரம்பத்தில் ராஜீவ் காந்திக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்தார். ஒருகட்டத்தில் போக்குவரத்துத் துறையில் சத்தமில்லாமல் ராஜீவ் ஒரு ராஜ்யம் நடத்தும் அளவு செல்வாக்குடன் இருந்து வந்தார்.
தி.மு.க-விற்காக பல மேடைகளில் ஏறி களமாடினார். தலைமை கவனிக்கும் அளவுக்கு முக்கிய முகமாகவும் மாறினார். அதுவே அவருக்கு சிக்கலாகவும் மாறத் துவங்கியது.
போக்குவரத்துத் துறைக்கு புதிய அமைச்சர் வந்த பிறகு அவருடன் ராஜீவ் காந்தி இணைந்து போனார். இதற்குப் பின்னால் துணை முதல்வர் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகிய இருவருடன் ராஜீவ் காந்தி காட்டிய நெருக்கமே இவரை பிற அமைச்சர்கள் மத்தியில் இணையவும் வைத்தது.
இவர் மனைவியின் ஊர் கோயம்புத்துார் என்பதால், தற்போது குடும்பத்துடன் கோயமுத்தூர் குடிபெயர்ந்தார். அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடவும் ராஜீவ் காந்தி திட்டமிட்டார். கோயம்பத்தூர் மண்டலத்திற்கு பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அவருடனே இவர் ஒரு கட்டத்தில் மோதல் போக்கைக் கையாண்டார்.
தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது.
மற்றொரு தகவல் கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலருக்கும் இரவு
நேரத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வழியாக தேவையற்ற முறையில் மெசேஜ் செய்திருக்கிறார். அவர்கள் சொல்லிப் பார்த்தும், இவர் நிறுத்தவில்லை. அதையடுத்து அந்தப் பெண் நிர்வாகிகள், இந்த விவகாரம் குறித்து மேலிடத்துக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
மற்றொருபுறம் செந்தில் பாலாஜியும் கோயம்பத்தூரில் தனி கவணம் செலுத்தி வருகிறார் ராஜீவ் காந்தி என, முதல்வர் காதில் விஷயத்தைப் போட்டுடைத்தார். சில அமைச்சர்கள், தேவையில்லாமல் பல டெண்டர் விவகாரங்களில் தலையிட்டு, தனக்கு வேண்டியவர்களுக்காக ராஜீவ் காந்தி மோதுகிறார் என தீ பற்றவைத்தனர்.
தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது.ஈரோடு இரத்தினசாமி மகளான வீரமணி ஜெயக்குமார் தற்போது மணவர் அணியின் செயலாளராக நியமனம் .ஆனால் ராஜீவ்காந்தி குறித்து தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் வரவே, அவருக்கான பொறுப்புகளை முழுமையாக பிடுங்க தலைமை திட்டமிட்டது. அப்படி செய்தால் அது பேசுபொருளாக மாறிவிடும் என்று கருதி, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் எனும் பதவிக்கு அவரை நியமித்துள்ளனர்" என்கின்றனர்.
மாணவர் அணிச் செயலாளர் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் அந்தப் பதவியைப் பிடிங்கியது தி.மு.க தலைமை. புதிய பொறுப்பையும் தனக்கான பாணியிலேயே வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ராஜீவ் காந்தி. "தி.மு.க-வின் முக்கிய முகமாக வரவேண்டியவர் இப்படி அவசரப்பட்டு தனது இருப்பை காலி செய்துகொண்டாரே" என வருத்தப்படுகிறார்கள் மூத்த சில நிர்வாகிகள்









கருத்துகள்