தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் வாக்களித்த என்ஆர்ஐ 3 பேர் கைது
கனடா நாட்டு குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்; குடியுரிமை பெற்ற நாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் சென்றபோது விரல்களில் இருந்த மையால் பிடிபட்டனர்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களித்திருப்பது தொடர்பாக நேற்றிரவு வரை 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தொடர்ந்து வெளிநாட்டினர் கைதாகி வருகின்றனர். தேர்தல் முடிந்த நிலையில் அவர்கள் தமிழகத்திலிருந்து தங்கள் நாடுகளுக்கு செல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர்களின் விரலில் இருந்த ஓட்டு போட்டதற்காக அடையாளத்திற்கு வைக்கப்பட்ட மை அவர்களைக் காட்டி கொடுத்திருக்கிறது.
கையில் மை உடன், வெளிநாட்டு பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களை பிடித்து விசாரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு . அதையடுத்து சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி என சர்வதேச விமான நிலையங்களில், ஈடி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் நேற்று முன்தினம் வரை 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்று மேலும் 2 பேர் கைதாகியிருக்கின்றனர். ஒருவேளை இந்த எண்ணிக்கை அதிகரித்தால் தேர்தல் வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் சேர்த்து வந்த பெரிய சிக்கல் ஏற்படும்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், இலங்கை போர் அகதிகள் மற்றும் லண்டன், பாரீஸ், ஜெனீவா, கானடா என வசிக்கும் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு குடியுரிமை பெற்றவர்கள். ஆனால், இவர்களிடம் இன்னும் இந்திய முகவரியில் உள்ள ஆதார் அட்டைகள் வாக்காளர் அடையாள அட்டை இருந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்தி இவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்திருக்கிறார்கள்.
இவர்கள் அணைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வந்தவர்கள். தகுந்த முறையில் விசாரணை தேவை.
இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS): போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act, 1950): தகுதியற்ற நபர் வாக்களித்தல் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act): விசா விதிமுறைகளை மீறுதல் மற்றும் குடியுரிமையை மறைத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் சமயத்தில் தமிழ்நாடு வந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் வெளிநாட்டினரின் பட்டியலை எடுத்து, அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்து உளவுத்துறையும் காவல்துறையும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். முறையான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடந்தும், இவ்வளவு பேர் எப்படி வாக்களித்தனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஒருவேளை இப்படி சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவருக்கும், தோல்வியடைந்தவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும்போது, அங்கு இத்தனை சட்டவிரோத வாக்குகள் பதிவாகியிருப்பது தேர்தல் முடிவையே கேள்விக்குறியாக்கும்.
தோல்வியடைந்த வேட்பாளர் நீதிமன்றத்தில் 'தேர்தல் வழக்கு' தொடரலாம். நீதிமன்றம் அந்தத் தொகுதியின் முடிவை ரத்து செய்யவோ அல்லது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவோ உத்தரவிட வாய்ப்புள்ளது. எனவே இது சீமான் கட்சிக்குத் தான் சிக்கலாக அமையும் என்று சொல்லப்படுகிறது.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் யாரும் வாக்களிக்க முடியாது, SIR 2026 ன் படி சீர்திருத்தங்கள் செய்த பட்டியல் பிறகு எப்படி வெளிநாட்டினர் வாக்களித்திருக்க முடியும், உள்நாட்டு நபர்கள் வெளிநாட்டில் பாஸ்போர்ட் மூலம் வேலைக்கு சென்றவர்கள் சிட்டிசன் என்ற முறையில் சொந்த ஊர் வந்து வாக்களிப்நது எப்படி குற்றமாகும், இதில் இலங்கை அகதிகள் தான் அயல்நாடுகளில் இருந்து சீமானை ஆதரித்து இந்திய சிட்டிசன் இல்லாத பலர் கருப்புப் பணத்தைத் திரட்டி அமலாக்கத்துறை அறியாமல் வந்து நாதக வின் தலைவரிடம் கொடுத்துச் செல்வதை சிபிஐ அறியும், ஆனால் அவர்களைக் கைது செய்ததா PMLA சட்டப்படி ED எதுவும் நடவடிக்கை எடுத்ததா தெரியவில்லை, ஆனால் அயல் நாடு வாழும் இந்தியக் குடியுரிமை பெற்ற வாக்காளர் வாக்களிக்க என்ன தடை என்பது பலருக்கு தெரியவில்லை. இதில் சிலர் தவெக மீது அவதூறு பரப்பி வருவதை காண முடிகிறது



கருத்துகள்