சிறப்பு செய்திகள் :ரெங்கநாதன் திருப்பதி-
"பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே".......சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம்..பித்தன் எம்பெருமான் ஈசன் பிறையான சந்திரனை சூடியதால் சந்திர தரிசனம் முக்கிய வழிபாடு
சந்திர தரிசனம் கண்டால் தீராத நோய்கள் நீங்கும். வளர்பிறை சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறுகள் நீங்கும். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும் ஏனெனில் சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நகர வாழ்வில் வீட்டில் மாடியில் நின்று மாலையில் வளர்பிறை சந்திரனை மறக்காம மாலை தரிசனம் பண்ணுவது எளிது
சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும்.
கோவிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் பார்க்கலாம். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே இந்த வளர்பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் சிஹாகிரீஸ்வர் திருமுடியை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். வளர்பிறை சந்திரனை தரிசிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும்
அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் சந்திர பகவான் வளர்பிறையாக தனது பயணத்தை துவங்குகிறார். துவிதியை நாளில் மாலையில் சந்திரதரிசனம் என்கிறார்கள் பிறைச் சந்திரனை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதி. ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். சந்திரனே மனதிற்கு அதிபதி. சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.
சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும் ஆயுள் விருத்தியாகும். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திற்கு 6,8,12 ஆம் வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி,ராகு, கேது போன்ற அசுப கிரஹங்களுடன் சேர்ந்தோ இருந்தால் சந்திர தரிசனம் செய்து வணங்குவது தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.
ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலைமையில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திரன் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் ஆகியோர் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும். முற்பிறவி பாவம் போக்கும்.
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.
சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும். பங்குனி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். மாங்கல்ய பலம் பெருகும்.
சந்திரனை தரிசிக்கும் நேரத்தில் கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது. சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனிக்கிழமை வந்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். எனபது ஐதீகம் என்பது ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் வாழ்வில் ஆயிரம் பிறை கண்டவர்களாவர்.விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ள சந்திரமௌலீஸ்வரர் (பிறைசூடிய எம்பெருமான்) கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமாகும். இக்கோவில் அதன் வரலாற்றுச் சிறப்பு, வக்ரகாளி அம்மன் சன்னதி, மற்றும் அதிசயமான மும்முக லிங்கத்திற்குப் பெயர் பெற்றது.சந்திரமௌலீஸ்வரர் (இறைவன் தன் தலையில் சந்திரனைச் சூடியவர்). இங்குள்ள லிங்கம் மும்முக லிங்கமாகக் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்.சிறப்புத் தெய்வம்: இக்கோவிலில் வீற்றிருக்கும் வக்ரகாளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இத்தலத்தில் நடைபெறும் சிறப்பு யாகங்கள் மிகவும் பிரசித்தம். திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய நாயன்மார்களால் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் ஸ்தலமாகும்.சந்திரமௌலீஸ்வரர் (சிவபெருமான்) பூஜை என்பது ஞானத்தையும் மன அமைதியையும் தரும் மிகச் சிறப்பான வழிபாடாகும். காஞ்சி காமகோடி பீடம் மற்றும் சிருங்கேரி சாரதா பீடத்தின் சம்பிரதாயங்களில் இந்த பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. மூலவர்: படிகத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் (ஸ்படிக லிங்கம்) சந்திரமௌலீஸ்வரராக வழிபடப்படுகிறது. ஸ்ரீ சக்கரம்: சந்திரமௌலீஸ்வரருடன் இணைந்து, சக்தியைக் குறிக்கும் 'ஸ்ரீ சக்கரம்' அல்லது மேருவும் வைத்து பூஜிக்கப்படுவது வழக்கம்.வழிமுறை: இந்த பூஜையில் ஆத்மார்த்த பூஜை, அபிஷேகம், அர்ச்சனை, வேத பாராயணம் மற்றும் தியானம் ஆகியவை அடங்கும். மதி என்றால் சந்திரன் (அறிவு) ஆதி என்றால் சூரியன் இரண்டும் தான் நமது பூமியின் சுழற்சி. வாழ்வின் சுழற்சி.
.jpg)



.jpg)



கருத்துகள்