முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகி டாக்டர் விஜயகுமார் ரெட்டி

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகியாக அப்பல்லோ மருத்துவமனை தொழிலதிபர் விஜயகுமார் ரெட்டி நியமனம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், 2026 மே மாதம் 7 ஆம் தேதி , அன்று மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ், சங்கத்தின் விதிமுறைகளின் படி அனுப்பப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். சென்னையில் உள்ள புகழ்பெற்ற செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நிர்வகித்து வரும் ' ராஜாசார் வாரிசு முத்தையா செட்டியார் பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளி' (Kumara Rajah Muthiah School of Traditional Arts and Crafts) என்ற பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் தற்காலிக நிர்வாகியாக,  தொழிலதிபர் பி. விஜயகுமார் ரெட்டியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சங்கத்தின் செயலாளரான மீனா முத்தையா கடந்த மே 2, 2026 ஆம் தேதி அன்று காலமானதை அடுத்து இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டது.

தொழிலதிபர் அய்யப்பன் எனும் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, அவரது மனைவி கீதா முத்தையா மற்றும் 5 நபர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில், சங்கத்தின் புதிய செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்குப் பதிலாக, சங்கத்தின் உறுப்பினர்களான கே.டி.ஆர். ராஜா கருப்பன் செட்டியார் மற்றும் சி. சொக்கலிங்கம் ஆகியோர் தன்னிச்சையாக மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட முயல்வதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.



இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், மே 7, 2026 ஆம் தேதி அன்று மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ், சங்கத்தின் விதிமுறைகளின்படி (Bylaws) அனுப்பப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டார்.

"சங்கப்பதிவு சட்டத்தின் விதிமுறை 22-ன் படி, மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் செயலாளருக்கு முறைப்படி கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால், செயலாளர் இல்லாத நிலையில், இரு தனிநபர்கள் தன்னிச்சையாக இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். விதிமுறைகளின்படி, கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே தெளிவான அறிவிப்பு (Notice) தரப்பட வேண்டும். இது நோட்டீஸ் அச்சிடப்பட்ட தேதியைக் குறிக்காது, மாறாக உறுப்பினர்களுக்கு அது கிடைத்த தேதியிலிருந்து கணக்கிடப்பட வேண்டும். இந்த விதியும் இங்கு பின்பற்றப்படவில்லை.



செயலாளரின் மறைவு மற்றும் பொருளாளரின் ராஜினாமா போன்ற அசாதாரணமான சூழலில், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு (General Body) மட்டுமே உண்டு. இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறி அவசர அவசரமாகச் செயல்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை" என்று நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.


தொடர்ந்து ராஜா கருப்பன் செட்டியார் மற்றும் சி. சொக்கலிங்கம் ஆகியோர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தை நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், அவர்கள் பள்ளியின் அன்றாட செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் தலையிடக் கூடாது.    இடைக்கால ஏற்பாடாக, பள்ளி எந்தவிதத் தடையுமின்றி சுமூகமாக இயங்குவதை உறுதிசெய்ய, மேலாண்மைக் குழுவின் தற்போதைய தலைவராக இருக்கும் பி. விஜயகுமார் ரெட்டி, சங்கத்தின் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அனுபவமும் அறிவும் சங்கத்தை வழிநடத்தச் சரியானதாக இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கக் கூடாதுனு ராஜாசார் படடம் பெற்ற கொத்தமங்கலம் அண்ணாமலை செட்டியார் மறுக்க ஆள்மாறாடடம் செய்து பெற்ற சா.அண்ணாமலை செடடியார் குடும்பம் பலவகையில் தற்போது நீதிமன்றம் மூலம் சாட்டையடி பெறுகிறது 1920 க்கும் 1957 க்கும் இடைப்பட்ட காலத்தில் அண்ணாமலை செட்டியார் கதை மிகவும் கந்தலானது பொது வெளியில் மறைக்கபபடடது,  தற்போது பிள்ளை வந்த வாரிசு ஐயப்பன் போன்ற நல்லவர்கள் சிலரால் அது சிறப்புப் பெறுகிறது வாழ்த்துக்கள், கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு  பால் காசு பாலோடு தண்ணீர் காசு தண்ணீருடன் அது போல கடந்த தலைமுறை மோசடி இந்தத் தலைமுறை தடுமாறுகிறது, பல்கலைக்கழகம் ஏற்கனவே பறிபோனது, இது வரலாறு திருப்பும் காலம் செட்டியார் சொத்து தறபோது ரெட்டியார் கையில் நாளை..  காத்திருப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...