முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இன்று மே மாதம் 25 ஆம் தேதி மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு .
சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பணியை கவனித்த மகேஸ்வர் தயாள் காவல் நிர்வாக ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் அருண் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர் முக்கிய பொறுப்பை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
மேலும், மகேஸ்வர் தயாள் கவனித்த சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பணியை டி.எஸ்.அன்பு வசம் கொடுத்தது தமிழக அரசு.
காவல் துறையில் இந்த முக்கிய மாற்றங்களை அரசு தற்போது மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது அதோடு தென்மண்டலத்தில காவல்துறை ஆய்வாளர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாகவே காவல்துறை ஆய்வாளராக அமர்த்தப்பட்டு இருந்தவர்களை ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு,தமிழ்நாடு தென்மண்டல காவல்பணியில் நிர்வாக நலன் கருதி 94 காவல் ஆய்வாளர்கள் உடனடிடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு. உடனடியாக பணியிடமாற்றம் அமலுக்கு வந்துள்ளது. திருநெல்வேலி சரக பணி மாற்றங்கள் இதனுடன் சேர்த்து நிர்வாக நலன் கருதி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு 38 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி தேஷ்முக் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார்.தொடர்ச்சியாக காவல்துறை அலுவலர்களின் பணி இடமாற்றம்




கருத்துகள்