முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடக முதல்வரை மாற்ற காங்கிரஸ் தலைமை தீவிரம், சிவக்குமாருக்கு வரப்போகும் வாய்ப்பு

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் முதல்வர் பதவியை விட்டு சித்தராமையா செல்ல வேண்டும் என்று விரும்புகிறது


இந்த மாற்றம் சுமூகமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முதல்வர் இந்த யோசனையை பரிசீலிக்க கால அவகாசம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பாக வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் தலைமைத்துவத்திற்கான அனைத்துப் போட்டிகளுக்கும் மத்தியில், மாநிலத்தில் மாற்றம் ஏற்படுவதையும், கட்சி அமைப்பு மற்றும் அரசாங்கத்தை மறுசீரமைப்பதாக, காங்கிரஸ் மேலிடம் செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், முதல்வர் பதவியிலிருந்து விலகி, புதிய தலைவராக சிவக்குமாரை அமர்த்த வழி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்புகிறது.





மாற்றம் சுமூகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இந்த யோசனையை பரிசீலிக்க முதலமைச்சருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும்  அவரை மூத்த அரசியல் வாதி என்பதை மதித்து, காலக்கெடுவை நிர்ணயம் செய்யவில்லை எனவும் கூறப்படுவதால், இதில் அதிர்ச்சியடைந்த முதல்வர் சித்தராமையா, பெங்களூரு செல்வதற்கு முன், டில்லியில் நடந்த இரவு விருந்தில், தனக்கு விசுவாசமான அமைச்சர்களிடம், விரைவில், காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கொண்ட கட்சிக் கூட்டத்தை கூட்டி, பதவி விலகுவது குறித்து, அறிவிப்பேன். துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்ற நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மாநில த்தலைவர்கள் சித்தராமையாவை ஆதரித்து, அனைத்து விருப்பங்களையும் கூர்ந்து கவணித்து மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், வரும் நாட்களில் கர்நாடக அதிகாரம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காங்கிரஸ்,கட்சி சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகியோருடன் ஆறு மணி நேரம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதில லிங்காயத்துகள் சார்பாக சித்தராமையாவையும், ஒக்கலீக கௌடாக்கள் சிவக்குமார் தரப்பு என இரு தரப்பிலும் அரசியல் பலப்பரிட்சை நடக்கிறது.



கர்நாடகாவில் தற்போதைய முதல்வர் சித்தராமையா மாற்றப்பட்டு, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி சித்தராமையா பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரம்  கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுப்பது குறித்து டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரிடமும் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர், பதவியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையாவுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் பதவியும், அவரது மகன் யதீந்திராவுக்கு கர்நாடக துணை முதல்வர் பதவியும் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, துணை முதல்வர் சிவ குமார் இடையில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க,  இருவரையும் டில்லிக்கு அழைத்தது. நேற்று முன்தினம் இரவே, இருவரும் தனித்தனி விமானங்களில், தங்கள் ஆதரவாளர்களுடன் டில்லிக்கு பயணித்தனர். டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு நேற்று காலை சென்ற முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் ஆகியோர் வரவேற்று தனி அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் இருந்தார்.அவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பட்டியல் அட்டவணை சமூகத்தவர் ஆக மூன்று பேரும் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் சிவ குமாருடனுடன் தனியாக ஆலோசனை செய்தனர். பின், சித்தராமையா, சிவகுமார் இருவரையும், நேருக்கு நேர் அமர வைத்தும் பேசினர்.  லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுலும் அங்கு வந்தார். சித்தராமையாவை தனி அறைக்கு அழைத்துச் சென்று,       அவரிடம் அரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின், ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார். சித்தராமையா, சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கட்சி அலுவலகத்திலேயே மதிய உணவு உண்டனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே தவிர மற்ற நான்கு பேரும். வெளியே வந்தபோது சிவகுமார் சிரித்த முகத்துடன் காணப்பட்டார்; சித்தராமையாவின் முகம் இறுகிய நிலையிலிருந்தது.


ஆலோசனைக்கு பின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில், “கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவில் எம்.பி.,யாக உள்ள நான்கு பேரின் பதவிக்காலம், கர்நாடக மேல்சபையில் ஏழு பேரின் பதவிக்காலம் முடிவதால், தேர்தல் நடக்க உள்ளது. வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம். மற்ற எந்த விஷயம் பற்றியும் பேசவில்லை. ஊகங்களுக்கு இடமில்லை,” எனக் கூறினார். சித்தராமையா, சிவகுமார் இருவரும் ஊடகத்தினரைச் சந்திக்காமல், தனித்தனிக் காரில்  சென்றனர். இதையடுத்து, சித்தராமையாவும், சிவகுமாரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே, ராகுலும், சித்தராமையாவும் தனியாக ஆலோசனை நடத்திய போது, என்ன பேசினர் என்பது குறித்து தகவல் வெளியாகியது. 'நீங்கள் எட்டு ஆண்டுகளாக முதல்வராக சிறப்பாகப் பணியாற்றி உள்ளீர்கள். உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி, தேசிய அரசியலுக்கும் தேவை. நீங்கள் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தால், உங்களை ராஜ்யசபா எம்.பி., ஆக்குவதுடன், உங்கள் மகன் யதீந்திராவை கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் ஆக்குகிறேன்' என, ராகுல் காந்தி உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. முதலில், இதை ஏற்க மறுத்த சித்தராமையா, பின் ஒருவழியாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எப்படியும் இன்னும் சில நாட்களில், முதல்வர் பதவி விவகாரத்தில், கட்சி மேலிடம் ஒரு முடிவு எடுப்பது உறுதி எனத் தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...