மீண்டும் புதுவை முதல்வரானார் ரெங்கசாமி.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேச 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் என்.ரெங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பாரதிய ஜனதா கட்சி 4 தொகுதியிலும், அ.தி.மு.க ஒரு தொகுதியிலும்,ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது
30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாண்டிச்சேரி சட்டப்பேரவைக்கு, ஆட்சி அமைப்பதற்கு 16 தொகுதிகள் தான் தேவை. ஆகவே 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றக் குழு கூடி அதன் தலைவராக என்.ரெங்கசாமியை தேர்வு செய்தனர்.
பாண்டிச்சேரி 2026 சட்டப்பேரவைமுதல்வர் என்.ரங்கசாமி பெற்ற மொத்த எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார், குடியரசுத்தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையைடுத்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர்.
ஆன்மிகம், ஆருடம், நல்ல நேரம் அகியவற்றில் அதீத நம்பிக்கை உடையவரான என்.ரங்கசாமி, பதவியேற்புக்காக தன்னுடைய ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தை ஆளுநர் மாளிகைக்கு தெரிவித்தார். அதையடுத்து பாண்டிச்சேரி ஆளுநர் மாளிகை லோக் நிவாஸ் நேறறு காலை 9.47 மணிக்கு என்.ரெங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்றுக் கொள்வார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில்
பாண்டிச்சேரி சட்டப்பேரவையில் 5-வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் என். ரெங்கசாமி, 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாண்டிச்சேரி சட்டப்பேரவைக்கு, ஆட்சி அமைப்பதற்கு 16 தொகுதிகள் தேவை. அதன்படி 18 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றக் குழு தலைவராக என்.ரங்கசாமியைத் தேர்வு செய்தனர்.நேற்று
காலை 9.33 மணிக்கு லோக் பவன் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார் என் ரெங்கசாமி. அதன் தொடர்ச்சியாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனும் மேடைக்கு வந்தார். முதலில் வந்தே மாதரம் பாடலும், அதற்கு அடுத்து தேசிய கீதமும், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அதையடுத்து முதல்வர் என்,ரெங்கசாமிக்கு பதவிப்பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமானமும் செய்து வைத்தார் ஆளுநர் கைலாஷ்நாதன்.
தொடர்ந்து முதல்வர் ரெங்கசாமி கையெழுத்து போடுவதற்கான கோப்பு அங்கு வைக்கப்பட்டது. ஆனால் அதில் அவர் கையெழுத்துப் போடவில்லை. அதற்கு முன்பு தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியிடம், `நம்ம நேரம் வந்துடுச்சா…?’ என்று கேட்டார்.அப்போது இல்லை என்று சொன்ன அந்த உயர் அதிகாரி, 9.45 நிமிடங்கள் தான் ஆகிறது என தன்னுடைய செல்போனைக் காட்டினார். அதையடுத்து அங்கிருந்த கோப்புகளை சரிபார்த்தவாறு, நேரத்தைக் கடத்தினார்.
அதன்பிறகு மீண்டும் தன் பாதுகாப்பு அதிகாரியின் செல்போனில் 9.47 என்று மாறிய பிறகு கையெழுத்து போட்டார். அவரைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் நமச்சிவாயமும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணராவும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.



கருத்துகள்